Thursday, August 26, 2021

இந்த வாரத்தலைப்பு " புடவை"

 


 பெண்களின் முதல் தேடல் புடவை

ஆண்களின் முதல் தேர்வு புடவை


புடவை


உன்னை உடுத்துவதால் மகிழ்ச்சி 

நீ எங்களை விட்டு விலகாததால் 

விலகி இருந்தாலும் சற்றே அதிலும் 

பிறக்கிறது கவர்ச்சி 

கவர்ச்சிக்கு மட்டுமல்ல நீ எங்களின் கனவு

கனவு சில நேரங்களில் மறக்கும் ஆனால்

நீ மட்டும் மறையாமல் மலர்கின்றாய் 

மலராய் மனதில் உதிக்கிறாய் 

நீ உதிக்கும் வண்ணங்கள் யாவும்

நீங்கா வண்ணமாய் இருக்கிறாய் மனதில் 

மனதால் தேடித் தேடி உன்னை பிடிக்க வைத்தாய் 

பிடித்த உன்னை பிறரின் பார்வை

ஈர்க்கவில்லை என்றால் மனதால் வலுவிழக்கிறாய் 

வலுவிழந்த நெஞ்சோடு அடுத்தவரால் 

தீண்டப்பட்ட நீயும் எங்களால் கவரப்படுகிறாய்

கவரப்பட்டு உன்னை நாங்கள் தேடும்போது

கண்ணாமூச்சி காட்டி காணாமல் போகிறாய்

காணாமல் போனாலும் பரவாயில்லை நீ 

முப்பது வருடங்கள் கழித்து மறுபடியும் 

பிறவி எடுக்கிறாய் 

மறுபடியும் பிறவி எடுக்கும் உன்னை அணைக்கும் போது 

மீண்டும் ஆர்வமாய் எங்களால் ஆட்கொள்ளப் படுகிறாய்


மானம் காப்பாற்ற வருகிறாய் - சிலநேரம்   

தன்மானத்துடன் பிறக்கிறாய் தூளியாகவும் ஆடுகிறாய் 

கந்தல் துணி ஆகவும் மாறுகிறாய் 

உன் ஜோடி ரவிக்கையுடன் வலம் வருகிறாய் 

கடைகளில் வற்றாத நதியாகிறாய் 

பாந்தமாக அடுத்தவரிடம் தஞ்சம் அடைகிறாய்  

உன்னை பற்றுபவருக்குஉரிமை ஆகிறாய் 

பயணிக்கும் போது நீ ஒதுங்கி கொள்கிறாய்

சாமானியர்களுக்கு பருத்தி உடையாகவும்

பணக்காரர்களுக்கு பட்டாடையாகவும் இருக்கிறாய்

சில நேரம் இடம் மாறுவதும் உண்டு சீதோஷ்ண நிலையால் 

ஓய்வின்றி உழைக்கிறாய் தறியில்

 எங்கள் வீட்டில் திரைச்சீலை ஆகிறாய் 

சண்டையிட்டு வாங்கினாலும் பெண்களின் 

ஜீவன் ஆகிறாய் 

ஏழைப் பெண்களுக்கு கடனிலும் விற்கபடுகிறாய் 

சில நேரம் இரவல் பொருளாகவும் இருக்கிறாய்  

இந்திய பெண்களின் அங்கீகாரம் ஆகிறாய் 

உடுத்துவதில் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறாய் 

மென்மையாக வருடும் கணவர் போல

என் மேனியை சிலிர்க்க வைக்கிறாய் 

மாயமில்லை மந்திரமில்லை உன்னிடம் 

ஆனால் எங்களை மயக்குகிறாய் 

கடைகளின் பெயர்களால் பேசப்படுகிறாய்

கடை பொம்மை உடைத்திருந்தாலும் வாங்க தூண்டுகிறாய் 

விலை மீது விலை வைத்துக் சொன்னாலும் 

உன்னை அடையாமல் நாங்கள் ஓயமாட்டோம்

                                        - Veena Shankar 



-Akhiladevi Kumaran 


புடவை என்றவுடன் ஞாபகம் வருவது தாயின் வாடை,

நாம் நழுவவிட்ட பழக்கத்தால்,

நம் குழந்தைகளுக்கு இல்லை அந்த பாக்கியம்.


தொட்டிலில் தாயின் கதகதப்பை தந்த என் அருமை தோழியே...

அங்கே தான் உல்லாசமாக கலவைகளின்றி உறங்கி உன் மடியில் கனவுகள் கண்டேன்..

அறியா வயதில் உன்னை உடுத்தி விளையாடத பூஞ்சிட்டுகள் இல்லை..

பூப்போன்ற உன்னை அள்ளி அனைத்தவுடன் பல வண்ண கனவுகளுடன் பட்டாம்பூச்சி காற்றில் மிதப்பது போல் மனம் பறக்கும் ..

தென்றல் காற்றில் நீ பறக்க என் மனம் பதபதக்கும்..

மழைச்சாரலில் உன்னுடன் நடந்து பேருந்தில் மழைத்துளி சொட்ட சொட்ட நனைந்த நேரம் தேனாக இனிக்கிறது..

என்றும் உன்னுடன் கைக்கோர்த்து இந்த உலகை உலா வர காத்திருக்கும் உன் அருமை காதலி!!!

                                     - Vidhya Nivash 





Thursday, August 19, 2021

இந்த வாரத்தலைப்பு "திருக்குறள்" by Vedavalli Ramani

 


 திருக்குறள் பற்றி மறந்து யோசித்து நினைவில் வந்ததை சொல்லறேன் .தப்பு இருந்தால் சொல்லவும்.

1.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

கருத்து அன்புள்ளவர்கள் பிறர்க்கு எல்லாம் கொடுப்பார்கள்.அன்பில்லாதவரகள் எதுவும் பிறர்க்கு கொடுக்க மாட்டார்கள்.

2.இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்.

கருத்து நமக்கு கெடுதல் செய்தவர்க்கும் அவர்கள் பாடும்படி நல்லது செய்யணும்.

3.தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.

தொட்டணைத்து ஊரும் மணல் கேணி மாந்த்தர்கு கற்றனைத்து ஊரும் அறிவு.

கருத்து.கிணற்றில் தூறு எடுக்க எடுக்கத்தான் தண்ணீர் ஊறி வரும் அதுபோல் மக்களுக்கு படிக்க படிக்கத்தான் அறிவு வளரும்.

இந்த வாரத்தலைப்பு "திருக்குறள்" by Vidhya Nivash

 


நட்பும், நன்றிக்கடனும்


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

என்ற திருக்குறளுக்கு ஏற்றாற்போல வாழ்க்கையில் பல விதங்களில் அனுபவித்திருக்கிறேன். மொழிதெரியாத ஊரில் சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு வயிற்று உபாதைகளுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தேன் என்றால்?? நான் கேட்கும் முன் வந்து நின்றார்கள் , எந்த வித முன் அறிமுகமும் இல்லாத நண்பர்கள் .மிக நெருக்கமான அம்மா,அக்கா போல் பல உறவுகளில்..🙏🙏 அந்த ஊருக்கு சென்று இறங்கியபோது யாரையும் தெரியாது, ஆனால் அங்கிருந்து வரும் பொழுது சொந்தங்கள் போல் தோழிகள் வந்து வழி அனுப்பினார்கள் (ஜகார்த்தா தோழிகள்).


அபுதாபியில் காலில் பட்ட சிறு அடியின் போது 40 நாட்கள் படுக்கையிலே இருந்தேன். விழுந்த அன்றுமுதல் தாய் நாட்டிற்கு செல்லும்வரை ஒரு கை போலே கூட இருந்த தோழிகள். அந்த 40 நாட்களும் வீடு திருவிழா போல இருந்தது .எங்கிருந்து அவ்வளவு புத்துணர்ச்சி வந்தது என்றே தெரியவில்லை. தோழிகள் மட்டுமல்ல அவர்களது கணவரும் கிடைக்கும் நேரத்துல வந்து உற்சாகப் படுத்தினார்கள்.அகிலாவையும் மறக்க முடியாது வீடு தேடி வந்து உற்சாக படுத்தினார்.


கணவரும் ,தங்கையும் சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது.விழுந்த மறுநாளே என் தங்கை வந்து விட்டாள்.இன்னொரு தாய், அவள் ஒரு வாரம் தங்கி இருந்தாள். அவள் கூறிச் சென்ற வார்த்தை இவ்வளவு தான் உனக்கு நண்பர்களா?? இன்னும் இருக்கிறார்களா?? என்று கேட்டாள். கணவர் உனக்கு வந்த சாப்பாட்டை சாப்பிட்டு தான் என்னால் கைலாய மலைக்கு எளிதாக சென்று வர முடிந்தது என்று கூறினார்.அவரும் தோள்கொடுத்து தாங்கினார் .


சமையல் புரிவதற்கு நியமிக்கப்பட்ட சகோதரியும் பலநாட்கள் சமைக்கவே இல்லை எங்கள் வீட்டில் உங்களுடைய நண்பர்கள் மிக அருமை என்று கூறினார். 


நான்கூட இப்படி உதவி செய்து இருப்பேனா ??என்று தெரியவில்லை.

வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது, என்றும் நன்றிக்கடன் பட்டவள் .


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.


சிறுவயதிலிருந்து இக்கட்டான சூழலிலும் ‌கைப்போல் வந்த அனைத்து நண்பர்களுக்கும் பல கோடி நன்றிகள்🙏🙏🙏.

 விடாமுயற்சி மந்திரம்

அடிக்கடி ஒரு வேலையில் சோர்வு ஏற்படும் போது,எடுத்த காரியத்தில் குழப்பம் வரும்போது ஞாபகத்துக்கு வரும் திருக்குறள்   

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

இந்த வாரத்தலைப்பு "திருக்குறள்" by Veena Shankar


 







தெய்வீக காதல் by Veena Shankar

 






Thursday, August 12, 2021

இந்த வாரத்தலைப்பு "தூக்கம்"



மயிலும் மெத்தை மேல் மையல் கொண்டு துயில வந்ததோ

வயிற்று பசியோடு இருக்கும் போது தூக்கம் என்பது கனவு

தூக்கம் துறந்து போயின் துக்கம் விழிக்கும். மனதில் துக்கம் ஆட்கொண்டால் தூக்கம் துறக்கும்.

மழலையின் தாய் மடி தூக்கம்

தாலாட்டு கேட்டபடியே வரும் பிள்ளையின் தூக்கம்

மாணவனின் வகுப்பறை தூக்கம்

தாரத்தின் /கணவனின் அன்பினால் வெளிப்படும் தூக்கம்

பூனையைப் போல் வரும் குட்டி தூக்கம்

அம்மா தலை வருடும்/வாரும் போது வரும் தூக்கம்

விடியலில் கண் விழிக்காமல் சூழும் தூக்கம்

நிலவின் ஒளியில் வரும் மொட்டைமாடி தூக்கம்

தென்றல் வருடுவதால் வரும் தூக்கம்

அசதியால் வரும் மெய் மறக்கும் தூக்கம் 

கடமையாற்றிய பிறகு வரும் ஆனந்த தூக்கம்

பிறர் திட்டும் போது காது கேட்காது போல் நடிக்கும் போது வரும் தூக்கம்

நித்திரை மாத்திரை சாப்பிட்டும் சில நேரங்களில் மட்டுமே வரும் தூக்கம் 

இதையெல்லாம் புறம் தள்ளி சாப்பிட்டவுடன் வரும் அழகான தூக்கம் 

இவையாவும் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் அமையாதது.

                                 - Veena Shankar 

ஏழை மக்களுக்கு பணம் இல்லாததால் தூக்கம் இல்லை.

நடுத்தர மக்களுக்கு எப்படி பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து தூக்கம் இல்லை.

பணக்கார மக்களுக்கு அதிகமாக பணம் இருப்பதால் தூக்கம் இல்லை.

                                - Shruthy

நல்ல தூக்கத்திற்கு எந்த அலங்கரித்த படுக்கையும் தேவையில்லை உடல் சோர்வும், மன அமைதியை தவிர..

தூக்கம் இல்லாத மனிதன் நடைபிணம்..

நினைத்தவுடன் துயில் கொள்ளவதே மிகப்பெரிய பாக்கியம்..

துயிலை தொலைத்து சம்பாரித்த சொத்தை வைத்து துயிற்கு ஏங்கதே..

துயில் இல்லையேல் வேண்டாத விருந்தாளி வருவான்

வேண்டியவற்றை இழப்பாய்..


கனவுலகின் சொந்தக்காரி தூக்கம்..

குழந்தை முதல் முதியோர் வரை அடக்கம் தூக்கத்தில் சிரிக்க, அழுக,நடுங்க,அலற,சமைக்க,குளிக்க,ஓட,ஆட,பாட,பேச அதுவும் வேற்றுமொழியில்,நடக்க... நினைவின்,எண்ணத்தின்,ஏக்கத்தின் மாற்றுமொழியாக தூக்கத்தில் கனவு..

சில நேரம் ஹீரோ,பல நேரம் வில்லன் வர,

சில நேரம் நாய்,பல நேரம் யானை துரத்த,

சில நேரம் துக்க வீட்டில்

பல நேரம் கல்யாண வீட்டில்,

சில நேரம் திருவிழாவில்

பல நேரம் துணிக்கடையில்


பிரிந்தவர் பல நேரம் நேரில் போல் உரையாட...

பல நேரம் கனவிலே சமைக்க கணவர் வந்து எழுப்பும் வரை

பேருந்தை விட்டு பல நேரம் அலைய

பரீட்சைக்கு தாமதமா போவது..

மீண்டும் வகுப்பறையில் தோழிகளுடன்,

பலநேரம் பாதை மறந்து அலைந்து திரிய..

பலவிதமான அனுபவங்களை தந்தாய் தூக்கமே..

கனவு இல்லாத தூக்கம் தான் நல்ல தூக்கம் என்பார்🤔

தூக்கும் முன் அமைதியான, மனதிற்கு இதமானவற்றை பார் கேள்

இங்கு அதுவும் online school 12 மணிக்கு கூட குறுஞ்செய்தி 

தூக்கத்திற்கு முன் பின் கைபேசியின் துணையே!!!

துயிலின்றி துவளாதே மனமே..

மனஅமைதிக்கு பின் தென்றல் வந்து தீண்ட இமைகள் சொல்லாமல் கதவடைக்க உலகமே கொஞ்சம் கொஞ்சமாக மறைய நினைவலைகள் கனவாக மாற துயில் கொள்...

                                  - Vidhya Nivash 




                               - Akhiladevi Kumaran 

Thursday, August 5, 2021

இந்த வாரத்தலைப்பு " எங்கே"

 


எங்கே?

என்னோட "Me Time" எங்கே?😡


Go Corona Go😫😫

                            - Divya 

 எங்கே அவள்?...

காணவில்லை...

தேடினேன் தேடினேன்..

தேடி கொண்டே இருக்கிறேன்...


ஒரு நாள் அவள் -அருகாமையில்...!!..

மறு நாளோ அவள்-

தொலை தூரத்தில்..!!..

சில நாட்களோ அவள்- 

காணாமலே .. போக-

தவிப்பே இங்கே மிச்சம்...!!!...


நிரந்தரமாய் என்கூட வசிக்க ..

என்ன தருவேன் உனக்கு -

என்னை தவிர..!!!!


அவளை பார்த்தால் கூறுங்கள்..

சுதந்திரமாய் காற்றை சுவாசிக்க...அவளை

அரவணைக்க -இங்கே ...

ஓர் கூட்டமே காத்து கிடக்கிறது என்று ...!!..


அவள் பெயர் ஷாந்தி !!!...

ஓம் ஷாந்தி 😭

                                  - Kiruthika 



                           - Akhiladevi Kumaran 

எங்கிங்கோ தேடினேன். எங்கே என்பதற்கு விடை கிடைத்தது விண்மீன்களில்


எங்கே என்பதன் வாழ்க்கை துணை - தேடுதல்


பறவை தேடியது கூடு கட்ட இடம் எங்கே என்று

மரம் தன்னை காட்டி சொன்னது இங்கே என்றது

கேள்வி தேடியது பதில் எங்கே என்று மனம் சொன்னது பதில் உன்னிடமே என்று

உடல் தேடியது

ஓய்வு எங்கே என்று

காலம் சொன்னது 

பொறுமை என்று

மனிதனின் மனம் தேடியது அமைதி எங்கே என்று

கடவுள் கை காட்டினார் கோயிலென்று

இயற்கை தேடியது நீரும் காற்றும் தோற்றது எங்கே என்று உயிர் சொன்னது மனிதனிடம் என்று


பாசம் எங்கே கோபமும் அங்கே

நேசம் எங்கே பரிதவிப்பும் அங்கே

வீரம் எங்கே விவேகமும் அங்கே

வரம் எங்கே சாபமும் அங்கே

கேள்வி எங்கே தேடலும் அங்கே

வேள்வி எங்கே பலனும் அங்கே

பகை எங்கே பாராட்டும் அங்கே

ஈகை எங்கே பிச்சையும் அங்கே

இழப்பு எங்கே கருணையும் அங்கே

தடுப்பு எங்கே குற்றமும் அங்கே

மாற்றம் எங்கே விடிவு அங்கே

வெற்றி எங்கே

களிப்பும் அங்கே


 எங்கே எங்கே என்று தேடும் சிறுவர்களின் கண்கள்

பொருட்காட்சியில் ராட்டினம் அப்பளத்திற்காக

எங்கே எங்கே என்று தேடும் பாமரன் கண்கள்

அரசியல் கூட்டத்தில் கிடைக்கும் பணத்திற்காக

எங்கே என்று தேடும் கண்கள் பெண்களுக்கு சேர்த்த பணத்தை ஒளித்து வைப்பதற்காக

எங்கே எங்கே என்று தேடும் கண்கள் விடலை பையன்களுக்கு தங்களுடைய மயிலை எண்ணி மையல் கொள்வதற்காக எங்கே எங்கே என்று தேடும் கண்கள் கன்னி பெண்களுக்கு நீளமான கேசத்தை தேடி பெருமை கொள்வதற்காக

எங்கே எங்கே என்று தேடும் கண்கள் முதியவர்களுக்கு தன்னை காப்பாற்றும் பிள்ளை யாரென்பதற்காக

எங்கே எங்கே என்று தேடும் கண்கள் இறைவனின் அனுதாபத்திற்காக

எங்கே எங்கே என்று தேடும் கண்கள் பக்தர்களின் உண்மையான பக்திக்காக


 நானும் என் தோழியும் உருவ ஒற்றுமையால் மற்றவரை குழப்பிய காலம் எங்கே?

நடைபயிற்சி என்று கோயிலுக்கு சென்ற நடை எங்கே?

நவராத்திரி நேரத்தில் கொலுவிற்கு செல்லும் போது ஏற்படும் மகிழ்ச்சி எங்கே?

பள்ளியில் நமக்கென உருவாக்கிய "க " னா பாதை எங்கே?

கல்லூரியில் மதிப்பெண்களை வகுப்பறையில் சொல்லும் போது இருந்த தவிப்பு எங்கே?

தண்ணீர் லாரியை கண்டவுடன் குடத்துடன் ஓடி தண்ணீர் பிடிக்கும் காட்ச் எங்கே?

தனக்கென தனியாக வாகனம் இல்லாத பயணம் எங்கே?

இன்னும் பல எங்கேக்களை அரங்கேற்ற நினைத்தும் கேட்பவர்கள் எங்கே?

பிள்ளைகளை ஏற்றி செல்லும் ஆட்டோ எங்கே

விளையாட்டு விழா, ஆண்டு விழா எங்கே

குரூப் போட்டோ எங்கே

வகுப்பு போக மற்ற நேரங்களில் பிள்ளைகளின் அரட்டை எங்கே

பள்ளியில் நம் பிறந்த நாள் கொண்டாட்டம் எங்கே 

இப்படி பலவும் எங்கே தான் இந்த கொரானா காலத்தில்

                               - Veena Shankar 

வயதான காலத்தில் அமைதி.பொழுது போக்கு.ஊக்கம் எங்கே எங்கே என தேடும்போது ஆஹா கிடைத்ததே வின்.மீன்கள் துணை.

                                - Vedavalli Ramani 


தினமும் எங்கே எங்கே தேடும் முதல் புத்துணர்ச்சி coffee with mobile phone ☕😀


எங்கே என்று தேடும் TV remote control மற்றவர் வீட்டில் தூங்கும் போது, நம் நேரம் கிடைக்காது ...😃

Mobile app உதவி செய்து இப்ப🤝🏻


என் இளமை எங்கே

என் மகிழ்ச்சி எங்கே

என் கனவுகள் எங்கே

என் வெற்றி எங்கே

வேறெங்கும் இல்லை

உன்னில் தான் தூங்கி கொண்டிருக்கிறது..

உன் முயற்சி எங்கே என்று!!!


 வாழ்க்கை எங்கே ஆரம்பிக்கிறதோ..

அங்கே தான் முடிய காத்திருக்கின்றது...

இதற்கு இடையில் தான் எத்தனை எங்கே???? தினமும் துளைக்கிறது மனதை...


குருவி கூடுகள் எங்கே

மரங்கள் முதலில் எங்கே

அமைதியான சூழலில் காஞ்சனா வீட்டில் மட்டும் அல்ல...

பாலைவன வீட்டு பால்கனியில் கூட குஞ்சு பொறிக்க்கிறது பறவைகள்..

காட்டில் எங்கே மரங்கள்

ரோட்டில் எங்கே மரங்கள்

இதே இங்கே பலரின் வீட்டில் பாதுகாப்பாக வளர்க்கிறது...

நல்ல காற்று எங்கே

நல்ல மழை எங்கே

ஆறு எங்கே, குளம்,குட்டை எங்கே...

எப்பேர்பட்ட சூழ்நிலையும் மீண்டும் மாறும்

அனைத்து நீர்நிலைகளும் மாறும் என்பதற்கு சான்று இந்த வீட்டுத்தோட்டங்கள்..

எங்கே எங்கே என்று விடாமுயற்சியுடன் தேடினால் கண்டிப்பாக விடை அங்கே கிடைக்கும்


எங்கே எங்கே என்று தேடி பூத்து போனது கண்கள் 

பேரபிள்ளைகளின் தேகம் தொட ஆசை...

எங்கே இங்க கொஞ்சம் காட்டு பிள்ளைய..

எங்கே அப்பா...சரிய தெரியவில்லை

எங்கே எங்கே தேடியும் சரியா network கிடைக்கில..

எங்கே எங்கே ஆக்ஸிஜன் எங்கே கிடைக்குது...

எங்கே அம்மா ,அப்பா எங்கே..

இங்க தான் கடைத்தெருவிற்கு..

எங்கே அப்பா அது disposal mask துவைக்க கூடாது..

எங்கே அப்பா முகத்தைக்காட்டுங்க...


ரிப்பன் கட்டிய இரட்டை ஜடைகள் எங்கே

தாவணி போட்டவுடன் வரும் முதல் வெட்கம் எங்கே

நான் நடந்து சென்ற சாலைகள் எங்கே

நான் உல்லாசமாக உட்கார்ந்திருந்த ஜன்னல் எங்கே

அம்மா கையில் கிடைக்கும் முதல் தோசை ,காப்பி எங்கே

ஒர் வார்த்தைக்கூட தாங்காமல் வரும் முன் கோபம் எங்கே

ஓ அது கடந்தகாலமோ 🙄

அம்மா பசிக்குது தோசை எங்கே!!!


எங்கே தேடினாலும் கிடைக்காத நேசம்

எங்கே தேடினாலும் கிடைக்காத பாசம் 

எங்கே தேடினாலும் கிடைக்காத அமைதி

எங்கே தேடினாலும் 

கிடைக்காத நம்பிக்கை

எங்கே தேடினாலும் 

கிடைக்காத தூக்கம்

எங்கே தேடினாலும்

கிடைக்காத மகிழ்ச்சி

எங்கே முதலில் உன்னில் தேடு வேறெங்கும் இல்லை

                              - Vidhya Nivash 

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...