Friday, December 31, 2021

கவிதை துளிகள் by Veena Shankar


  

மனிதனை மனிதன்


நிறைய  பேசினால் வாய்க்கொழுப்புக்காரன் 

பேசாமல் இருந்தால் திமிர்பிடித்தவன் 

மெதுவாகப்  பேசினால் விஷமக்காரன் 

அதிர்ந்து பேசினால் கோபக்காரன்

மெதுவாக நடந்தால்  சோம்பல் கொண்டவன்

வேகமாக நடந்தால் கோட்டையை பிடிப்பவன்

கனவு கண்டால் கையில் ஆகாதவன்

காண்பதை சொன்னால் பிழைக்கத் தெரியாதவன்

தான் உண்டு என்று இருந்தால் சுயநலவாதி 

அடுத்தவருக்கு உதவினால் டாம்பீகவாதி

ஆள நினைத்தால் அகங்காரக்காரன் 

அடிபணிந்து இருந்தால் பைத்தியக்காரன்


பெண் வியாபாரி

எத்தனையோ பேர் வாழ்வில்

ஒளி ஏற்றுகிறேன் நான்

என் வாழ்க்கை இருட்டில் அரங்கேறுவதால்

விருந்தாளியாக வருபவர்களுக்கு

மகிச்சியை தருகிறேன் நான்

என் துக்கத்தை மனதிலே பூட்டி வைத்து


மனமே

வாழ்க்கையின் சிக்கலை தவிர்க்க நினைக்கும்

மனமே! நீ பின்னப்பட்ட வாழ்க்கை உறவுகளை அவிழ்க்காதே

வாழ்வின் தேவைக்கு செல்வத்தை அடைய நினைக்கும் 

மனமே! நீ ஒருபோதும் அதன் ஆளுமைக்கு அடிமையாகதே

பசியை தோற்கடிப்பேன் என்று சொல்லும்

மனமே ! நீ என்றும் அடுத்தவர் வாழ்வை பறிக்காதே

உடலை வளர்க்கிறேன் என்று எண்ணும் 

மனமே! நீ எப்போதும் நோய்க்கு வெற்றியை கொடுக்காதே


 காதல் மனைவி

பொம்மை உடுத்திய சேலை வேண்டும் 

என்று  கேட்டாள் மனைவி 

வாங்கிக் கொடுத்தேன்

பொம்மை போட்ட  நகைகள் வேண்டும் 

என்று    கேட்டாள் மனைவி

வாங்கிக் கொடுத்தேன் 

பொம்மையே வேண்டும் என்று கேட்டாள்

அதை வாங்கி  கொடுக்க ஆயத்தமானேன் 

பிறகுதான் உண்மை தெரிந்தது  தற்போது

அவள் கேட்டது பொம்மை அல்ல

கடையில் வேலை செய்யும் பெண்  என்று

தன்னால் வாரிசு கொடுக்க முடியாது என்பதால் 

எனக்கு   தேடினாள் இரண்டாவது  மனைவியை


பெண்மையும் ஜெயிக்கும் ஆண்மையிடத்தில் அவள் அவனை ஸ்பரிசிப்பதால்

ஆண்மையும் ஜெயிக்கும் பெண்மையிடத்தில் அவன் அவளை ரசிப்பதால்


Thursday, December 30, 2021

தினம் ஒரு சிந்தனை by Veena Shankar

 


[19/11, 11:06]

 இன்றைய துளி


கண்ணுக்கு தெரியாதவன் பரமன்

காசு பார்க்க தெரியாதவன் பாமரன்

[25/11, 10:53]

 காணாதவன் குருடன் காண்பதை காணாமல் செய்பவன் திருடன்

[27/11, 16:43] 

பிரசவித்து பார் பெண்மையின் இன்பமும் துன்பமும் புரியும்

எறும்பாய் மாறி பார் அதன் முயற்சியும் சுறுசுறுப்பும் புரியும்

புழுவாய் இருந்து பார் அதன் துடிப்பும் வாழ்வும் புரியும்

அடுத்தவர் சோகத்தில் பங்கெடுத்து பார் உண்மையும் வலியும் புரியும்

நீரில் மிதந்து பார் மனது இலகுவாவதும் குளிர்ச்சியாவதும் புரியும்

[27/11, 16:44] 

 சிறு உயிரினம் கொசுவிடம் நம் வீரத்தை காட்ட நம்மை நாம் காயப்படுத்திக் கொள்வதென்பது சிறு துயரத்திற்கும் நம்மை நாம் தேற்றிக்கொள்ளாமல் மனத்தால். மேலும் மேலும் துயரபடுவதற்கு சமம்

[29/11, 22:29]

 பல இளைஞர்களின் கனவுகளையும் கற்பனைகளையும் கஷ்டங்களையும் காட்சிகளாய் கண்ட யுத்த களம் மொட்டைமாடி

[12/12, 05:38]

  இன்றைய சிந்தனை


முயற்சி உழைப்பின் மூலதனம்

உழைப்பு முயற்சியின் வெற்றி

[13/12, 16:26]

  பெண்மையும் ஜெயிக்கும் ஆண்மையிடத்தில் அவள் அவனை ஸ்பரிசிப்பதால்

ஆண்மையும் ஜெயிக்கும் பெண்மையிடத்தில் அவன் அவளை ரசிப்பதால்

[14/12, 07:41]

  மலராய் இருந்தால் கொய்துவிடுவேன் உன்னை

மண்ணாய் இருந்தால் மிதித்துவிடுவேன் உன்னை

அராசனாய் இருந்தால் வென்று விடுவேன் உன்னை

மலையாய் இருந்தால் சிதற விடுவேன் உன்னை

ஆனால் நீ என் இதயமாய் இருப்பதால் மனதினுள் இருத்தி விடுவேன் உன்னை

[14/12, 07:43]

  பொறாமை கொண்டேன் உன்னை கண்டு

உன் குணத்தால், அறிவால், அழாகால் அல்ல. நீ நீயாக இருப்பதால்

எந்த தருணத்தி்லும்

[15/12, 13:55]

 வாருங்கள்

பெண்களை மாற்றும் ஆண் இனமே 

மென்மையாகவும் மாறிப் பாருங்கள் 

உங்கள் இடத்திலும் ஒளிந்துள்ளது 

பெண்மை அதுவும் மென்மையாய்

[18/12, 07:37]

 நெற்றி பொட்டு

வண்ண வண்ணமாய் வித விதமாய் நீ உருமாறினாலும் என் நெற்றியல்லாது மற்ற இடங்களில் சட்டென்று ஒட்டிகொள்கிறாயே

Tuesday, December 28, 2021

நிலா by Vidhya Nivash

 


தனிமையின் தோழி

தன்னம்பிக்கை தருவாள்

வளர்ந்தாலும் தேய்ந்தாலும்

சிரிப்பாள் அம்மா போல்...

நிலா by Akhiladevi Kumaran

 











நிலா by Veena Shankar

 


நில்லாமல் செல்லும் நிலவே! பாசத்தால் நேசக்கரம்  நீட்டு.

 உன் தோற்றம்  எங்களுக்கோர் பாடம்.  ஒருநாள் மறைந்திருந்தாலும்   மீண்டு வந்து ஒளிவீசி வாழ்க்கையில் வளர்வதும் தேய்வதும் உண்டு துவளாதே என்று நீ சொன்ன பிறகு உன்னை பார்த்து சோறு உண்ட மானிடர் யாம் சோம்பித் திரியோம் 

நிலவே உன் வெளிச்சத்தில் ஒளிந்து கொள்ள ஆசை. தண்ணீரிலும்  உன் வடிவத்தை பிரதிபலித்து வெண்ணிறமாய் மாற்றும் நீ, எங்களுக்கு எப்போதும் நமக்கான இயல்பில் மாறாமாலும் இருக்க அறிவுரைக்கிறாய்.

உன்னை அள்ளிக்கொள்ள முடியாவிட்டாலும் நிலவே நீ சொல்லிக்கொடுத்த வாழ்க்கை பாடத்தை மறவோம்

Monday, December 27, 2021

கோலம் by Valarmathy

 




கோலம் by Ramalakshmi

 




கோலம் by Vedavalli Ramani

 


மார்கழி மாதத்தில் என் அம்மா போடும் வித கோலத்தில் நானும் என் தோழியும் போட்டி போட்டு வீட்டுக் கொல்லைப்புறம் தில் பூக்கும் பரங்கிப்பூக்களைப்பரித்து வீட்டில் உள்ள மாட்டின் சாணத்தை உருண்டை பண்ணி கோலத்தில் வைத்து அதன்மேல் பரங்கிப்பூக்களை 10,20 என பொங்கல் வரை வைப்போம்.அந்த காலம் நினைத்தாலே இனிக்கிறது.இப்பொழுது அடுக்குமாடியில் அதெல்லாம் முடியாது.உங்கள் கோலம் வர்ணனை போட்டோ எல்லாமே அருமை.

கோலம் by Susila



கோலம் போடுவது-இது ஒரு வகையான தியானம் .. கோலம் போட்டு விட்டு கடைசில் அதை நான்கு புறமும் நின்று ரசிக்கும் போது மனதிற்கு எத்தகைய மகிழ்ச்சி...

கோலம் by Vijaya




கோலம் by Jayanthi

 




கோலம் by Kiruthika



 தொடக்க  புள்ளி எங்கே ?

முடித்த புள்ளி எங்கே?..

விரல்கள் பயணித்த பாதை எங்கே ?...

என்பது - நமக்கு மட்டுமே 

புரியும் !!!...


இது கோலத்தின் -

  அழகு கோலம் ..!!!...

 நான்கு புள்ளி கோலம்..

  சொல்லும் நம் அவசரத்தை..!!

நாற்பது புள்ளி கோலம் 

  சொல்லும் நம் மனப்பூரிப்பை..!!


எத்தனை வருடங்கள் ..

     நாம் கோலமிட்டு இருந்தாலும்-

    நம் மாமியார் வீட்டு -வாசல் 

நிரப்பும் நம் முதல் கோலத்திற்கு மட்டும் - தனி மவுசு தான்... !!!...

ஏனோ?🤔

   அடுத்தடுத்த காலங்களில்..

தொடர போவதென்னவோ..

  சிக்கு (கல்) கோலங்கள் தான்...!!!!..🤣🤣என்பதால் தானோ என்னவோ ?!...🤣🤣

கோலம் by Akhiladevi Kumaran




கோலம் by Veena Shankar

 


 மார்கழியில் வண்ண கோலமிடும் பெண்டியரும் சிறுமியரையும் காணாது தவிக்கிறேனே 

அரிசிமாவினை கலந்து என் மேல் இவர்கள் இடும் கோலமும் அதனை உண்ண வரும் எறும்புகளையும் காணாது தவிக்கிறேனே

வாசற்படியின் ஏக்கம்

 புள்ளிகளின் கோர்வையே கோலம். புள்ளிகளினூடே வளைந்து செல்லும் கம்பியே நம் வாழ்க்கையும் நம் திறமையும்

ஓரிழை கோலம் சொல்லும் கவிதை

ஈரிழை கோலம் சொல்லும் காவியம் காவிப் பொடியை தரித்திருப்பதால்


கோலம் 


மார்கழி மாதத்தின் முந்தைய நாள் 

பயிற்சி ஆரம்பம் அடுத்தநாள் கோலத்திற்கு 

புத்தகத்தைப் பார்த்து தரையிலும் கரும்பலகையிலும் 


விடியும் முன் சாணி தெளித்து விமான ஓடுதளம் 

போல் வாசலை பளபளப்பாக்கி மெல்ல மெல்ல 

நான் பழகிய கம்பி கோலத்தால் நடனம் ஆடியது என் 

கைவிரல்கள் - இதழ்களை பிரித்து வண்ணங்கள் 

தீட்டினேன் பூ கோலத்தில் - முத்தமிட வைத்தது  


நடுவில் நேர்த்தியாக வைக்கப்பட்ட சாணியும் 

அதன் மேல் பள்ளி கொண்டிருக்கும் பூசணிப் பூவும் 


அழகாக இருக்கிறது என்று அடுத்தவர் கூறாமல் 

இருந்தாலும் நமக்கே நாம் போட்ட கோலம் அழகு தான்

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...