கண்கள் காண தவிக்கிறது....
கால்கள் ஆட ,ஓட தவிக்கிறது...
கைகள் எழுத தவிக்கிறது...
மனமோ ஏன் ஏன் என்று பல கேள்விகள் எழுப்ப தவிக்கிறது....
மனதிற்கும் ,அறிவுக்கும் இடையே உள்ள சண்டையில் இதெல்லாம் அறியாமை அல்லவா என்று கேட்க தவிக்கிறது...
சரியான நேரத்தில் கருத்தை வெளியிட முடியாமல் தவிக்கிறது மனம்..
பல தவிப்புகள் உள்ளே கொட்டிக் கிடக்கிறது கைக்கு மட்டுமா விலங்கு மனதிற்கு பெரிய விலங்கு ,கழுத்துக்கு விலங்கு ,காலுக்கு விலங்கு பல அதற்காக நிரூபிக்கப்பட்ட அறிவியல் தகவல்களுடன் சில நேரங்களில் தோன்றும் அலங்காரப் பொருள் என்றோ..
பல தவிப்புகளை முறியடித்து பல துறைகளில் வெற்றிக்கண்டு ...இன்று நாம் சுதந்திரமாக தினமும் கொண்டாட காரணமாக இருந்த பலரின் குறிப்பாக பல பெண்களின் விடாமுயற்சியை எண்ணி மகிழும் நாள் இன்று.
No comments:
Post a Comment