Friday, June 11, 2021

ஒரு வரி வாரம் -வரிகுதிரை

 


என்னை வரைவது பார்த்து ஆனந்தம் இந்த பெண்ணிற்கு

                                                        -Vedavalli Ramani 


வரிந்து கட்டிக் கொண்டு வரிகள் கொடுத்தாய்.. எனினும்-

எனக்கு எண்ண தான் தெரியலயே..!!??...

                                                                       - Kiruthika 


உன் கை விரல் என் உடல் வரிகள் !

                                                                                                                                                                         -Jayanthi 


என் உடல் வரியா? வரமா?


ஒரு கறுப்பு வெள்ளை இன்னொரு கறுப்பு வெள்ளையைப் பார்க்கிறது


தண்ணீரில் (என் பிம்பம்) மூழ்கிய நான் வெளி வர துடிக்கிறேன் - வரிக்குதிரை


என்னை பார்த்து கோடுகள் வரைகிறான் ஒரு மனிதன் 


வண்ண படத்திலும் கறுப்பு வெள்ளை நான்


இந்த பரியின் பொறி இரு வரி

                                                                                                                                                       -Veena Shankar 



யார் இந்த தேவதை??- வரிக்குதிரையின் mind voice 😎



“சீக்கிரம் mask வரைங்க boss.. வண்டலூர்ல girl friend பார்க்க போகணும்!


உயிர் பெற்று வந்த கறுப்பு வெள்ளை ஓவியம், 

ஓவியர் குடிசையில்,

ஏழ்மையின் நிறங்களைப் பார்த்து ஸ்தம்பித்து போனது!!


காகத்திற்கு பிறகு, நான் ஏழை மாணவனின் ஓவியங்களுக்கு முழு வடிவம் 

கொடுக்க உதவுபவன்- என்னை வரைய ஒரே ஒரு பென்சில் போதுமே!!!


வரிக்குதிரையின் தோல் duet song:   

கறுப்பு ராஜா வெள்ளை ராணியிடம்: நீ பாதி நான் பாதி கண்ணே...அருகில் நீயின்றி

 நான் அழகில்லை பெண்ணே!!


பரியின் தங்கை என்னிடம் வரிக்கு பஞ்சமில்லை 😬


                                                                                                                                                   -Akhiladevi Kumaran 


யாரது என்னை உளி இல்லாமல் செதுக்குவது,யாரும் என்னை அடக்க முடியாது 

என்று திமிரும் வரிகுதிரை.


வரைய வரைய உயிர் பெறுகிறேன்,முடிந்தவுடன் வரிகளை வாரி கொண்டு ஓடுவேன்.

                                                                            


                                    
-Vidhya Nivash

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...