இது பட்டாம்பூச்சியா? ஓவியமா ?உற்றுப் பார்த்தால் ஓ பட்டாம் பூச்சியே தான்.. இன்னும் நன்றாகப் பார்த்தால் உன்னுடைய கண்களும் கொடுக்கும் எத்தனை அழகு.
அழகான வாழ்க்கை பாடத்தை சொல்கிறாயே தோழியே முட்கள் நிறைந்த மரத்தில் அழகாக பற்றிக் கொண்டு சில நிமிடமே நீ இருந்தாலும் மனதில் அமைதியே..
வண்ணத்தால் எல்லோரின் உள்ளத்தில் இடம் பிடித்தாலும் உன்னை உற்று நோக்கும் போது ஆச்சரியம்தான்...
உன்னை ரசிக்காதவரே இருக்க மாட்டார்!
காதலிப்போர் மனம் பட்டாம்பூச்சி போல் படபடக்கும் என்பர். ஆனால் எனக்கோ கருவுற்றபோது மருத்துவர் சொன்ன பட்டாம்பூச்சி அசைவு தான் ஞாபகத்திற்கு வருகிறது...
பூச்சி என்றால் பயம் கொள்பவரும் வண்ணத்துப்பூச்சியை கண்டால் ஒரு நிமிடம் வட்டம் இடுவார் ...

No comments:
Post a Comment