ஆரம்பம் என்பது முடிவு அறியா பயணம்
என்னுடைய ஆரம்பம் எது என்று சொல்ல?
இந்த மண்ணில் பெண்ணாய் பிறந்ததையா?
நாவில் வந்த முதல் சொல்லையா?
வீட்டு தரையில் என் கால் ஊன்றியதையா?
முதன்முதலில் பள்ளிக்கு சென்றதையா? ஆசானிடம் பெற்ற அறிவுடைய கல்வியையா?
தாயிடம் கற்ற நிகரில்லா தியாகத்தையா?
தந்தைக்கு அழகு தேவதையாய் மாறியதையா?
மகிழ்ச்சி நிறைந்த பிள்ளைபருவத்தையா?
பூப்பெய்திய நாளில் அடைந்த மாற்றத்தையா?
கல்லூரியில் மாணவியரோடு செய்த குறும்பையா?
திருமணத்திற்கு பின் என் ஆணின் ஸ்பரிசத்தையா?
அதற்கு விடையாய் கிடைத்த பரிசையா?
பரிசினை பிரசிவிக்கும் போது அடைந்த ஆனந்தத்தையா?
பிள்ளையின் கொஞ்சும் மழலை பேச்சையா?
பத்திரமாய் எனை காக்கும் கணவனையா?
பாத்திரமாக விளங்கும் என் மனதையா?
என்மேல் நான் வைக்கும் நம்பிக்கையா?
எது ஆரம்பம் என்று தெரியாத போது
முடிவை எதிர் நோக்கும் என் மனதின் நிழலையா?
இதுவே என் நிலையா?
ஆரம்பம் தெரியாமல் ஓர் முடிவில்லா பயணம்
என்னுடன் பயணிக்க என் எழுத்தின் மூலம் உங்களுக்கு
இதுவே என் அழைப்பின் ஆரம்பம்
குட்டி கதை
கிராமத்தின் தெருவெங்கும் விழாக்கோலம். ஊர் பொது மண்டபத்தில் கூடியிருந்தனர் மக்கள். ' வாசு! இந்தா, இந்த மேஜையை நடுவுல போட்டு, அதற்கு மேலே வள்ளி வீட்டுல வாங்கிட்டு வந்த பட்டுப்புடைவைய நல்லா, அழுத்தமாக விரித்து விடு. அதற்கு மேலே அந்த பெட்டியை வை' என்று சொன்னார் ஊர் பெரியவர். 'அக்கா! இந்தாங்க . சாப்பிட ரொட்டி, முறுக்கு, பொரி எல்லாம் கொண்டாந்திருக்கிறேன். இது முடிஞ்சி போச்சுன்னா நம்ம காளையண்ணன் வெளில பஞ்சு மிட்டாய் கடையும் சின்னக்கா கல் கோனாவும் வித்திட்டுருக்காங்க". என இலஞ்சி சொல்ல, பக்கத்திலிருக்கும் மக்கள் ஆ! என வாய் பிளந்து பார்த்தனர். இதைப்பார்த்த மற்றவர்கள் தங்கள் வீட்டிலிருக்கும் தின்பண்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருந்தனர். 'எல்லோரும் அமைதியாய் இருங்க. யாரும் பாதிலே எழுந்து வெளியே போகக்கூடாது. மற்றவர்களுக்கும் மறைக்க கூடாது' என பஞ்சவர்ணம் மக்களை அதட்ட, மக்களும் மௌனம் காத்தனர். இளஞர்களின் கூட்டம் மட்டும் பெண்களை கிண்டலடத்தபடி இருந்தனர். ' வயரு எல்லாம் சரியா இருக்கான்னு பாரு' என பள்ளி ஆசிரியர் சொல்ல வாசுவும் அதை சரிபார்த்து, ஆம் என தலையசைத்தான். 'ஆறு மணிக்கு காட்சி ஆரம்பிக்கும். ஒன்பது மணி வரை யாருக்கும் இடைஞ்சல் பண்ணாம பாருங்க' என மறுபடியும் ஊர் பெரியவர் சொல்ல, மணி ஆறை நெருங்கியது. கூட்டம் அமைதியாக இருக்க, முதல் திரைப்படக்காட்சி ஆரம்பமானது முதன் முதலில், அக்கிராமத்தின், ஊர் தொலைக்காட்சிபெட்டியில்.
No comments:
Post a Comment