அறிவிற்கும் அழகிற்கும்
பஞ்சம் கிடையாது
புரட்டலுக்கும் புரிதலுக்கும்
இடையே நடக்கும் போட்டி
யார் வந்து சீண்டுவர் என்று
காகிதத்திற்கும் கடிதத்திற்கும்
உள்ள வேறுபாடு இங்கே
யார் அறிவர் என்று
ஆனால்
காதலுக்கு மட்டுமே
துணை போகும் கருவிகள் இரண்டு
இங்கே
ஒன்றையொன்று இன்னவர் இவர்
என புரிந்து கொள்ளாமல்
படித்தால் மட்டுமே அறிய முடியும்
இருவரையும்
புரட்டுவதை காட்டிலும்
- Veena
அழகோவியம் இரண்டுமே,
இரண்டையும் படிக்க நேரத்தோடு
பொறுமையும் வேண்டுமே,
ஒருவரின் சிந்தனையில் வடித்த
எழுத்துக்கள் ஒன்றாகி ஒரு
சிலையை வடிக்க, பல
உருவெடுக்கும் பலரின்
சிந்தையில்... வருவாள், வளர்வாள்,
விரிவாள்,மறைவாள்..
- Vidhya

No comments:
Post a Comment