வடிவேலு: மார்கழி போய் தை பிறந்திருச்சு இப்பவே வெயில் மண்டைய பொளக்குது .ஜில்லுனு ஏதாவது குடிக்கலாம்னு பார்த்தா.. எந்தப் பக்கம் பார்த்தாலும் ஜுரம்னு சொல்றாங்க ரிப்பீட்...
சின்ரெல்லா: அட ஆமாண்ணே.. பொங்கல் முடிந்தாலும் முடிஞ்சுச்சு அழையாத விருந்தாளியாக மிஸ்டர் .கொரோனா வந்தார் எங்க வீட்டுக்கு.
எங்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை. சைலண்டா என்ட்ரி குடுத்துட்டாரு .குடும்பதலைவனுக்கு எடுத்த ரிப்போட்டர் தப்பா மகளுக்கு கொடுத்துட்டாங்க.
வடிவேலு:அட அப்படியா..இது என்ன கலாட்டா!
சின்ரெல்லா: ஆமாண்ணா ...அதுக்கு இடையில வேற மகளுக்கு அறிகுறியும் வந்துருச்சு.
தனிமைப்படுத்துதல் டைம் முடிஞ்சு டெஸ்ட் எடுத்தோம் .மகளுக்கு மீண்டும் வந்தது பாசிட்டிவ் எடு திரும்ப டெஸ்ட ஒரு வழியா நெகட்டிவ் வந்துருச்சு .
பள்ளிக்கு அனுப்பலாம் என்று குடும்பத்தோட திருப்பி டெஸ்ட் எடுத்தோம் .குடும்பத் தலைவிக்கு பாஸிட்டிவ் .
அடுத்த டெஸ்ட் நெகட்டிவ் வந்தது .அதுக்கப்புறம் திருப்பியும் ரிப்பீட் ஆயிடுச்சு.
வடிவேலு:இது என்ன வரும்... ஆனா வராது !என்ற மாதிரி இல்ல இருக்கு.
சின்ரெல்லா: அப்படி இப்படின்னு 20 நாள் ஆச்சு.. கடைசியா ஒரு வழியாக கொரோனா எங்களுக்கு விடுதலை கொடுத்தது.
வடிவேலு:ஆனா... உன்ன பார்த்தா கொரோனா வந்த மாதிரி இல்லையே!!
சின்ரெல்லா:ஆமாண்ணா.. அதைத்தான் நாங்களும் சொல்லிட்டு இருக்கோம் .எங்களுக்கு எதுவும் இல்லன்னு நல்லா இருக்கோம் என்று. அதுமட்டுமா உங்க வீட்டு சாப்பாடா எங்க வீட்டு சாப்பாடா பிரெண்ட்ஸ் எல்லாம் நல்லா சமைச்சு கொடுத்தாங்க .நல்ல சாப்பிட்டு தூங்கி, தூங்கி எந்திரிச்சு பிரஷ்சாக இருக்கேன் .அப்பப்ப கணவரும் நல்ல டீ போட்டுக் கொடுத்தார்.
வடிவேலு: அது சரி.எதுக்கும் ஒரு கொடுப்பினை வேணும் இல்ல.
சின்ரெல்லா: கலாட்டா கொரோனா!! நடந்ததை நினைத்து சிரிப்பதா? என்று தெரியவில்லை. ஏறின எடையைக் குறைக்கனும் இல்ல.. அடுத்தது அந்த வேலைதான்.
வடிவேலு: சரி நானும் அடுத்த வீட்டை பார்க்கிறேன்.
No comments:
Post a Comment