Monday, September 27, 2021
Sunday, September 26, 2021
Saturday, September 25, 2021
இந்த வாரத்தலைப்பு "கதை எழுதுவோம்" by Kiruthika
*புதிய பாதை *
ஒரு மாலைப்பொழுதில் சங்கீதா கதவைத் திறந்து வேகமாக தெருவில் சென்றாள்...
திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே தெரு முனை ஆட்டோ ஸ்டேன்டிற்கு சென்று அவசரமாய் ஆட்டோ ஏறினாள்..!!
“ரெயில்வே ஸ்டேஷனிற்கு வேகமாக போப்பா”என்றாள் ஆட்டோகாரன் எங்கே போகனும் என்று கேட்கும்
முன்பே..!!
எந்த எக்ஸ்பிரஸ் பிடிக்கனும்மா? .. ஆட்டோக்காரன் கேள்விக்கு பதில் சொல்ல விரும்பாமல் திரும்பிக் கொண்டாள்..!..
அதே நேரம் அவள் கணவன் ராகேஷிற்கு பைத்தியமே பிடித்து விடும் போலிருந்தது .,..
அலுவலகம் முடிந்து வீடு வந்தவுடன் சங்கீதா போய் விட்டாள்.. என்பது புரிந்தது!..
உடனே கைப்பேசி எடுத்து சங்கீதா அம்மாவிடம் கத்தினான்.. “உங்க பொண்ணு எவன் கூடவோ ஓடி விட்டாள்..!!..”என்று ..
அடுத்த முப்பது நிமிடத்தில் ரயில்வே நிலையத்தில் இறங்கியதும் சூர்யாவை தேட ஆரம்பித்தன அவள் விழிகள்..
அதோ .. அங்கே சூர்யா..!..
சங்கீதாவை பார்த்தவுடன்,ஓடி வந்தான்.. பதற்றமாய்!!
அக்கா..சங்கிக்கா..!..
“நான் என் ஊட்டி கான்வென்ட் சிஸ்டரிடம் பேசி விட்டேன்..
நீ தாராளமாய் அங்கேயே தங்கி பிள்ளைகளுக்கு பரத நாட்டியம் கற்று தரலாம்..!”..என்று சொல்லிவிட்டு கோவை
எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான டிக்கெட்டை அவள் கையில் திணித்தான்..
தேங்க்ஸ்டா .. ஆனால் உன் பெரியம்மா பெரியப்பாவை எப்படி சமாளிப்பே .. ?..என்றாள்..
தங்கைகள். ...கலா மாலா கல்யாணம்
முடியட்டும்.. பிறகு உன் ஆன்டி ஹீரோவிடம் நீ அனுபவித்த கசப்பான உண்மைகளை கூறுகிறேன்.. பெரியம்மாவுக்கும் பெரியப்பாவுக்கும்...
உன் முடிவு சரியென அப்போது புரியும் என சமாதானம் செய்து முடித்தபோது ..
ரயில் புறப்பட்டது புதிய பாதை நோக்கி..!!
அதே நேரம் அங்கே சங்கீதாவின் அம்மா.. பூஜை அறையில் கண் கலம்பியபடி புலம்பி கொண்டிருந்தாள்..எதிரே சிலையாய் நின்று கொண்டிருந்த முருகனிடம்..
“ என் மகள் -தவறு செய்ய அல்ல .. தனக்கு அமைந்த தவறான வாழ்க்கையை திறுத்திக் கொள்ளவே போயிருப்பாள்...” என்று..!!!!....
எத்தனையோ முறை சங்கீ அந்த கயவனின் முகத்திரையை கிழிக்க முற்பட்டும் தான் தானே சமாதானம் செய்தோம் .. தங்கைகளின் கல்யாணத்தை காரணம் காட்டியென ...கண் கலங்கியபடி தன் மகளுக்கு மட்டும் சரியான தீர்ப்பு வழங்காத அவளது சராசரி *ரிட்டயர்டு நீதிபதி * அப்பா..!!!...ஈஸிச்சேரில் மனம் வருந்தி கொண்டிருந்தார்....
Friday, September 24, 2021
இந்த வாரத்தலைப்பு "கதை எழுதுவோம்" by Vidhya Nivash
ஒரு மாலைப்பொழுதில் சங்கீதா கதவைத் திறந்து வேகமாக தெருவில் சென்றாள். இந்த நாளுக்காக தான் இத்தனை நாள் காத்திருந்தோம். நம்முடைய கனவு அரங்கேறப் போகிற நாள் இன்று. இந்த உடையை அணிந்து நடக்கும் பொழுதே மனதில் பிறக்கிறதே ஒரு கம்பீரம் எனப்பல எண்ணங்களை அசைபோட்டு வீரநடை நடந்தாள் சங்கீதா.
அதன் முந்தைய நாள் அம்மா ஆசையாக ஜடை பின்னி பூ வைத்து, தாவணி உடுத்தி வந்த சங்கீதாவை உற்றுப்பார்க்க... இந்த ட்ரெஸ் எல்லாம் எப்படி தான் போடுகிறார்கள். ஒரே புழுக்கம் இந்த ஹேர்பின் வேற குத்துது தலையில இந்த குஞ்சத்தை வைத்துதான் ஜடை பின்ன வேண்டுமா அது வேற ஒருபக்கம் இழுக்குது .ஏம்மா இப்படி என்ன பாடா படுத்துறியே . எப்பொழுதும் போல பாட்டு பாட ஆரம்பித்து விட்டாள் சங்கீதா.
மறுபக்கம் சங்கு எவ்வளவு மென்மையான ஆடை உடுத்தும் பொழுது எவ்வளவு பஞ்சு போல இருக்கும் இந்த சேலை .கண்ணாடி வளையல் ஓசை கேட்கும் பொழுது யாரோ சிரிப்பது போல இருக்கிறதல்லவா என்று பல கனவுகளுடன் சங்கு ஒரு பக்கமிருக்க... சங்கு இத்தனை அழகான ஆடை அணிகலன்கள் இருக்கும்பொழுது இதையெல்லாம் விடுத்து ஏன் இப்படி மாடன் டிரஸ் மட்டுமே எல்லா பெண்களும் ஆசைப்படுறாங்க .
அம்மாவின் ஒரு புறம் சங்கும் மறுபுறம் சங்கீதாவும் நாளைக்கு எங்களோட கனவுகள் நிறைவேற போற நாள். உங்களுடைய தைரியமும்,அன்பும் அரவணைப்பும் தான் எங்களை இவ்வளவு தூரம் ஆளாக்கியிருக்கு அம்மா. அம்மாவும் அப்பாவும் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் நாங்கள் இருவரும் எங்கள் இலட்சியத்தை அடைந்திருக்க முடியாது இல்ல. நாங்க ஒன்னும் செய்யல உங்களோட விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் தான் நீங்க இதை அடைவதற்கு காரணம் அப்படின்னு அம்மா சொல்லி .தூங்குங்க தங்கமே நாளைக்கு நீங்க காத்திருந்த நாள் அந்த நாளுக்காகத்தான் நாங்கள் இத்தனை நாள் காத்து இருந்தோம்.
கூட்டுக்குள்ளே போராடி வெளியே வந்த பட்டாம்பூச்சி போல தன்னுடைய உள்உணர்வுகளிலிருந்து விடுதலை பெற்று வெளியே செல்லும் சங்கீதா பிறப்பால் சங்கு பாண்டியாக பிறந்து இன்று சங்கீயாக மறுபிறவி எடுத்து பறந்து செல்கிறாள். மறுபுறமோ சங்கீதா இந்த நாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்து ராணுவ படையில் சேர துள்ளல் வேகத்துடன் ஆசையை நிறைவேற்ற வீரநடை நடக்க...
மாலைப்பொழுதில் வீட்டிலிருந்து வெளியே வேகமாக சென்ற சங்கீதா மற்றும் சங்கு பாண்டி இருவரும் இரட்டையர்கள்.சங்கீ நாளைய சமுதாயத்தை உருவாக்க போகிற பெண் ஆசிரியராக மறுபுறம் இளமைத் துடிப்புடன் செல்லும் ராணுவ வீரமகளாக சங்கீதா கண்கொள்ளா காட்சியை கண்டு கண் கலங்கி நிற்கும் அவருடைய பெற்றோர்கள்... வீட்டில் இருப்பவர் உடைய ஆதரவு இருந்தால் போதும் பிள்ளைகள் எதையும் அடைய முடியும் இல்ல...
இந்த வாரத்தலைப்பு "கதை எழுதுவோம்" by Vedavalli Ramani
ஒரு மாலைப்பொழுது சங்கீதா கதவைத்திறந்து வேகமாக தெருவில் நடந்தாள்.அப்போது எதிரில் வந்த அவள் பாட்டி அவள் கையைப் பிடித்து வந்து வாசலில் போட்ட கோலத்தில் உட்கார வைத்து தன் மகள் சரண்யாவை கூப்பிட்டு ஒரு டம்ளரில் பாலும் ஒரு பக்கெட்டில் தண்ணீரும் கொண்டுவரச் சொன்னார்.சரண்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை.இருந்தாலும் அம்மா நிலை அறிந்து ஒன்றும் சொல்லாமல் கொண்டு வந்தாள்.அதற்குள் அக்கம் பக்க வீட்டு மாமிக்களும் வந்து விட்டனர். சங்கீதா நடுங்கிக் கொண்டே கோலத்தில் உட்கார்ந்தாள்.பாட்டி அவளை அம்மன் என்று சொல்லி பாலை அவள் தலையில் விட்டு தண்ணீர் பூராவும் விட்டார்.சரண்யா மகளை அணைத்து உள்ளே கூட்டிப்போய் குளிப்பாட்டி விட்டு கடவுளிடம் வந்து அழுதாள். கடந்த ஒரு மாதமாக குடும்ப பிரச்னையால் மனநிலை சரியில்லாமல் மனநிலை மருத்துவர் மருந்து கொடுத்து அவர் என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்டு ஆதரவாக இருந்தால் விரைவில் குணமாவார் என்பதால் தினமும் மாலை ஆனால் பட்டுப்புடவை கட்டி கொண்டை போட்டு கைப்பை எடுத்து வெளியில் போய் வருகிறார்.இன்று சங்கீதாவிற்கு அபிஷேகம் செய்வது தடுக்க முடியவில்லையே ஆண்டவா இது என்ன சோதனையோ என்று நினைத்து அழுகை நிற்கவில்லை.
Thursday, September 23, 2021
Wednesday, September 22, 2021
Tuesday, September 21, 2021
மனதில் பதிந்தவை by Vidhya Nivash
மனதில் பதிந்தவை
முகநூலில் ஒருவருடைய பதிவை பார்த்து தான் இதை எழுதத் தோன்றியது. எங்களுடைய பெரிய பழைய வீட்டை ஐந்து பாகமாகப் பிரித்து அவர் அவர் விருப்பம்போல் அதை கட்டிக் கொண்டோம். நான்கு பெரியப்பாக்கள்,எங்களுக்கு வந்த பகுதில் சில இடங்கள் புதிதாக கட்டியது. அதனால் முன் பகுதியை மட்டும் இடித்துவிட்டு அஸ்திவாரம் போட்டு கட்டினோம். வீட்டைக் கட்டிக் கொடுத்தது என் தாய்வழி மாமா இன்னொரு முறைப்படி எனக்கு அக்கா வீட்டுக்காரர் கூட இப்போதெல்லாம் எளிதாக ஹவுசிங் லோன் போட்டு கட்டி விடுகிறார்கள். அப்பொழுது என் தாய் தந்தையுடைய சேமிப்பில்,சாமர்த்தியத்தால் கட்டினார்கள் என்று சொல்லலாம். ஒவ்வொரு செங்கலும் ஏறும் பொழுது நாங்கள் அடைந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை.ஆறு மாதங்கள் கட்டியிருப்பார்கள் என்று தான் நினைக்கிறேன். என்னுடைய அம்மாவும் அப்பாவும் தூங்காமல் எந்நேரமும் அதே சிந்தனையில் இருந்ததை நான் இன்றும் எண்ணிப் பார்க்கிறேன் .பணம் பெரிய பிரச்சனை அல்ல எதிர்பார்க்காமல் வந்த சில சவால்களையும் அதையும் மன தைரியத்துல வென்றார்கள் என்றால் அது இன்றும் எங்களுக்கு ஒரு பெரிய வெற்றிதான். நான் இன்று இவ்வளவு சுகமாக இதை நான் உங்களிடம் ஒரு நினைவாக எழுதுகிறேன் என்றாலும் அதற்கு காரணமும் அவர்களே.
என்ன சொல்ல வந்தேனோ அதற்கு வருவோம். மாமாக்கு கீழ் வேலை பார்த்தவர் நல்லு எனும் ஒரு மேஸ்திரி.அவருடைய குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அதில் அந்த கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர் மாமன் மச்சான் தங்கை அக்கா அண்ணன் என்று மொத்த குடும்பமே வேலைக்கு வருவார்கள் .தினமும் காலை 10 மணிக்கெல்லாம் வந்துவிடுவார்கள். அவர்கள் வரும் அழகைப் பார்க்கும் போது நமக்கு ஒரு உற்சாகம் பிறக்கும் .அப்பொழுது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். அவர்கள் பார்க்கப் போவதோ பளுதூக்கும் வேலை. ஆனால் அவர்கள் காலையில் வரும் அழகு ஆபிஸ்க்கு செல்வதுபோல் நீட்டாக வருவாங்க.அது மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அந்த உடையை கழட்டி விட்டு இதற்காக என்று வைத்திருக்கும் அதாவது சட்டையோ ஏதாவது ஒரு துணியை மேலே தலையில் கட்டிக்கொண்டு அவர்கள் வேலையில் இறங்குவார்கள். கொத்தனார் அதிகமாக பேச மாட்டார் அறிவுத் திறமை அதிகமாக இருக்கும் குறைவாக வேலை செய்தாலும் புத்தி கூர்மையாக இருப்பார் .அவருக்கு உதவியாக இருக்கும் சித்தாள் நிறைய பேசுவாங்க அவர்களுக்கு கீழாக இருப்பவர்கள் அதுமட்டுமில்லாமல் மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருப்பார்கள் .அவர்கள் பேசிக்கொள்வதை பார்க்கும் பொழுது நமக்கே சில நேரம் பொறாமையாக இருக்கும் .அன்றாட வேலை முடிந்தாலும் வாரக்கடைசியில் கூலி ஆனால் அத்தனை சந்தோஷத்தை அவங்க மனசுல நம்ம பார்க்க முடியும் . ஒன்றரை வருடம் எங்க வீட்ல வேலை பண்ணி இருப்பாங்க அதுமட்டுமில்லாம அடுத்தடுத்து பெரியப்பா வீட்டிலும் அவங்களே தான் வேலை பண்ணாங்க . அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நாட்கள் மிக மிகக் குறைந்த நாட்களே என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் வேலைக்கு வருவார்கள் அவர்கள் வந்தவுடன் அங்கே அந்த இடமே ஒரே களைகட்டி விடும். சென்ட்ரிங் அடுத்து சீலிங் போடுறது அவங்களுக்கு கல்யாணம் மாதிரி . வேலை கம்மி பிரியாணியும் கிடைக்கும் . அதனால ரொம்ப சந்தோஷமா வருவாங்க .மதியம் சாப்பிட்டுட்டு அவங்களுக்கு ஒரு மணி நேரம் ஒன்றரை மணி நேரம் ஓய்வெடுக்கும் நேரம் கிடைக்கும். அந்த நேரத்தில் பார்த்தீங்கன்னா அக்கா ஊறுகாய் வச்சிருக்கீங்களா வந்து கேப்பாங்க அம்மாவும் வீட்டில் சமைக்கும் காய்கறிகளில் கொஞ்சம் அவர்களுக்கு கொடுப்பார்கள் .சிலநேரம் அவர்களுக்காகவே சமைத்து கொடுப்பதும் உண்டு .அப்ப டிவில பழைய படம் தான் போடுவாங்க . அந்த ஒரு மணி நேரத்திலேயே டிவியில் ஓடுகிற சினிமா பாத்து ரசிச்சு சந்தோஷமாக கொஞ்ச நேரம் பேசிட்டு சிலபேர் தான் படுத்து தூங்கு வாங்க முக்காவாசி பேரு ஜாலியா இந்த டிவி பாத்துட்டு பேசிட்டு போவாங்க .அதை என்னால மறக்கவே முடியாது .
உண்மையிலேயே அவங்களப் பாக்கறப்ப நமக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் .ரொம்ப நாள் எங்க கூட பழகுன மாதிரியே இருக்கும். குடும்பத்தில் ஒருதர் மாதிரி ஆயிடுவாங்க .அந்த மாதிரி வீடு முடிச்சு கிரகப்பிரவேசம் பண்றப்ப அக்கா உரிமையோட துணி கேட்பாங்க எனக்கு இது வாங்கிக் கொடுக்க அதை வாங்கி கொடுங்க என.கிரகப்பிரவேசம் விருந்து பயங்கரமா இருக்கணும் அப்படி தான் பேசுவாங்க .
ஒருத்தரோட பதிவின் மூலமாக இதை நான் எழுதுவதற்கு எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சது. புதுமனை கட்டின சிமின்ட் மண்ணோட ஓட வாசனை தண்ணீர் ஊற்றிய நினைவு இன்னும் மனசுல அப்படியே வந்துட்டு போகுது.செங்கலும் மண்ணும் மட்டும்தானா நம் உணர்வுகளோடு சேர்ந்து கட்டப்பட்ட வீடு அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள , தாய் தந்தையருடன் சொத்து மட்டுமல்ல அவங்க நமக்காக சேர்த்து வச்ச உணர்வுகளும் கூட ..அடுத்த தலைமுறைக்கு ???
Monday, September 20, 2021
Sunday, September 19, 2021
Friday, September 3, 2021
இந்த வாரத்தலைப்பு "தனிமை"
தனிமை
தனிமை என்றும் தனித்துவமானது
நமக்கு நாமே தரும் தனிமை இனிமை
பிறர் நமக்கு கொடுக்கும்
தனிமை கொடுமை!!
பல உறவுகளால் தரமுடியாத
ஆறுதலையும் நிம்மதியையும்
சில நேரத்தில்
தந்துவிடும் அருமருந்து
தனிமை!!!
பலருக்கு மிகவும்
பிடிக்க காரணம் அங்கு
நம்மை காயப்படுத்த
யாவரும் இருப்பதில்லை!!!
- ஜெயா
பொறுப்பினால் வரும் தனிமை சிந்தித்து செயல்படுவதற்காக
பூரிப்பினால் வேண்டும் தனிமை நினைத்து மகிழ்வதற்காக
விருப்பத்தால் தேடும் தனிமை புத்துணர்ச்சி பெறுவதற்காக
வெறுப்பினால் நாடும் தனிமை தன்னை ஆசுவாசப்படுத்துவதற்காக
கல்வியால் அடையும் தனிமை புதிய கண்டுபிடிப்பிற்காக
செல்வ வளத்தில் பிறக்கும் தனிமை தன் இன்பத்திற்காக
கருவறையில் கிடைக்கும் தனிமை வெளியுலக பிறப்பிற்காக
சிறையறையில் அனுபவிக்கும் தனிமை தன் தவறுக்காக
துக்கத்தால் காணும் தனிமை நடந்ததை மறப்பதற்காக
தூக்கத்தால் ஏற்படும் தனிமை எதிர்கால வளத்திற்காக
கொண்டவனோடு கொள்ளும் தனிமை புது வரவிற்காக
நேரத்தால் கிடைக்காது தனிமை நீ நினைக்காத வரை
தனிமை வேண்டும் இனிமைக்காக மட்டுமல்ல தன்னை ஆராய்ந்து பெறும் வெற்றிக்காகவும் தான்.
- Veena Shankar
தனிமையின் இனிமையிலே
பிறக்கும் புதுமை
காதலில் தனிமை இனிக்கும்
திருமணத்திற்கு பிறகு தனிமை சுடும்...
வீட்டில் பலர் இருக்கும்போது தேடும் தனிமை..
பிள்ளைகள் இல்லாத வீட்டில் தனிமை சுடும்..
மீனுக்கு நீரை வெற்றிபெற தனிமை தேவை..
குழப்பத்தில் நம்மை நாம் வெல்ல தனிமை ஓர் ஆயுதம்...
ஓர் அறையில் சென்று யாரும் இல்லா இடத்தில் தேடுவது தனிமையோ ???முன்பின் அறியாத கூட்டத்தில் நாம் உணர்வுமே அந்தத் தனிமையே கொடுமை..
இளமையில் நாம் இழந்த தனிமைக்கு முதுமை நம் உறங்கா மனதிற்கு தனிமையை தந்து பரிசளிக்க காத்திருக்கும்...
ஆம் கடந்து வந்த பாதைகளை ரசிக்கவும் விட்டதை தொடரவும் தனிமை ஒரு மாமருந்து...
மேக கூட்டங்கள் மிதந்து வர
அலைகள் ஒன்றை ஒன்றை மோத
மீன்கள் கூட்ட கூட்டமாய் இரை தேட
கொட்டும் அருவி நீர் பாறைகளை தழுவி சிதறி நழுவி ஓட
காற்று வந்து மூங்கிலில் புகுந்து புல்லாங்குழலை போல் ஊத
காக்கா கா கா வென்றுகரைந்து அதன் கூட்டத்தை கூட்ட
யானைகள் கூட்டம் கூட்டமாய் உலாவி வர
மயில் ஒய்யாரமாக ஆட
குயில் கூவ
சூரியனும் சந்திரனும் மாறி மாறி வந்து காட்சி தர
குழந்தைகள் மழைசாரலில் நனைந்து துள்ள
நசுங்கும் திருவிழா கூட்டத்திலும்
தாய் வீட்டில் அனைத்தும் நிரம்பிக்கிடக்க..
மனம்மட்டும் சொல்வும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்க ..
ஓ இதற்கு பெயர்தான் காவியத்தில் வரும் தலைவனை பிரிந்த தனிமையோ???
- Vidhya Nivash
இன்றைய சம்பவம் by Veena Shankar
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
-
நாணயத்தின் இருபக்கமோ இவர்கள். கொடுக்க கொடுக்க குறையா வளரும் உள்ளங்கள் இணைந்து இங்கே பலரின் நம்பிக்கையை உரமேற்ற, மெருகேரும் கரங்கள் வில...
-
உடையார் - பாகம் 1 by Vidhya Nivash அனைவருக்கும் வணக்கம், பாலகுமாரன் அவர்களின் உடையார்,அவருடைய சொந்த ஊரான பழமார்நேரி கிராமத்திலிருந்து ஆரம...















































