Thursday, January 1, 2026

எதற்கு எது விலங்கு? by Veena ,Akhiladevi and Vidhya



 எதற்கு எது விலங்கு?


மதுவை அருந்தாமல் இருக்க கைக்கு விலங்கா?

கையில மது அடைபடூம் என்பதில் மதுவிற்கு விலங்கா?


இரண்டு விலங்கிற்கும் காரணம்

மாது


எதுவும் நிரந்தரமில்லை இவ்வுலகில்

பூட்டப்பட்ட விலங்குகள் திறக்கலாம்

பாதையும் மாறலாம்

மனம் என்னும் மந்தி 

மரம் விட்டு மரம் தாவுவது போல்

எதிர்மறை விடுத்து நேர்மறை

சிந்தனையை அணுகும் போது

ஆக்கம் பிறக்கும் நோக்கத்தோடு

ஆதிக்கம் செய்யும் எதனையும்

- Veena 


பலதையும் மறக்க இவன் வசமாக

 கடைசியில் இவனை மறக்க

 முடியாத கூட்டம்...

எதையும் விலங்கிட முடியா,

விளங்கிட முடியா கூட்டணி,கூட்டம்

 கலையும் போதே மாட்டிக்

 கொண்டது புரியும்.

- Vidhya 


கலரும், காலரும் கவரும் காதலில்🫶


கதறும் குடும்பம் 

கண்ணை மறைத்தாலும், 

உடல் காட்டிக் கொடுக்கும் விரைவில்😔


கண்ணாடி உடைத்து 

விலங்கிலிருந்து தானே விடுதலை பெறுவர்!

- அகிலா


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...