எதற்கு எது விலங்கு?
மதுவை அருந்தாமல் இருக்க கைக்கு விலங்கா?
கையில மது அடைபடூம் என்பதில் மதுவிற்கு விலங்கா?
இரண்டு விலங்கிற்கும் காரணம்
மாது
எதுவும் நிரந்தரமில்லை இவ்வுலகில்
பூட்டப்பட்ட விலங்குகள் திறக்கலாம்
பாதையும் மாறலாம்
மனம் என்னும் மந்தி
மரம் விட்டு மரம் தாவுவது போல்
எதிர்மறை விடுத்து நேர்மறை
சிந்தனையை அணுகும் போது
ஆக்கம் பிறக்கும் நோக்கத்தோடு
ஆதிக்கம் செய்யும் எதனையும்
- Veena
பலதையும் மறக்க இவன் வசமாக
கடைசியில் இவனை மறக்க
முடியாத கூட்டம்...
எதையும் விலங்கிட முடியா,
விளங்கிட முடியா கூட்டணி,கூட்டம்
கலையும் போதே மாட்டிக்
கொண்டது புரியும்.
- Vidhya
கலரும், காலரும் கவரும் காதலில்🫶
கதறும் குடும்பம்
கண்ணை மறைத்தாலும்,
உடல் காட்டிக் கொடுக்கும் விரைவில்😔
கண்ணாடி உடைத்து
விலங்கிலிருந்து தானே விடுதலை பெறுவர்!
- அகிலா

No comments:
Post a Comment