Friday, September 24, 2021

இந்த வாரத்தலைப்பு "கதை எழுதுவோம்" by Vedavalli Ramani

 


ஒரு மாலைப்பொழுது சங்கீதா கதவைத்திறந்து வேகமாக தெருவில் நடந்தாள்.அப்போது எதிரில் வந்த அவள் பாட்டி அவள் கையைப் பிடித்து வந்து வாசலில் போட்ட கோலத்தில் உட்கார வைத்து தன் மகள் சரண்யாவை கூப்பிட்டு ஒரு டம்ளரில் பாலும் ஒரு பக்கெட்டில் தண்ணீரும் கொண்டுவரச் சொன்னார்.சரண்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை.இருந்தாலும் அம்மா நிலை அறிந்து ஒன்றும் சொல்லாமல் கொண்டு வந்தாள்.அதற்குள் அக்கம் பக்க வீட்டு மாமிக்களும் வந்து விட்டனர். சங்கீதா நடுங்கிக் கொண்டே கோலத்தில் உட்கார்ந்தாள்.பாட்டி அவளை அம்மன் என்று சொல்லி பாலை அவள் தலையில் விட்டு தண்ணீர் பூராவும் விட்டார்.சரண்யா மகளை அணைத்து உள்ளே கூட்டிப்போய் குளிப்பாட்டி விட்டு கடவுளிடம் வந்து அழுதாள். கடந்த ஒரு மாதமாக குடும்ப பிரச்னையால் மனநிலை சரியில்லாமல் மனநிலை மருத்துவர் மருந்து கொடுத்து அவர் என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்டு ஆதரவாக இருந்தால் விரைவில் குணமாவார் என்பதால் தினமும் மாலை ஆனால் பட்டுப்புடவை கட்டி கொண்டை போட்டு கைப்பை எடுத்து வெளியில் போய் வருகிறார்.இன்று சங்கீதாவிற்கு அபிஷேகம் செய்வது தடுக்க முடியவில்லையே ஆண்டவா இது என்ன சோதனையோ என்று நினைத்து அழுகை நிற்கவில்லை.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...