Wednesday, May 27, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


அறிவும் வியாபாரம் ஆனதோ?


புது உத்தியும் புகுவது இவனாலே!


சேமிப்பின் பயன் சொல்லும் இவனும்

அதிகப்படியான அறிவால் 

ஓர் நாள் அழிவானோ? 


நம் செல்வாக்கை 

உயர்த்தியும்


சில சமயம் அடுத்தவரால் செல்லாக் காசாக ஆக்கப்படுபவனும் இவனாலே!


 பொன் முட்டை இடுகின்ற வாத்து

இப்போது உடைபட்டு

நிற்கிறது

காலத்தின் சுயநலத்தால்


 வங்கியில் சேர்த்து வைத்த 

சேமிப்பல்ல இது

தன் அறிவு கொண்ட மூளையை

பயன்படுத்தியதால்

வீழ்ந்து கிடக்கும் பணம்

அறிவு கொட்டிக்கிடக்கின்றவனுக்கு

செல்வம் கொட்டிக் கிடக்கின்றவனின் 

அன்பு பரிசு

எதற்கும் விலை

காணும் உலகில்

-Veena 

இப்படி ஒரு நிலை வந்தால் எப்படி

இருக்கும்,

தலைக்கு பூட்டு போட

 வேண்டுமோ...

கடன் கேட்க வருபவன்

 சுத்தியலோடு திரிவானோ..

டிஜிட்டல் முறையில் லாக்கர் போட

 வேண்டுமா...

இங்கு சேமித்தால் எவரும் திருட

 முடியாது,நாமும் பயன்படுத்த

 முடியாது!

- Vidhya 




No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...