Thursday, November 18, 2021

கடற்கரை சிந்தனை துளிகள் by Vidhya Nivash

 



கடற்கரை சின்ன வயசிலிருந்தே பார்க்கணும்னு ரொம்ப ஆசை எங்கள் ஊரிலிருந்து அது ரொம்ப தூரம் எப்பயாவது எங்காவது வெளியே போனாலும் அப்பா தண்ணி பக்கம் ஆத்து பக்கம் போக விடமாட்டார்.


அந்த ஆசை எல்லாம் இந்த கொரோனா வந்து தீர்த்து வைத்தது.


செயற்கையை விடுத்து இயற்கைக்கு வந்தோம் வாரவாரம்

எத்தனை அழகு சூரியன் உதிக்க

கடற்கரையிலிருந்து ரசிக்க 

சுண்டல் இல்லை என்றாலும்

கடல் அலைகள் இல்லை என்றாலும்

குதூகலத்திற்கு பஞ்சம் இல்லை

பச்சிளம் குழந்தை முதல் பல்லில்லா குழந்தை வரை மிதக்க இந்த தண்ணீரில்

எத்தனை அதிசயம் கொண்டாய் நீ

சிலநாட்கள் உள்ளே செல்கிறாய்

சிலநாட்கள் பொங்கி எழுகிறாய்

பருவத்திற்கு ஏற்றார் போல் உயிரின விருந்தாளிகள் பல...

முதுகில் அடித்து செல்லும் மீனை கண்டேன்

அடங்கி போய் உன்னை ஆரஅமர ரசித்தேன்

ஆள் உயர அலைகள் அதிலே மீன்களை போல மிதந்து வரும் மக்கள்..

விட்டதை மீண்டும் மடியில் தருகிறாய்

அப்பா நீ எழுப்பும் சத்தத்தில் எண்ண ஓட்டங்கள் நின்று இதைவிட வேறென்ன வேண்டும் அமைதிகொள்

துள்ளி வந்து அள்ளிச்சென்று மீண்டும் கரை சேர்க்கிறாய் என்னையும்,மெய்மறந்து ரசிக்க இரு கண்கள் போதவில்லை,அள்ளி அணைக்க இரு கைகள் போதவில்லை...உன்னை கடக்க கால்கள் பறக்க,மனமோ விரிகிறது...

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Super. ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள் வித்யா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...