அடைப்பட்ட சிலர் மனதிற்கும்,
உன்னைப்போல் சுதந்திரமாக பறக்க ஆசை தான்...
நீயும் நானும் ஒரே
உலகில் வாழ்கிறோம்... ஆனால்,
கட்டுப்பாடு என்ற கட்டமைப்புக்குள் நான்....
உனக்கு உலகெங்கும்
ரசிகர்கள்...
உன்னை ரசிக்க கூட நான் அனுமதி பெற வேண்டும்...
நீ மட்டும் எப்படி தனியாக பறக்கிறாய்???உன்னை எப்படி இந்த
சமூகம் தனியே பறக்க அனுமதி தந்தது???
ரகசியம் சொல்வாய் பட்டாம் பூச்சியே..
சிறகற்ற நான் சிறகுகளுடன் பறக்க!!!

No comments:
Post a Comment