Monday, July 4, 2022

இந்த வார தலைப்பு- படம் பாருங்கள்; பதிவிடுங்கள்! by SuganthaDevi

 

Taken by S.Kumari Amma

பட்டாம்பூச்சியே!

நீ தோன்றி பூச்சியாய் மாறி விண்ணில் பறந்தாய் !

நீ பறக்க சிறகுகள் கிடைத்தது உனக்கு ஆனால் பெண்ணினம் புழுவாகி மட்டுமே இருக்கிறாள்!

அவள் கூண்டில் அடைபட்ட கிளி !உன்னைப்போல் பறக்க 

அவளுக்கும் ஆசை உண்டு!

ஆனால் சிறகுகள் இல்லை 

அவள் எண்ணம் மட்டும்தான் 

சிறகடிக்கும் வேறு வழியில்லை!

மனிதர்கள் தொட நினைத்தால் 

மின்மினி போல் மறையும் மாயமென்ன !உன் வண்ணங்கள் யார் கொடுத்த நினைவுச் சின்னங்கள் !

நீ தேனை மட்டும் கவரவில்லை கவிஞர்களின் மனதையும் கவர்ந்தாய் !பூக்களின் மேல் மட்டும் தான் அமர்வாயா? என் கைகளும் காத்திருக்கிறது

உன் வருகைக்காக....

நான் வரைய ஆரம்பித்த காலத்தில் 

நீயும் சிறு இடம் பிடித்தாய் ,

உனக்கு வண்ணம் தீட்ட கைகளும் உண்டோ?

நீண்ட காலத்திற்குப் பின் என் கைகள் பேனா பிடித்தது உன்னால் பட்டாம்பூச்சி








No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...