Thursday, April 30, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


நடராஜரின் பிம்பமா

ஆடுவதில்?

நீ ஆட்டம் கொண்டால்

பூமியும் பிளவு கொள்ளுமே

வாழ்வில் மேடு பள்ளம் 

உண்டென கொண்டால்

மட்டுமே எதுவும் புலப்படும்

இறையின் பார்வைக்காக ஏங்கும் கண்க


நீரில் உன் பிம்பமா?

நீரலையின் ஊடே

நினைவலைகள்

கண்ட காட்சியின் 

நினைவுகள்

தண்ணீரில் கண்ணாடியாய் 


கண்ணாடியில் உன் பிம்பமா?

அழிக்க முடியாது

உன் நிஜம் நிற்கையில்

அசைந்தால் அசையும்

விரித்தால் விரியும்

எதிரணியின் அமைப்பே தன் கோலம் 


கலைஞனிட த்தில் உன் பிம்பமா?

படைத்தவன் தூரிகையால் 

பல நடன அமைப்புகள்

மேலும் கீழும் 

ஓர் காட்சியே!

திரும்பி திரும்பப் பார்க்க வைக்குதே!


யார் கையில் எது

என்பது சிறப்பல்ல 

எவர் கையில் எது சிறப்பு கொடுக்கும் என்பதே அறிவு!

-Veena 

மனிதன் கையில் மரம் கிடைத்தால்

 சித்திரம்,அது சொல்லும் மந்திரமே

 தந்திரம் தான்,

பட்டதும் தழைக்கும், திகைக்க

செய்யும்,அடி நுனி தெரியா

 ரகசியம்!

- Vidhya 


Wednesday, April 29, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


படுத்துக் கொண்டிருந்த என்னை

நகர பணித்தான்

நகர்ந்து சென்ற என்னை

நடக்க பணித்தான்

நடந்து சென்ற என்னை 

ஓடப் பணித்தான்

ஓடிக் கொண்டிருந்த என்னை

நிற்கப் பணித்தான்

நின்ற போது தான்

அறிந்து கொண்டேன்

நான் சென்றது தொடர் ஓட்டமென்று

தொடர் ஓட்டத்தை

நிறுத்த பணித்தான் 

என்னை படுக்கையிலிட்டு

எதுவும் சாத்தியம் அவனாலே!

அவனே மனித மனம் 


இப்படிக்கு

மனிதக் (குரல்) குமுறல்


 சகதியில் மூழ்கினால் கூட ஓராயிரம்

கதை சொல்லும் 

இளமைபருவம்


இரவு அல்ல அது

எங்கும் இருள் சூழ

இரவிலும் நிலா வெளிச்சத்திலும்

விளையாடும் கூட்டத்தின் மத்தியில் இல்லை பாகுபாடு நிரந்தரமாய்

வீட்டிற்கு ஓர் நிலவு

கொண்டால் கூட அதிசயம் இராது வருங்காலத்தில்

இருப்பினும் விளையாட்டு மட்டுமே தனித்து

இருக்கும் அவரவர் கையில் 

உலகம் அடக்கம் என்பதால்

சிந்திக்க ஒன்று

செயல்படுத்த ஒன்று

வஞ்சிக்க ஒன்று

வாரி அணைக்க ஒன்று

என பிரிந்து நிற்பவை

சேரும் நாளும் நேரமும் அறியாது

நகைத்திருப்போம்

நன்றாய் வாழ்வோம்

வஞ்சகம் ஒழிப்போம்

வசந்தம் வரவேற்போம்

-Veena

சேற்றில் விளையாட சொறிசிரங்கு

 என்றனர் இன்று அதற்கு ஒரு

 பெயர் வைத்து தேகத்திற்கு நன்று

 என்று விற்கின்றனர்.

மண்ணில் புரண்டவனுக்கு நோய்

 அண்டாது ,தன் உடம்பையும்

 மண்ணையும் ஆள்வான்..

அள்ளி அள்ளி துள்ளி துள்ளி

விளையாடிய காலம்,குழந்தை

 பருவமே வரம் !

- Vidhya 

Sunday, April 26, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


நாவில் நீர் சுரக்கும்

சுவை ஊட்டும் பதார்த்தங்கள்

தட்டில் நிறைய

கண்டதும் நிறைவு கொண்டது

என் மனம்

அள்ளி அள்ளி சுவைக்க

ஆசை தான் - அருமருந்து

கொஞ்சம் கூட எடுத்தால் போதுமே!

வில்லைகள் தான்

 அருமருந்து இங்கே

உயிரும் அதன் வழியே உயிர் பெறுகிறது

- Veena 

நா சுவைக்கும் முன்னே

கண்கள் துவைக்க 

உமிழ்நீர் நாவில் சுரக்க

அமிலம் வயிற்றில் சுரக்குதே

வண்ண கலவை கண்ணுக்கு

 விருந்தாக, தட்டில் காட்சியாக ,

உண்டபின் சொர்க்கத்திற்கு

 இழுக்குமே   ..

உழைப்பு,நல்ல உணவு ,உறக்கம்

அதுவே சொர்க்கம்!

- Vidhya 

சிந்தனை துளி by Veena Shankar

 


ஒரு குப்பிக்கு ஒரு குப்பி 

இலவசம் என்றான்

மது விற்பனையாளன் 

ஒரு குப்பி மதுவுடன் 

ஒரு குப்பி தண்ணீர்

இலவசம் என்பதால்

தண்ணீருக்காக சென்றேன் அங்கே

மதுவை விடுத்து தண்ணீரை 

பத்திரப்படுத்தினேன் குடிநீர் கிடைப்பது கஷ்டம் என்பதால் 

தாகம் கொண்டதால்

தண்ணீர் குடித்தேன் 

தாகம் தீர்ந்தேன்

எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு துளி மதுவை குடித்தேன்

என்னையே மறந்தேன்

எதுவும் தன்னாலே மறைந்து தீர்ந்ததாலே !


இப்படிக்கு 

மதுவை முதன் முதலில் குடித்து பழகியவன்

Wednesday, April 22, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 




நாவின் வலியை எவர் அறிவார்?

 மனது ஆறுதல் சொல்லும் அடங்கி நிற்க

நாவின் வலிமையையும் யார் அறிவார்?

மனதின் வலி மட்டுமே சொல்லும் அடங்கி நிற்க

சூழ்நிலை அறியாது

விரியும் வார்த்தைகளும்

அடுத்தவருக்கு வலியை மட்டுமே கொடுக்கும்

உன் காயத்திற்கு

அடுத்தவரை இலக்காக்காதே!

- Veena 

இதயத்தை ரணப்படுத்தும்

 வார்த்தையின் பிறப்பிடம் நான்

 என்றும் ,பல பழி பெயரும் உண்டு

 எனக்கு,நரம்பில்லாத நாக்கிற்கு

 மூளை மட்டும் உண்டா எது நல்லது,

 கெட்டது என்று பிரித்தறிய..

 யோசிக்க தெரிந்த உங்களிடம்

 இருக்கும்  என் நண்பனை

 கேளுங்க !

- Vidhya 

Monday, April 20, 2026

பாடம் by Veena Shankar

 


பாடம் 


"கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு" என்பது எவ்வளவு பெரிய உண்மை. ஒருவரின் உணர்ச்சிகளை அறிந்து கொள்வதும் அதன் கண் வரும் விளைவுகளும் அதுவுமே பாடமாகிறது என்பதை கடந்த சில வருடங்களாக பல நிகழ்வுகளால் உணர்கிறேன். 


நேற்று பிறந்த குழந்தை கூட புன்னகைத்துக் கொண்டு நமக்கு பாடம் சொல்லித் தருகிறது. 


 இப்படித்தான் நான் பார்த்து வளர்ந்த பக்கத்து வீட்டு பெண் ஒருத்தி, திருமணமாகி வேறு ஊருக்கு சென்று, ஒரு குழந்தைக்கு தாயான பின் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக கணவனை விட்டு பிரிந்து வாழ்கிறாள்.  

அவளுக்கு தற்போது பத்து வயதில் ஒரு ஆண் பிள்ளை இருக்கிறான்.


 விவாகரத்துக்கு பின் மீண்டும் எங்கள் ஊரிலே தான் வேலைப் பார்த்து வசித்து வருகிறாள். அவள் குடும்பம் வேறு பகுதிக்கு மாற்றலாகி விட்டதால் இந்த பெண்ணை சந்திக்க முடியவில்லை.  


ஒருமுறை என்னைப் பார்க்க வந்தவளிடம் அவள் கணவனைப் பற்றி விசாரிக்க அவன் வேறொரு திருமணம் செய்து கொண்டான் என்று சொன்னாள். இவ்வளவு கஷ்டப்படுகிறாயே ஏதாவது ஜீவனாம்சம் கொடுத்தானா? என்று நான் கேட்க, அவன் யார் எனக்கு ஜீவனாம்சம் கொடுக்க? அவன் பணம் தேவையில்லை. எனக்கு சக்தி உள்ள வரை நான் வேலைப்பார்த்து என் பிள்ளையை காப்பாற்ற எனக்கு தெரியும் என்றாள் மிக தைரியத்துடன். 


 மேலும் அவள் தன் மாமியார் வீட்டில் உள்ளாள். மாமியார் வேலைக்கு செல்கிறார். காலைக்கும் மதியத்திற்கும் அவர் சமைக்க , இரவிற்கு இவள் செய்வாள் என்று கூறினாள். 


மாரியார் நல்லவர் என்றும் ஏதாவது அவர் சொன்னால் கூட தான் ஏதும் விவாதிக்காமல் அவ்விடம் விட்டு சென்று விடுவதாகவும் சொன்னாள்.


மேலும் அவள் பிள்ளையை பற்றி நான் விசாரிக்க, அரசு பள்ளியில் படிப்பதாகவும் மேற்படிப்பும் அரசு கல்லூரியில் சேர்க்க திட்டமிட்டு இருப்பதாகவும் அப்படியும் அவன் விரும்பும் பாடம் தனியார் கல்லூரியில் இருந்தால் அவனிடமே படிப்பிற்காக வங்கியில் கடன் வாங்கி அதனை அவனே அடைக்க சொல்லியுள்ளதாகவும் அவள் சொல்ல , ஒரு நிமிடம் நான் அவள் முன் தலை குனிந்தேன். 


வீடு கட்டுவதற்காகவும் பிள்ளைகளின் படிப்பிற்காகவும் குடும்பத்தின் மருத்துவ செலவிற்காகவும் நான் பெற்ற கடனை எப்படி திரும்ப செலுத்துவது என்று நினைத்துக் கொண்டிருக்கையில் உன் கடனை மட்டும் நீ பார்! உன் பிள்ளைகளின் கல்விக்கடன் உனக்கானதல்ல ! என்று நேரே சொல்லாமல் என் தலையில் புகுத்தி விட்டாள் அவள். 


கணவர் பிரிந்த நிலையிலும் தன் மாமியாரின் அரவணைப்பில் அவள் இருப்பதும் அவரை அனுசரித்து போவதும் இன்றைய நிலையில் மிக பெரியதான ஒரு விஷயமாக எனக்கு தோன்றியது. 


 சூழ்நிலைக்கேற்ப கிடைக்கும் அனுபவ பாடமே எதிலும் சிறந்தது என்பதை நான் அவள் மூலம் அறிந்து கொண்டேன்.

Thursday, April 16, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


ஏந்தும் கரங்கள் தன் 

பசிக்காக மட்டுமல்ல

அடுத்தவரின் பிணி

போக்க கூட இருக்கலாம்.

பிணி என்பது நோய்

என்ற பொருள் அன்றி 

அடுத்தவரின் வயிற்றுப்பசி போக்க கூட இருக்கலாம் தானே?


 ஏதும் கிடைக்கவில்லை என்ற

ஏக்கத்தில் கேட்கும் யாசகம்

ஏந்துபவருக்கு மட்டுமல்ல

கொடுப்பவருக்கும் இழிவே!

எல்லாம் உள்ள நாட்டில்

ஏற்றத்தாழ்வு என்பது சரியோ?

சமநிலை என்பது 

என்று தான் உருவாகும்?

இது மனிதனிடத்து மனதில் 

தோன்றும் சுயநல

 உணர்வே அன்றி 

வேறு காரணம் இல்லை.

சிலவற்றை காரணம் காட்டி 

பலவற்றை இழக்கிறோம்

அன்பும் மனிதநேயமும் கொள்ளும் இடத்தில் 

ஏந்துதல் இருக்காது

கொடுப்பவர் கை மேலும்

பெறுபவர் கை தாழ்ந்தும் இருப்பதாலேயே 

சொல்ல முடியாத ஓர் உணர்வு 

சொல்லும் தன் நிலை

இழிவு என

பணத்தாலும் செல்வத்தாலும் 

மேன்மை நிலை அடைவதை 

விட மனத்தால் ஒன்றிணைந்து

கரம் கோர்ப்பீர் இந்நிலை 

மாற வேண்டி

கரம் கோர்க்கையில் 

பிரிந்திருக்கும் விரல்கள் இணைவது போலே

எவரையும் அழகாய்

மனத்தால் இணைப்போம்

- Veena Shankar 

கொடுத்து கொடுத்து தேய்ந்த

 கைகள் இன்று ஏந்த..

பசிக்காக மட்டும் அல்ல பாசத்திற்கு, 

அரவணைப்பிற்காக, நேரத்திற்கு..

ஏந்தும் எவரும்

 நினைத்திருக்கமாட்டார்கள்

 கொடுக்கும் போது இந்நிலை

 வருமென்று..

- Vidhya 



Tuesday, April 14, 2026

வெகுளித்தனம் வரவேற்கப்படுமா? by Veena Shankar

 


வெகுளித்தனம் வரவேற்கப்படுமா?


எனக்கு திருமணம் ஆகி எட்டு மாதங்கள் ஆகிறது. மறைந்த என் தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க நான் என்னவளை சீர்திருத்த முறையில் திருமணம் செய்து கொண்டேன். வடமாநிலத்தையும் தென்மாநிலத்தையும் இணைத்து நடந்த திருமணம் எங்களுடையது. 


 என்னவள் பிறந்த இடம் எந்த ஒரு வசதியும் இல்லாத குக்கிராமம். பட்டன் போன் மட்டுமே ஒரு சிலருக்கு தெரியும். அதுவும் அவளுக்கு படிப்பறிவும் அவ்வளவாக இல்லை. மொழி மட்டுமே எங்களை இணைத்தது. வேலை நிமித்தமாக நான் வட மாநிலத்திற்கு செல்ல என்னவள் அழகிலும் மொழியிலும் என்னால் கவரப்பட்டாள். இங்கிருந்து புலம் பெயர்ந்த குடும்பம் அவளுடையது என்பது மட்டுமே சிறப்பு. பொருளாதார வசதியும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இருந்தாலும் நான் அவளை இங்கு எந்த குறையும் இல்லாமல் கவனித்து வருகிறேன் .


தற்போது சென்னையில் இருக்கிறோம். நான் வேலைக்கு செல்லும் சமயம் அவள் தனியாக இருப்பாள். ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் நான், அவளுக்கு இன்ஸ்டாகிராம், ஃபேஸ் புக் , வாட்ஸ் ஆப் மற்றும் யூடியூப் வீடியோவை நேரம் இருக்கும் போது காண்பிப்பேன். 


இப்படி தான் ஒரு நாள் நான் குளிக்க சென்ற போது என் போனை எடுத்து என்னவள் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தாள் போல. அப்போது திடீரென்று " ஆ!" என்று என் மனைவியின் சத்தம் கேட்டு அலறி அடித்து வெளியே ஓடி வந்தேன். அப்போது அவள் தலை குப்புற விழுந்து கிடந்தாள். அவளுக்கு என்ன ஆனதோ என்ற பதட்டத்தில் அவளை நிமிர்த்தி, முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை ஆசுவாசப்படுத்திய பின்னரே அவளிடம் என்ன ஆனது என காரணம் கேட்டேன்.


 "ஏங்க! நான் எத்தனை முறை உங்களிடம் சொல்லியிருக்கிறேன் கல்யாணம் ஆகி இங்க வந்த பின் நான் ரொம்ப குண்டாயிட்டேன், வயிறு கூட பெருசா இருக்குன்னு சொன்னேன். நீங்க நம்பவேயில்லை. " என்று வெகுளியாய் சொல்ல, " சரி அதுக்கென்ன இப்ப? " என்று சூடாய் கேட்டேன். 


அதற்கு அவள் 

 " நீங்க போன்ல பார்த்துக்கிட்டு இருந்த யூடியூப் வீடியோவை நானும் பார்த்துக் கொண்டிருந்த போது அதில் வயிறு பெருசா இருந்தா இந்த உடற்பயிற்சி பண்ணுங்க ன்னு ஒருவர் சொல்லி கொடுத்தார். நானும் அதைத் தான் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் எப்படியோ என் கை தவறி தரையில விழுந்துட்டேன்" என்றுமில்லாமல் இதோ இப்படி" என்று தன் வயிற்றுப்பகுதியை தரையில் வைத்து தன் காலை பிடிக்க முயன்றாள் . " அம்மா! தாயே! நீ ஒன்றும் செய்ய வேண்டாம் " என்று சொல்லி அவளை நான் நிறுத்தி பிடிக்க, அவள் வலி தாங்க மாட்டாமல் மேலும் அழ , அவளை திட்டாமல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்.


 அப்போது சில பல கேள்விகளை என்னிடம் கேட்டு பரிசோதனைகளை செய்த அந்த பெண் மருத்துவர் , அவள் மூன்று மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாக சொன்னார்.


 நல்லவேளை இவள் செய்த சாகசத்தில் கருவிற்கு ஒன்றும் ஆகவில்லை என்று நினைத்து , அவளின் வெகுளித்தனத்தை ரசிக்காமல் கண்டித்தேன்.  


சமூக பக்கத்தில் வரும் எல்லாம் சரியானவை என்று சொல்ல இயலாது தானே?

Saturday, April 11, 2026

படமும் கருத்தும் by winmeengal

 


இருமுகம் காட்டின் ஒன்றும் இல்லாமல் போகும்... ஐயோ பாவம்


தக்க நேரத்தில் தோன்றாத 

அன்பும்,

தர்க்க நேரத்தில் 

தோன்றாத 

கோபமும்,

உதவிடுமோ தோழி?

- Akhila


 முகங்கள் பல உண்டு இங்கே

தேவைக்கு மாற்றிக் கொள்ள

இதில் உண்மையான முகம்

எதுவென்ற கேள்விதான்

குழப்பமாய் மனதில்

வியாபிக்கிறது

கரத்தில் உள்ள முகங்கள்

சபையே றா விட்டாலும்

சந்தர்ப்பங்கள் வரும் போது

சுயநலம் கொள்ளும்

பகிரப்படும் வார்த்தைகள்,

காதல், அன்பு, நட்பும்

எல்லாமும் மறந்து போகும்

நீ நீயாய் இருந்

என்பதைக் காட்டிலும்

எதுவும் நிரந்தரமாய் காட்டு

என்று சொல்வதே சிறப்பு


முகமூடி மாற்றினால் மட்டும் என்ன குணம் மாறி விடுமா?


இல்லையே!


மாற்றும் முகமூடியிற்கேற்ப

மாற்றம் கொள்வது

சாத்தியம் கலைஞனுக்கு மட்டுமே!


என்றாலும் உண்மை

இயல்பு மாறாது

வேடம் கலைத்து 

முகமூடி நீக்கிய பின்னால் 


உனக்கு நீயே யாரென்று

தெரியாத போது

அடுத்தவரை குறை சொல்லவும்

விமர்சிக்கவும் எவர் 

கொடுத்தார் உரிமையை?


ஒருவருக்கான வாய்ப்பை

தட்டி பறிப்பதும் 

ஏமாற்றி கைப்பற்றுவதும் 

இந்த முகமூடி எனும்

மாயவலையினாலேயே!


ஓர் உடம்பிற்குள் எத்தனை

முகங்களை பொருத்துவது?

எத்தனை சிந்தனைகளை அடக்குவது?

எத்தனை பாவனைகளை காட்டுவது?


எல்லாம் வீணாகும் ஓர் நாள்

நம் உடல் மண்ணில்

புதையும் வரையில்

எதுவும் இல்லை நம்மிடம் படைத்தவன் முன்னால்

-Veena 

உலகிற்கு கோமாளி

தன்னை யார் என்று அவனுக்கு

 மட்டுமே தெரியும்,

ஒன்றின் நிஜம் மற்றொன்று

 அறியா,

முகமறியா முகவரியற்ற உலகில்

 எதுவும் தேவையில்லை ,

அடையாளம் இரண்டு எது

 வேண்டுமோ பொட்டு கொள்ளலாம்,

எது பொருந்தும் அறுசிகிச்சை

 அறையில்... கண்கள் சிதைந்த

 பின்!

- Vidhya 

Wednesday, April 8, 2026

பயணத்தில் ஓர் காட்சி by Veena Shankar

 


பயணத்தில் ஓர் காட்சி


நானும் எனது கணவரும் கன்னியாகுமரிக்கு செல்ல வேண்டி எங்களிடத்திலிருந்து பேருந்தில் பயணம் மேற்கொண்டோம். ரயில் பயணம் இதற்கு ஏற்புடையதல்ல என்பதாலும் ஒரே பேருந்தில் பயணம் செய்தால் சில மணி நேரங்கள் கூடுதல் ஆகும் என்பதாலும் முக்கிய இடங்களில் இறங்கி ஏறி அடுத்த பேருந்திற்காக தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் காத்து நின்ற வேளையில் ஒரு கார் காரர் எங்கள் பக்கம் வந்து நின்று "திருநெல்வேலி போக வேண்டுமா? வாருங்கள் வெறும் ஐம்பது ரூபாய் தான்" என்றார்.


 சற்று யோசித்து விட்டு இருவரும் ஆமோதித்து, காரின் பின் பக்கம் ஏறி அமர்ந்தோம். ஐம்பது ரூபாய் என்பது மலிவு தான் அதுவும் குளிரூட்டப்பட்ட காரில். அவர் அனுமதியோடு மதிய உணவையும் உண்டோம்.  


போகும் வழியில் ஓர் இடத்தில் கல்லூரி பெண் ஒருவளின் அருகே காரை நிறுத்தி "திருநெல்வேலி போகணுமா? வாம்மா ! ஐம்பது ரூபாய் தான் என்று சொல்ல, அம்மாணவி வர மறுத்தாள். வெயில் அதிகமாய் உள்ளது என்பதை காரணம் காட்டி இருமுறை அவளை வற்புறுத்தியவர் அவள் ஏற மறுத்ததால் காரை அவ்விடம் விட்டு நகர்த்தினார்.


பின் பக்கம் திரும்பி எங்களிடம் "பாருங்க! ஐம்பது ரூபாய்க்கு யாரு திருநெல்வேலிக்கு கொண்டு விடுவார்கள் ? வெயில் வேற அடிக்குது" என்றார். நாங்கள் அவருக்கு மௌனத்தை பதிலாய் தந்தோம்.


 அப்போது என்னவரிடம் எங்கள் மொழியில் "அந்த மாணவி ஏறி இருக்கலாம். அதான் நாம் இருக்கிறோமே ? என்ன பயம்? " என்று நான் சொல்ல, " நீ சொல்வது சரிதான். நாமும் கார் காரரும் கூட்டாளிகள் என்று அவள் நினைத்திருக்கலாம் அல்லவா? அவள் வர மறுத்ததும் சரி தான் " என்றார். ஆம் . நான் எப்படி இப்படி தவறாக நினைத்தேன் என்று யோசித்துக் கொண்டே என் மகளிடமும் இதை கண்டிப்பாக பகிர வேண்டும் என மனதினிலிட்டேன்.  


 எவர் வழியில் எவர் சரி என்பதை கணிக்க முடியாத காலத்தில் நாம் வாழ்கிறோம் என்றும் எண்ணிக் கொண்டேன். ஆனால் கார் காரர் நாங்கள் இறங்க வேண்டிய இடத்திற்கு சரியாக கொண்டு போய் விட்டார் என்பது மகிழ்ச்சி தான் என்றாலும் நானும் அப்பெண்ணை போல் தனியாக நின்றிருந்தால் காரில் ஏறி இருக்கமாட்டேன் என்பது தான் உண்மை .

Tuesday, April 7, 2026

படமும் கருத்தும் by winmeengal



 அம்பேத்கர் உயரவில்லையா?

அப்துல்கலாம்

சிறப்பு அடையவில்லையா?

சாதாரண சித்தாந்தன் கெளதம புத்தன் ஆகவில்லையா?

முடியும்!முடியும்!முடியும்!-என்று உரக்கச் சொல்லிக் கொள்ளுங்கள் உங்களுக்குள்💯பாறையின் இடுக்கே கூட வேரூன்றி வளரும் இம்மரத்தைப் போல - விடாமுயற்சியும் நம்பிக்கையும்

நேர்மறைச் சிந்தனைகளும் நமக்குள்ளும் வேரூன்றச் செய்திடுவோம்🩷

-ரேவதி சக்தி


எவர் எதை தாங்க, 

இடம் கொடுத்தவருக்கு உயிரை கொடுக்க ஒன்று,

தன்னை நம்பி வந்தவனுக்கு தன் பலத்தை,அடையாளத்தை விட்ட ஒன்று,

இதில் எது பெரியவர் என்ற அலங்காரம் அழிய குணத்தால் உயர்ந்த இருவர்,

இவர்களை யாரும் தொந்தரவு செய்யாவிடில் பல உயிருக்கு பாலமாகும் இந்த நட்பு!

-Vidhya Nivash


உயர்ந்தவர் யாரென்ற

தர்க்கம் இல்லை

ஒருவரை ஒருவர்

மதிக்க தெரிந்த இடத்தில்

பாறையிலும் நீர் சுரக்கும்

மரத்திலும் வலிமை இருக்கும்

ஒருவரின் குணம்

மற்றவர் அறிந்த போதும்

அமைதி ஒன்றே என்றும்

உயிர்த்திருக்கும் என்ற 

சிந்தனை மனதில்

எழுந்தால் எதுவும்

துச்சமே!

இருவர் கூட்டணியில்

ஓர் அணியாய்

வலம் வர

வெற்றி என்றும் அதற்கே!

மறப்பதும் சிறப்பே

அடுத்தவர் பிழையை 

பதவியின் பால் போதை 

கொள்ளாது - பிறர்

நன்மை கருதி

எதிரியை எதிர்க்க

வளம் கொள்ளும்

எண்ணிய வாழ்வு

என்ற போது மட்டுமே 

இந்நட்பு என்றும் தொடரும்

- VeenaShankar


இணையர் வேர்கள் வலுவாக இருப்பின் -


எந்த கொம்பனாலும் 

(பாறையானாலும்😎)

வீழ்த்த முடியாது! 


பெண் மரம் - கீர்த்தி சிறிதோ, பெரிதோ- அது தோளிலே தாங்கும்💪

குலம் காக்கும்🫂🥰

- Akhila 

Sunday, April 5, 2026

படமும் கருத்தும் by winmeengal



 'துன்பத்திற்கு துன்பம் கொடுங்கள் ' என்ற கலாம் ஐயா மொழிதலை என்றுமே முன்னெடுங்கள்!

கஷ்டம் தானே வருகிறது;

கழுத்துக்கு என்ன கத்தியா வருகிறது ?

பெண்களே!

எத்தனை முறை நன்மையான அல்லது நமக்குப் பிடித்த விஷயங்களை செய்ய முற்படும்போதும் வீட்டிலிருந்தே அனுமதி மறுக்கப்படுகிறதோ அத்தனை முறையும் குரல் கொடுங்கள் பல தலைமுறைகளாக பின்பற்றும் அர்த்தமில்லா வரைமுறைகள் தைத்த கயிற்றை அவிழ்த்தோ☝️ அறுத்தோ☝️

-ரேவதி சக்தி

 

 நூறு இழைகள் இணைந்தாலும்

தாங்கும் சக்தி 

ஓரிழைக்கு கூட உண்டு

 பிணைப்பது எளிதல்ல

பிணைந்திருப்பதும் எளிதல்ல 

ஆனால் பிரிவதும் பிரிந்திருப்பதும்

அதனின்று

மீள்ந்து வாழ்வதும் கடினமே!

தாங்க கூடிய பாரத்தை பொறுத்தே

கயிற்றின் உறுதி தன்மையை அளவிட முடியும்

அதுபோலத்தான்

எந்த ஒரு உறவும்

மனதின் வலியை

பொறுத்தே அமையும்

சேர்வதும் பிரிவதும் 

பிரிந்தும் விலகாமல்

எட்ட நின்று பார்ப்பதும்

உறவின் உறுதியே!

கயிற்றை பின்ன தெரிந்த

மனிதனுக்கு உறவுகளிடம் பின்னியிருக்க

மறப்பது ஏன்?

- Veena Shankar 

 *அறுத்தலும் தேவை* 

தேவை- சினமும் தேவை; அன்பை போலே!!

தேவை- கசப்பும் தேவை; இனிப்பை போலே!!

தேவை- பிரித்தலும் தேவை; சேர்த்தலை போலே!!

தேவை- அறுத்தலும் தேவை -ஆக்கத்தை போலே!!

அறுத்தெறிவோம்- தலை கீழ் விகிதங்களை✨️

- Akhila 

 நூலிழை போதும் நம்பிக்கையில் அது சேர..

ஆயிரம் கண்கள் சொல்லும் அது பிரியும் என்று,

 இரண்டோ பல கைகள் பின்ன இணைந்தன! ஒற்றை விரல் நுனி பட்டால் ஐயோ?

 பலம் வலுவிழக்க ஒரு பாலம் உடையுதே! பிரிந்தன என்று தூக்கி எறிய...

 இல்லை முடிச்சு போட, அது உறுதியாக அல்ல.. முடிச்சாக உறுத்தாத! எதுவும் சாத்தியமே மனமிருந்தால்...

- Vidhya Nivash 

என்ன சத்தம் இங்கே?

புரிதல் இல்லாத

 இழைகள் பிரியும் சத்தமா?

சேர்ந்து கைகோர்த்த

நொடிகள் வெற்றிக் 

கொண்டாட்டமே!

இணைக்கும் வகையில் 

இணையும் இழைகள் 

அல்லாது 

இணைப்பவர் கூட

இணைந்து கைகோர்க்கும் 

பலரது உழைப்பிற்கு

ஓர் அடையாளம்

பிரிவு ஒன்று இல்லை எப்போதும் 

திரிக்கப்படுவது தாம்புக் கயிறோ,

தாலிக்கயிறோ!

திரியாமல் மனம் இருக்கவே

வேண்டுவோம்

தீர்வு காணா செயலுக்கு

தவறாக துணை

 போகும் போது

இழையில் பிரிதல்

கொண்டால் தவறில்லை

ஓர் உயிர் பிரியாமல்

இருக்கவே 

சரியான நேரத்தில்

சரியான பாதைக்கு

மேற்கொள்ளும் முடிவு

ஒன்றிணைந்த இழைகள்

போலே உறுதி அடையும்

பிரியும் இழைகளாய் 

இல்லாமல் ஒன்றிணைக்கும் செயலாய் 

இருப்பது என்றும் அறிவே!


 பணமா? பாசமா?

யாருக்கு பலம் அதிகம்

என்ற இருதரப்பினர் 

போட்டியில் அறுப்பட

காத்திருக்கிறது கயிறு

இரண்டிற்கும் காரணமாய் 

இழைகள் பிரிய பிரிய 

எதற்கும் நம்பிக்கை

மட்டுமே விடை என்று

சொல்லி பாலமாய் நின்று

ஓரிழை நம்பிக்கை தந்தது

- Veena Shankar 

Saturday, April 4, 2026

படமும் கருத்தும் by winmeengal

 

 Veena Shankar: 

எவனுக்கு எவன் இரையோ?

 இறையாண்மை காக்காத நேரத்தில்

Akhila : 

ஐயோ..எங்களுக்கு காது குத்த வேணாம்..எங்களுக்கு ஓட்டு இல்லையே🙏🙏🙏நாங்க escapppppeeee!!!!

Veena Shankar: 

ஓட்டம் ஓட்டுக்கானதல்ல

பண மோசடி செய்து

ஓடும் கூட்டம்

Akhila : 

இது கூட்டு முயற்சி...

மூன்று கட்ட கூட்டணி

எங்க பரிசு உறுதி!!! 

ஆளுக்கு ஒரு பங்கு‍ மூணுல ஒரு பங்கு🥰

 Veena Shankar:

 தலைவன் ஓட

தளபதி சவாரி செய்ய

சிப்பாய் போரிடுகிறான்

போராட்டம் என்பது

எவருக்கும் உண்டு வாழ்வில்

ஒருவரை ஒருவரை

மிதித்து மேலே வராமல்

பற்றிக் கொண்டு

கடப்பதே அழகு

 Veena Shankar: 

பங்கு போட முடியாத

பாசத்தில் 

கிடைத்த பாடம் முயற்சி

 Vidhya Nivash: 

அண்ணன் வரான் அண்ணன் வரான் வழியவிடுங்க 

இந்த சுட்டிகளுக்கு விடுமுறை விட்டாச்சு செல்லம்,பட்டு என்று சொல்லி செய்யும் சேட்டை இருக்கே அவங்க கையில மாட்டினீங்க அம்பேல், 

அண்ணா ஓடுங்க வேகமா,எதாவுது தீவுக்கு போலாம்!


 Veena Shankar: 

சீறிப்பாயும் வேகத்தில்

கண்டது எதனை?

மூவருக்கும் எதிரியான

 உயிரினம் தான்

எதுவோ?

இயற்கையின் கண்

கொண்ட வியப்பா?

செயற்கையின் பால்

கொண்ட வெறுப்பா?

விலங்குகளின் ஒற்றுமை

பறைசாற்றுகிறது

ஒருவனுக்கு ஒருவன்

எதிரி என்றாலும்

நட்பின் பால்

எதுவும் சிறப்பே?

Wednesday, April 1, 2026

இன்றைய சம்பவம் by Veena Shankar



 இன்றைய சம்பவம் 


செல்போன் மணி அடித்ததும் அம்மா , 

" இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை, வேற வேலை இல்லை எனக்கு" என்று கடிந்து கொண்டே தன் இரட்டைப்பிள்ளைகளை "ராமா! கிருஷ்ணா!" என்று அழைத்தாள். இவள் அழைப்பை ஏற்று இருவரும் வந்தாலும் கிருஷ்ணன் வருவானா? ராமன் மட்டுமே அம்மாவிடம் வர கிருஷ்ணன் பக்கத்திலிருந்து எட்டி பார்த்தான்.


 வந்த ராமனிடம்

 " இந்தா ! இதை போய் அப்பாவிடம் கொடு." என்றதும் "ஆமாம்மா! அப்பாவுக்கு இப்பப்ப நிறைய போன் கால் வருது " என்றபடி ஓடி வந்து தன் பங்கிற்கு வத்தி வைத்து விட்டு ராமனிடம் இருந்து செல்போனை பிடிங்கிக் கொண்டு பக்கத்திலிருக்கும் அப்பாவின் கடைக்கு ஓடி சென்றான் கிருஷ்ணன். 


ஆனாலும் அலைபேசியின் சத்தம் மீண்டும் மீண்டும் ஒலிக்க, "ச்சே! " என்று எழுந்த அம்மா, ஒலி வந்த பக்கம் தன் கையை கொண்டு சென்று பார்க்க , அது அவள் காலையில் எழ வேண்டி வைத்த அலாரம் சத்தம் என்றும் தான் கண்டது கனவு என்பதை உணர்ந்து கொண்டு சிரித்தாள்.


 செல்போன் எடுத்து கொண்டு அப்பாவிடம் கொடுக்க அவளோடு பிள்ளைகள் ராமனும் இல்லை கிருஷ்ணனும் இல்லை. இருவரும் வெளிநாட்டில் உள்ளனர். அதை வாங்கிக் கொள்ள அவள் கணவனும் உயிரோடு இல்லை. யாருடைய பராமரிப்பும் இன்றி தனித்து வளரும் செடி போல் வாழ்கிறாள் அம்மா. 


பின் குறிப்பு: மரம் என்று சொன்னால் கொஞ்சம் உறுதியாய் இருக்கும். அதனால் தான் செடி என்று குறிப்பிட்டேன்.

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...