"காற்றை போல் மிதக்க
கடலை போல் ஆழமாக
நெருப்பை போல் சுட
ஆகாயம் போல் விரிய
நிலத்தைப் போல் கிடக்க
பஞ்சபூதங்களும் கலந்த கலவை"
"என்ன கேட்க
யார் சொல்ல
என்ன செய்ய
யார் பார்க்க
என்ன நினைக்க
யார் மகிழ
நீ மகிழ ...
சும்மா இரு"
"எடுக்க எடுக்க
கொடுக்க கொடுக்க
நிறையும் அன்பும் பண்பும்"
"இதுவும் கடந்து போகும்
எதுவும் மறந்து போகும்
நிலைத்திருக்க மௌனத்தில்"
"தன்னலமற்ற பொதுநலத்திற்கு
ஒரு கணம் போதுமே"

No comments:
Post a Comment