Sunday topic
அது மட்டும் நடந்து இருந்தால்.
1984 ஆம் வருடம்.குளிக்க போன என் கணவர் என்னை கூப்பிட்டு நான் ஒன்னு காட்டுவேன் அது பார்த்து இயில்அழக்கூடாது,
கத்தி ஆர்பாட்டம் செய்யகூடாது என்று சொன்னார்.இல்லை என்று சொன்னதும் அதை காட்டினார்.அது ரத்தம்.உடனே நான் கத்த
ஆரம்பித்தேன்.உடனே இது நான் எச்சில் துப்பும்போது வந்தது .கத்தாமல் டாக்டர்கிட்ட போகலாம்.சீக்கிரம் கிளம்பு என்றதும்
வேலை எல்லாம் முடித்து போனோம்.
அங்கு எல்லா டெஸ்ட் பண்ணி ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்தும், நாளை சனிக்கிழமை இருதயத்தில் ஓட்டை இருப்பது
பார்த்து ஆப்ரேஷன் செய்யணும் என்றார்கள் .அன்று சனிக்கிழமை நான் இன்று பண்ஐணுங்கள் என்று கேட்டதும் " இன்று
பரிசோதனை இடம் பழுது பார்ப்பதால் ஞாயிறு விடுமுறை, திங்கள் கிழமை செய்வோம் " என்றனர்.இன்னும் இரண்டு
நாள்கள் இருக்கணுமே என்று கவலைப்பட்டோம்.
ஆனால் அதுமட்டும் பண்ணி இருந்தால்(நடந்து இருந்தால்) என் கணவர் உயிர் பிரிந்து இருக்குமாம்.அது பண்ணாமல் கடவுள்
காப்பாற்றினார்.
அதன்பிறகு 16 ஆண்டுகள் உயிருடன் இருந்தது எங்கள் அதிர்ஷ்டம்,கடவுள் அருள்.


No comments:
Post a Comment