Thursday, January 27, 2022

இந்த வார சிந்தனை -Veena Shankar

 


மரத்தினால் ஆன ஊன்றுகோல் நடுவில் 

மனத்தினால் ஆன ஊன்றுகோல் நம் கரங்கள்

 நீ எனக்கு நான் உனக்கு

பரபரப்பான வாழ்க்கை முடிந்தது

படபடத்த தருணங்கள் ஓய்ந்தது

தனித்திருந்த காலம் போதும்

இனித்திருப்போம் அடுத்தவருக்கு உதாரணமாய்

 கரம் பற்றுவதென்பது திருமண நிகழ்வு மட்டுமல்ல, நம் வாழ்நாளின் வெற்றியும் கூட

வெற்றி கொடி கட்டி பறந்த மணவாளனை பற்றும் கொடி போல படர்ந்தேன் என் கரங்கள் கொண்டு.

தட்டி கட்ட பிள்ளைகளை மறுத்து

எட்டி நின்று வாழ நினைத்து

டாட்டா காட்டி செல்லும்

சிட்டுக்குருவிகள் இவர்கள்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...