Tuesday, September 13, 2022

"அந்த ஒரு நிமிடம் " கவிதை by Veena Sankar

 


அந்த ஒரு நிமிடம்


அந்த ஒரு நிமிடம்   நான்  பேசியிருந்தால்

உண்மையின் தத்துவத்தை விளக்கியிருப்பேன்


அந்த ஒரு நிமிடம்  நான்  உதவி  செய்திருந்தால் 

என் வாழ்வில்   மனநிம்மதி கொண்டிருப்பேன்


அந்த ஒரு நிமிடம் நான் தாமதமாக  போயிருந்தால் 

என் வாழ்வில் பெரிய வாய்ப்பை   இழந்திருப்பேன்


அந்த ஒரு நிமிடம் நான்  விழித்திருந்தால்  

என்   கணவனின்  அன்புக்கு   பாத்திரமாகியிருப்பேன்


அந்த ஒரு நிமிடம்  நான்  கணவனோடு  சென்றிருந்தால் 

என் கணவனின் மனத்தை மாற்றியிருப்பேன்


அந்த ஒரு நிமிடம்  நான் மௌனமாக  இருந்திருந்தால்

கணவனிடமிருந்து விவாகரத்து  பெறாமலிருந்திருப்பேன்

 

அந்த ஒரு நிமிடம் நான் தூங்காமல் இருந்திருந்தால் 

என் தந்தையின்  உயிரை காப்பாற்றியிருப்பேன்


அந்த ஒரு நிமிடம்  நான் தனித்திருந்தால்

வேலையில்  கூடுதல் கவனம் செலுத்தியிருப்பேன் 


அந்த ஒரு நிமிடம்   நான் மனம் மகிழ்ந்திருந்தால்

காதலுக்கு வெற்றி கொடுத்திருப்பேன் 


அந்த ஒரு நிமிடம் நான்  மௌனமாய்  இருந்திருந்தால்

என்  பொறாமை குணத்தை புதைத்திருப்பேன்


அந்த ஒரு நிமிடம்   நான் சமாதானம் அடைந்திருந்தால் 

பேராசை வேண்டாம் என முடிவெடுத்திருப்பேன் 


அந்த ஒரு நிமிடம் நான் சோர்ந்து  இருந்திருந்தால் 

அடுத்த தலைமுறைக்கு  நல்லவளாகயிருந்திருப்பேன்


அந்த ஒரு நிமிடம் நான் உண்மையை சொல்லியிருந்தால் 

தோழியிடம்  நம்பிக்கையற்றவளாக  மாறியிருப்பேன்


அந்த ஒரு நிமிடம்  நான்  பொய் சொல்லியிருந்திருந்தால் 

என் வாழ்வில் முன்னேறியிருப்பேன் 


இவை யாவும் நாம் காணும் சந்தர்ப்பத்தின் அந்த ஒரு  நிமிடம் தான்


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...