Sunday, June 20, 2021

அப்பாக்கள் by Susila

அப்பாக்கள்

பத்து மாதங்கள் சுமந்து

இந்த உலகத்தை காட்டிய நம் தாய் தெய்வம் என்றால்,

காலமெல்லாம் குடும்பத்தை சுமந்து

நமக்கு இந்த உலகத்தை வழிகாட்டிய

நம் தந்தை தெய்வத்தின் தெய்வம் அல்லவா !!!


அப்பாக்களின் கோபத்தில் அன்பை

கண்டிப்பில் அக்கறையை

கட்டுப்பாட்டில் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை உணரலாம்.


அப்பா-விடாமுயற்சி, வீரம் ,

உழைப்பு ,தன்னம்பிக்கையின்

மறு உருவம்

பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய அயராது அல்லும், பகலும் உழைத்து அவர்களின் மகிழ்ச்சியில் ,மகிழ்ச்சியை காணும் மெழுகுவர்த்தி

பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்ற அப்பாக்களின் பல இரவுகள் தூங்காமல் தொலைந்தது உண்டு .

காலமெல்லாம் சுமந்த அந்த சுமைதாங்கியை- நாம்

அன்பாலும், அரவணைப்பாலும் தாங்கி வணங்குவோம் .


தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்


என்றும் அன்புடன்,

ந.சுசீலா.



2 comments:

  1. அன்பின் வலி எழுத்துகள்,அருமை💐

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...