Thursday, December 18, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


அறிவிற்கும் அழகிற்கும் 

பஞ்சம் கிடையாது

புரட்டலுக்கும் புரிதலுக்கும் 

இடையே நடக்கும் போட்டி

யார் வந்து சீண்டுவர் என்று 

காகிதத்திற்கும் கடிதத்திற்கும்

உள்ள வேறுபாடு இங்கே

யார் அறிவர் என்று 

ஆனால் 

காதலுக்கு மட்டுமே

துணை போகும் கருவிகள் இரண்டு

இங்கே

ஒன்றையொன்று இன்னவர் இவர்

என புரிந்து கொள்ளாமல்


படித்தால் மட்டுமே அறிய முடியும்

இருவரையும்

புரட்டுவதை காட்டிலும்

- Veena 

அழகோவியம் இரண்டுமே,

 இரண்டையும் படிக்க நேரத்தோடு

 பொறுமையும் வேண்டுமே,

ஒருவரின் சிந்தனையில் வடித்த

 எழுத்துக்கள் ஒன்றாகி ஒரு

 சிலையை வடிக்க, பல

 உருவெடுக்கும் பலரின்

 சிந்தையில்...  வருவாள், வளர்வாள்,

 விரிவாள்,மறைவாள்..

- Vidhya

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...