முன்னேறி செல் என்கிறது நிஜம் நேர் பார்வையில்
உன் பாதையில் நீ புகழுக்கு அடிமையானல் பின்னேறவும் பழகிக் கொள் என்கிறது நிழல்
தலைகீழாய் பார்த்தால், உண்மையும் அதுதான்.
எதில் பயணிக்கிறோம் என்பதை விட எது நம்மை தாங்குகிறது என்பதை அறிய நாம் மறந்துவிடுகிறோம். யானையானாலும், பூனையானாலும் , மனிதனானாலும் படகிருந்தால் மட்டும் போதாது. துடுப்பும் அதை இயக்க மனிதனும், பாதையை கடக்க வழியும் வேண்டும். பாதை கரடு முரடானாலும் நம் எண்ணத்தில் நேர்மை இருக்க வேண்டும். பிறருக்கு அறிவுறுத்தும் முன் நாம் நம்மை சுய மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment