சுவாசங்களை அள்ளித்தந்த எங்கள்
அன்னையரை.....வெறும் தக்கையாக்கி தூக்கி
செல்லும் மானிடா!
பின்னால்....
நாங்களும் பயணிக்கிறோம்.....
சுவாசமேயில்லாமல்.....
நடைபிணங்களாய்என் மரத்தாயின் இறுதி
யாத்திரையில் கலந்து கொள்ள எம்மினமே
திரண்டு வருகின்றனர்.....
ஆனால் உன் இறுதி
யாத்திரையில் கலந்துக் கொள்ள இருபது
பேருக்கு மேல் அனுமதி இல்லை எனும் நிலை
வந்தும்.....
இன்னும் மாறாமல் இருக்கும் மானுடமே.....
உன்னை மாற்றிக்கொள்ளடா.....
சுவாசத்தை காசு கொடுத்து வாங்கும் நிலை
வந்தும் மாறாமல் இருக்கிறாய் மானிடமே?
- Kanchana
மரம் தான் மரம் தான் எல்லாம் மரம் தான்...
மழைக்கும் நீ தான் வேண்டும்
மண்ணிற்கும் நீ தான்வேண்டும்..
உயிரினங்கள் வாழ்வதற்கும் நீ
தான் ஆதாரம் என்பதை மறந்தான் மனிதன்...
- Kamatchi
ஏய் யாராவது உள்ள இருக்கீங்களா?
அந்த மரம் கூட நல்லா இருக்கே....
உரிமையை இழந்தோம்
உடமையை இழந்தோம்
- Valarmathy
மரம் வெட்டிய மனிதனுக்கு பவனி வந்த கூட்டம் அல்ல நாங்கள், காடு அழிந்ததால்
நாட்டிற்கு வந்த கூட்டம்
படமானாலும் நிஜமானாலும் இழப்பு மனிதனுக்கு
மனிதனின் ஆர்ப்பாட்டம் தாங்காமல்
மரத்தினால் ஆன மனித மனம், மரத்தை சுமக்கிறது.
மனத்தினால் தவறு செய்கிறோம் என்றாலும் நம் மரணத்திற்கு மிஞ்சாது
என்பதனால் என்னவோ மின் மயானத்தை கண்டுபிடித்தான் மனிதன் ?
வரைந்தவர் யாராகிலும் காட்டு விலங்குகளை கட்டுக்குள் வைத்த கலைஞனின்
கைவண்ணம்
இது மரங்களை வெட்டிய மனிதனுக்கு வண்டியை தள்ள மறுக்கும் மனங்கள்
தலைமை பண்பின் உதாரணம் - தலைவர் இல்லாத சிறந்த அணிவகுப்பு
காட்டு அரசரை காணவில்லை, கை நீட்டி கம்பி நீட்டிவிட்டாரோ நம் மனிதர்களைப்
போல😂
இந்த வண்டியை பின் தொடர்ந்தால் தச்சர் கடையிலாவது வேலை கிடைக்குமா? -
வேலையில்லா திண்டாட்டத்தின் எதிரொலி
மரத்தின் மரண ஊர்வலம், மனத்தின் மௌன ஊர்வலம்
நாட்டிலிருந்து வந்து காட்டையழித்து விலங்குகளின் சீட்டை கிழித்த
வேட்டைக்காரன்
- Veena Shankar
மனிதனே! எங்கள் மனதில் ஈரமுண்டு…உங்கள் எதிர்கால சுவாசத்திற்கு
மரமுண்டா???
நண்பர் கூட்டத்தின் நினைவஞ்சலி… பூலோகத்தின் ஆணிவேரின் இழப்பிற்கு!
மரமே கேள்! இனியும் மரம் மாதிரியே இருக்காதே- யாரேனும் கிட்ட வந்தால்
சூறாவளியென கூக்குரலிடு- நாங்கள் ஓடி வருகிறோம்- இப்படிக்கு உன்
நண்பர்கள்!
“Jurassic park படம் பார்க்க நாங்களெல்லாம் கிளம்பிட்டோமே…அமைதியா வரிசையில
வந்தா தான் டிக்கட் வாங்குவேன்னு அண்ணன் சொல்லிட்டாரு🙇♀️”“
எல்லோரையும் பத்திரமா நம்ம காப்பகத்துக்கு இருட்டுறதுக்கு முன்னாடி
கூட்டிக்கிட்டு வாங்க“ என்று கைபேசியின் மறுமுனையில் கூறிய மனைவிக்கு
“சரிம்மா..சரி” என்றார் காட்டுத்தீயில் தப்பித்து திரும்பும் படையுடன் பூவரசன்!
-Akhiladevi Kumaran
உறைவிடம் எங்கேயோ
எங்கள் உயிரும் அங்கே..
போகதே போகதே தோழியே
சோர்ந்து போய் தூங்க வரும் மடியை விட்டு செல்லூங்க...
நேற்று வைத்த என் உணவு பொந்திலிருக்கு எடுத்துட்டு, என் தோழியை கொடுங்க .....
என் காதலி வருவா விழுது ஊஞ்சலில் ஆட என்ன செய்வேன்..
உன்னை சுற்றி சுற்றி விளையாடியதில் தெரியாமல் நகம் பட்டு விட்டது மன்னித்துவிடு தோழியே...
ஏய் இந்த கரடி அண்ணன் ஒவ்வொரு கட்டையாக உருவி கொடுத்த நாம நட்டு விடுவோம் இல்ல...
மக்கள்தொகையை தான் குறைக்க சொன்னாங்க,
தப்பா இந்த ஆளு மரத்தொகையை குறைக்க வந்துட்டான் ...
எங்க நம்ம நரி அண்ணன் காணோம் ,தந்திரமாக சொன்னாத்தான் அந்த மரமண்டைக்களுக்கு புரியும்..
அதை வி்ட்டு விட்டு தலைய தொங்கவிட்டு போன நம்மளையும் சேர்த்து உப்புகண்டம் போட்டுவிடு வாங்க..
இறந்த கால நன்றியுமில்லை..
எதிர்கால அக்கறையுமில்லை..
இரண்டிற்கும் சாட்சியாக நிற்கும் நிகழ்கால நிழல் கொடுப்பவைகளை வேரறுத்து
எதை சாதிக்க போகிறார்கள்???
- Vidhya Nivash