நிஜமான ஈபிள் கோபுரம் மண்ணில்
பொய்யான கோபுரம் கயிற்றில்
வண்ண வண்ண கிளிப்களே மனிதர்கள்
பற்றியிருக்கும் கயிறே மனிதனின் ஆசைகள்
நீ கடித்தாலும் உன்னை நாடும் மனிதர்கள் கோடையிலும் மழையிலும்
நீ பற்றும் பொருள் ஏதாகிலும் பரம் பொருளே உன் கீழ் ஃபோட்டோ கடையிலே
வாழ்வின் பற்றுதலுக்கு சாட்சி நீ. உன் நிலை நேரானாலும் தலைகீழானாலும்
வடிவம் மாறினாலும் நிறம் மாறினாலும் நான் செய்யப்படும் பொருள் மாறினாலும் என் நோக்கம் பொருளை பற்றுவதே
வரிசையாய் வரிந்து கட்டி நிற்பது துணியின் வரவுக்காக..
எங்களிடம் வந்தாரை காய வைப்போம் மொட்டைமாடியில் வெயிலின் வருகையால் காற்றின் வேகத்தால் எங்கள் பிடிவாதத்தால்
எங்களின் நிலை/குரல்
வவ்வால் போல் தொங்கினாலும் துணியை கைவிடோம்
பறந்து செல்லும் பணத்தை சிறை பிடிப்போம்
ஏறும்புகள் கவர்ந்து செல்லும் பொருளை காத்து நிற்போம்
சீறிப்பாயும் காகிதங்களை விளையாட்டாய் பிடிப்போம்
சில்லென்ற காற்றில் மிதக்கும் கேசத்தையும் கட்டியணைப்போம்
நல்ல கற்பனை. ஆனால் உண்மை. வாழ்த்துக்கள்.
ReplyDelete