Wednesday, September 14, 2022

" பின்னல்கள் "கவிதை by Veena Sankar

 பின்னல்கள்



இழைகளின் ஒற்றுமையை பறைசாற்றுவது 

நேர்த்தியான பின்னல்கள் 

பகுதியாய் பிரிந்திருந்தாலும் அதை ஒன்று 

சேர்ப்பது அழகான பின்னல்கள்  

மாலையாகி கோர்க்கப்படுவதும் 

பூக்களின் பின்னல்கள்

மரத்தின் விழுதுகளும் கொடிகளின் வளைவுகளும்

இயற்கையின்  பின்னல்கள் 

சிகரத்தை தொட்டாலும் ஒன்றுபடுவது 

மனிதநேயம்  எனும்  பின்னல்கள் 

சிக்கிக்கொண்ட வாழ்க்கையை சமாளிக்க 

பழகுவது பின்னலிட்ட கோலங்கள் 

மின்சார  இணைப்பிற்கு தேவைப்படுவது 

உலோகங்களின் பின்னல்கள் 

மொத்தத்தில் உலகமே பல கலவைகளின் பின்னல்கள்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...