Friday, January 21, 2022

நீ அறிவாயா by Vidhya Nivash



சின்னச்சின்ன சிறு அரும்பு வருமா என்று காத்திருந்து..

வாடாமல், அழுகாமல் விழித்திருந்து ,

தேன் துளி போல,இலை நுனியில் நீரை பார்க்கும் போது மனம் குதூகலிக்கும்,

பூவில்லை, பழமில்லை இருந்தாலும் பூக்கிறாய், இனிக்கிறாய் உள்ளுக்குள்,

உயிர் பிறப்பது போல் உணர்கிறேன் ஒவ்வொரு இலையும் முழுமையாக விரியும் போது . ..

என் பாசம்,நம் உறவு

பிறர் அறியார்

நீ அறிவாயா!!!

4 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...