அனைவருக்கும் வணக்கம் இன்று நாம் பார்க்க இருக்கும் புத்தகம் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் "துணையெழுத்து".பல தலைப்புகளை ஒரிரு வரிகளில்,அவர் கேள்விகளுடன்..
பொம்மைகளை வைத்து வரலாறை கண்முன்னே விளக்கிக் காட்டுகிறார் பொம்மைகளுக்கு உயிர் இல்லை. ஆனால் குழந்தைகளுக்கு அதை பல்வேறு கோணங்களில் பார்க்கும் புத்திசாலித்தனம்... நீயும் பொம்மை நானும் பொம்மை.
புதுமைப்பித்தனின் வாழ்க்கை நினைக்கும் பொழுது இறந்த குழந்தையை கூட பார்க்க முடியாமல் தவிக்கும் நிலை ...பணம்??காலத்தை கடந்துதான் கிடைக்கிறது.
ஒவ்வொருவர் உடலிலும் இருக்கும் வடுக்களும், தழும்புகளும் பல கதை சொல்லும்... படிக்கும் போதே அசைப் போட வைத்தது.
படைப்புகளின் முன் 'புல் வளர்ந்துகொண்டே இருக்கிறது'
புத்தர் 'உலகில் தீப்பற்றி எரியாத இடமே இல்லை 'அது அழியும் பொழுதே உலகின் காட்சிகளின் உண்மை தெரியும்.
வீட்டை இடித்து தரைமட்டமாக்கி...அப்பொழுதும் கொத்து சாவியை பத்திரமாக எடுத்து வந்த பெரியவர் .அதிலிருந்து ஒன்றை வாங்கி என் சுவற்றில் மாற்றி வைத்தேன்.
காசியில் தாய் கங்கை ஆற்றில் விழ தாயை மீண்டும் கரைக்கு கூட்டிவந்து தெரியாமல் நடந்தது.காசியை சுற்றிப் பார்க்க விரும்பி என் தாயின் ஆசையை நிறைவேற்ற வந்துள்ளேன் .சிறிது நேரம் பேசிய பிறகு தான் தெரிந்தது அவருக்கு பார்வை குறைபாடாகி 4 வருடங்கள் ஆகின்றது.
வீராங்கனையாக வேண்டிய பெண்களின் ஆசைகள் எல்லாம் ,என்ன ஆயினர்?
மனிதர்களை தவிர வேறு எந்த உயிரினம் தனது கர்ப்பத்தை அழித்துக் கொள்கிறது .மூன்று கருக்களில் ஒரு கருவை மட்டும் அழிக்கும் நவீன முறைகள்.அணுகதிர்வீச்சுக்கு உள்ளான ஒரு நகரில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை ஓவியம் போல அது பேசும் முறை விசில் அடிப்பது போல் உள்ளது. தாய் தந்தையர் இருவரும் பேசும் தன்மையை மறந்து விசிலை கற்றுக்கொள்கின்றனர். ஒரு தருவாயில் அந்த குழந்தை இறந்து போக இவரும் பேச்சை மறந்து விசிலுடன் வாழ்கின்றனர்.
கிருஷ்ணருக்கு சமைக்கும் துர்வாசர் பற்றி ஏன் எழுதவில்லை என்று என்னிடம் கேட்ட வாசகர். உப்பு மட்டும் போட்டு சரியாக சமைக்கத் தெரிந்தால் அந்த குடும்பத்தில் சண்டையே வராது சார்.ஏன் எழுத்தாளன் ஆனேன் என்று நினைத்தேன், இன்று இப்படிப்பட்ட வாசகர்களை என்னால் சந்திக்க முடிந்தது என்று நன்றி சொன்னேன்.
குடும்பத்தின் பண கஷ்டத்தை விட,உயிராக நினைத்த தொலைந்து போன கூத்தாடிகளின் வாழ்க்கை .
பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டு கடைசி வரை மாணவனாக வாழும் மனிதர்கள் .
வேலூர் அருகில் கரடிக்குடியில் உறங்கும் கவிஞன் பிரமிள் கல்லறை.
எந்த கவிஞனாவது நன்கொடை கேட்டாரா?? வலிகளுடன் வாழ்ந்தவரை இறந்த பின்னும் கொல்லாதே!
பூரி உருளைக்கிழங்கு,பஜ்ஜி சாப்பிட்டால் ஓடிப்போகும் ஜுரம்.பிடித்த உணவிற்கு வரும் ஜுரம்.
காதற்ற ஊசியை விற்க்கும் விவசாயிகள் அதற்கு நாமும் காரணமோ?
பெரியார் அணையும், பென்னிகுயிக்கும் ஆங்கிலேயர்களின் அடக்கு முறையை தான் கேள்விப்பட்டிருக்கிறோம் .தன்னுடைய சொத்தை விற்று அணையை கட்டிய வெள்ளைக்காரர் .
வளர்ப்பு மிருகங்கள்- செல்லப்பிராணிகள் நன்றியோடு இருக்கும் கடிக்காது. ஆனால் இவை அடிக்கும் !!!
நைனிடால் ஏறியும் எழுத்தாளரும்..
வீட்டு செடிகளும் சுயநலமும்..ஆமாம் இல்லை ஊருக்கு போகும் போது தவிக்கும்.
அவன் அவள் ஆக மாறுவது யாரின் குற்றம்??குழந்தையிலிருந்து பாவடை போட்டு அழகு பார்த்து.
விலைமதிப்பில்லா புத்தகத்தை விட சொத்தை எதிர்ப்பார்க்கும் உலகம் !!
கீழ்வாலை குகை ஓவியங்கள்.
காருகுறிச்சியார் சிலை..நாட்டுப்புற இசையை ஏன்? மறந்துவிடுகிறோம்.
வீட்டுக்கு திருட வந்தவன் நண்பனாகிய கதை.அவர்களும் சூழ்நிலையால் அப்படி ஆனவரே.
அருவியில் குளிக்கும் இளைஞர்களிடம் கவனமாய் இருங்கள் !கவனமாய் இருங்கள்! என்று அடித்துக் கொள்கிறது மனது .இளமையில் நண்பனை இழந்த மனம்.
செண்பகத்தோப்பு அணில்கள் சரணாலயம்.
கோபம் மனித குணம் மட்டுமில்லாது தெய்வங்களுக்கும் உண்டு. அது நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும் வரை நல்லது .
ஆதி மனிதனுடைய வேட்டையாடுதல் நின்றுவிட்டது என்று யார் சொன்னது??? நாம் மிருகபலி தடை செய்வதை விடவும் மனிதர்பலியை தடை செய்வதுதான் முக்கியமானது.
ஒவ்வொரு தலைப்புகளிலும் மனதை வருடுவது போல்,யாரோ உள் மனதில் சென்று நம் மனதை அப்படியே படிப்பது போல் இருந்தது. இவரின் தேசாந்திரி புத்தகத்தை படித்து பல இடங்களுக்கு சென்று வந்தேன் .(Google )
இதோ துணையெழுத்து புத்தகத்தைப் படித்து சுற்றிப் பார்த்த இடங்களை உங்களுக்கும் காட்சி ஆக்குகிறேன் . ஒவ்வொரு தலைப்பைப் படிக்கும் பொழுதோ ,படித்து முடித்த உடனே அவர் சொன்னஇடங்களை கூகுளில் தேடி கண்டவுடனே மனம் நிம்மதி அடையும் .அத்தனை உயிரோட்டமான எழுத்துக்கள். உங்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கேன் .
நான் காணாத இடங்கள் இன்னும் எத்தனையோ ???கடைசியில் துணையெழுத்து வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் துணை தேவைப்படுகிறது.அது எதுவானாலும் இருக்கலாம் நட்பாகவும் ,பாசமாகவும், புத்தகமாகவும் என அந்தத் துணை நீண்டுகொண்டே போகிறது.
" துணை இல்லாத வாழ்க்கை சிறகுகள் இல்லாத பறவை போன்றது".
No comments:
Post a Comment