மரத்தினால் ஆன ஊன்றுகோல் நடுவில்
மனத்தினால் ஆன ஊன்றுகோல் நம் கரங்கள்
நீ எனக்கு நான் உனக்கு
பரபரப்பான வாழ்க்கை முடிந்தது
படபடத்த தருணங்கள் ஓய்ந்தது
தனித்திருந்த காலம் போதும்
இனித்திருப்போம் அடுத்தவருக்கு உதாரணமாய்
கரம் பற்றுவதென்பது திருமண நிகழ்வு மட்டுமல்ல, நம் வாழ்நாளின் வெற்றியும் கூட
வெற்றி கொடி கட்டி பறந்த மணவாளனை பற்றும் கொடி போல படர்ந்தேன் என் கரங்கள் கொண்டு.
தட்டி கட்ட பிள்ளைகளை மறுத்து
எட்டி நின்று வாழ நினைத்து
டாட்டா காட்டி செல்லும்
சிட்டுக்குருவிகள் இவர்கள்.
No comments:
Post a Comment