மார்கழி பனியில்... போர்வைக்குள் சுருண்டிருந்த தன்னை...... முகத்தோடு முகத்தை உரசிக்கொண்டிருக்கும் பூனையினை பார்த்து சிரித்த சின்ட்ரெல்லா....
தனது பிஞ்சு பாதங்களை பூமியில் பதிய வைத்து.... சோம்பலான
நடையுடன் வெளிவரும் தன்னை வரவேற்க காத்திருக்கும் பைரவனையும்,
காமதேனுவையும் பார்த்து சிரித்த சின்ட்ரெல்லா.....
பச்சரிசி போன்ற பற்களை தேய்த்துக்கொண்டிருந்த தன்னை பார்த்து உழுதுகொண்டிருந்த பொக்கைவாய் தெரிய சிரித்த தாத்தாவை பார்த்து சிரித்த சின்ட்ரெல்லா.....
சூரியனின் கதிர்களின் வண்ணங்களை பிரதிபலிக்கும் அளவிற்கு எண்ணெய் தேய்த்து....
பின்னலிட்டு....
கார்மை தீட்டி....
யார்கண்ணும் படக்கூடாது என்று திருஷ்டி பொட்டினை வைத்து....தன் கைகளால் சடக்கொடித்து தன் அரவணைப்பை வெளிபடுத்தி தன்னை பார்த்து சிரித்த அன்னையை பார்த்து சிரித்த சின்ட்ரெல்லா......
ஒற்றையடி பாதையின் இருமருங்கிலும்
ஓங்கி வளர்ந்த கம்பு, சோளக்கதிர்களினை கொத்திக்கொண்டிருக்கும் சிட்டு குருவிகளின் ஓசையோடு....
மிதிவண்டியில் சுமந்து கொண்டு தன் வியர்வை துளிகள் ஒற்றியெடுத்து தன்னை அனுதினமும் சுமக்கும் தந்தை வெளிபடுத்திய சிரிப்பினை பார்த்து சிரித்த சின்ட்ரெல்லா.....
நாளை புலம் பெயரும் இடம் எவ்வாறிருக்கும் என்ற சிந்தனையுடன்...... இன்று நடந்த இன்றைய நிகழ்வுகளை அசைபோட்டபடியே....வானில் நட்சத்திரங்களையும்,நிலவின் ஒளியினையும், தவளைகளின் கரகர குரல்களை காதுற்று.....
தன்னை தானே பார்த்து சிரித்த கிராமத்து சின்ட்ரெல்லா.....
பனியின் குளுமையை உணரமுடியாமல்...மின்விசிறியின் சூழலின் வெட்கையான காற்றினால்.....
உறக்கமில்லாமல் தவித்த சின்ட்ரெல்லா....
தன் வருகையை வரவேற்க காத்திருக்கும் பூனை,பைரவன்,காமதேனுவின் அருகாமை இன்றி தவித்த சின்ட்ரெல்லா......
தன்னை பார்த்து ரசிக்க யாருமில்லாமல் இயந்திரமாய் ஓடிக்கொண்டிருப்பவர்களை பார்த்து தவித்த சின்ட்ரெல்லா.....
கண்ணாடியில்
நாகரீகம் என்று வெட்டிய தன் கூந்தலை பார்த்து தவித்த சின்ட்ரெல்லா.....
எங்கு திரும்பினாலும் வாகனங்களினால் ஏற்படும் புகை மண்டலம்....
பொறுமையினையிழந்து முன்னேறி செல்வதற்காக எழுப்பப்படும் வாகனங்களின் அநாயாசமான ஒலிகளை கேட்க முடியாமல் தவித்த சின்ட்ரெல்லா.....
புலம் பெயர்ந்த இடத்தினால்.... இன்றைய நிகழ்வுகளை அசைபோட்டபடியே.....
வானினை ரசிக்க முடியாமல் வானுயுர்ந்த கட்டிடங்களும்....
வண்ணங்களால்
நிலவினையும்
நட்சத்திரங்களையும் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் தன் அறையினுள்.....
தன்னைத்தானே பார்த்து தன் சிரிப்பினையே மறந்து போனால் இந்த நகரத்து சின்ட்ரெல்லா.....
அழகான வரிகள்👏👏💐
ReplyDeleteஅருமை
ReplyDeleteWow super da
ReplyDeleteVery nice da
ReplyDeleteSuper akka
ReplyDelete