சுவாசங்களை அள்ளித்தந்த எங்கள்
அன்னையரை.....வெறும் தக்கையாக்கி தூக்கி
செல்லும் மானிடா!
பின்னால்....
நாங்களும் பயணிக்கிறோம்.....
சுவாசமேயில்லாமல்.....
நடைபிணங்களாய்என் மரத்தாயின் இறுதி
யாத்திரையில் கலந்து கொள்ள எம்மினமே
திரண்டு வருகின்றனர்.....
ஆனால் உன் இறுதி
யாத்திரையில் கலந்துக் கொள்ள இருபது
பேருக்கு மேல் அனுமதி இல்லை எனும் நிலை
வந்தும்.....
இன்னும் மாறாமல் இருக்கும் மானுடமே.....
உன்னை மாற்றிக்கொள்ளடா.....
சுவாசத்தை காசு கொடுத்து வாங்கும் நிலை
வந்தும் மாறாமல் இருக்கிறாய் மானிடமே?
- Kanchana
மரம் தான் மரம் தான் எல்லாம் மரம் தான்...
மழைக்கும் நீ தான் வேண்டும்
மண்ணிற்கும் நீ தான்வேண்டும்..
உயிரினங்கள் வாழ்வதற்கும் நீ
தான் ஆதாரம் என்பதை மறந்தான் மனிதன்...
- Kamatchi
ஏய் யாராவது உள்ள இருக்கீங்களா?
அந்த மரம் கூட நல்லா இருக்கே....
உரிமையை இழந்தோம்
உடமையை இழந்தோம்
- Valarmathy
-Akhiladevi Kumaran
உறைவிடம் எங்கேயோ
எங்கள் உயிரும் அங்கே..
போகதே போகதே தோழியே
சோர்ந்து போய் தூங்க வரும் மடியை விட்டு செல்லூங்க...
நேற்று வைத்த என் உணவு பொந்திலிருக்கு எடுத்துட்டு, என் தோழியை கொடுங்க .....
என் காதலி வருவா விழுது ஊஞ்சலில் ஆட என்ன செய்வேன்..
உன்னை சுற்றி சுற்றி விளையாடியதில் தெரியாமல் நகம் பட்டு விட்டது மன்னித்துவிடு தோழியே...
ஏய் இந்த கரடி அண்ணன் ஒவ்வொரு கட்டையாக உருவி கொடுத்த நாம நட்டு விடுவோம் இல்ல...
மக்கள்தொகையை தான் குறைக்க சொன்னாங்க,
தப்பா இந்த ஆளு மரத்தொகையை குறைக்க வந்துட்டான் ...
எங்க நம்ம நரி அண்ணன் காணோம் ,தந்திரமாக சொன்னாத்தான் அந்த மரமண்டைக்களுக்கு புரியும்..
அதை வி்ட்டு விட்டு தலைய தொங்கவிட்டு போன நம்மளையும் சேர்த்து உப்புகண்டம் போட்டுவிடு வாங்க..
இறந்த கால நன்றியுமில்லை..
எதிர்கால அக்கறையுமில்லை..
இரண்டிற்கும் சாட்சியாக நிற்கும் நிகழ்கால நிழல் கொடுப்பவைகளை வேரறுத்து
எதை சாதிக்க போகிறார்கள்???
- Vidhya Nivash







ரொம்ப அழகான கோர்வையாக கவிதைகளை வரிசை படுத்தி
ReplyDeleteஇருக்கிறாய்டா💖👌💖
Thank you akka 😊🙏
ReplyDelete