Tuesday, August 30, 2022

இந்த வாரம்-நிழற்படம் அல்ல நிஜ வரைப்படம்-பெண்ணின் ஓவியம் by Vidhya Nivash

 


 "நிஜத்திற்கும் நிழலுக்கும் போட்டி

கண்ணில் திரையோ

உன்னை பார்க்க மறந்தேன்

பூவுக்கும் உனக்கும் போட்டியோ

இருவரும் தியானத்தில்..

வண்ணத்துப்பூச்சியும் நானும் தோற்றோம் உன்னிடம் 

மேலோட்டாக பார்க்காமல்

ஆழ்ந்து பாருங்கள் நான் மிளிர்வேன் மின்மினியாக.."


"கண்ணில் பட்டவுடன் ஓவியம்

பின்னே உணர்ந்தேன் பெண்ணே😊"

இந்த வாரம்-நிழற்படம் அல்ல நிஜ வரைப்படம்- பெண்ணின் ஓவியம் by Veena Shankar

 


"மூடிய மலரில் வாசமோ அல்ல விரிந்த மலரில் வாசம் அதிகமோ என ஆராய்ந்து பார்க்கும் வண்ணத்துப்பூச்சிக்கு புன்சிரிப்பும் சிரிப்பும் ஒன்றோ என்ற சந்தேகம்"


"நிழலோ நிஜமோ லயித்தேன் விழியால்"


"காவியம் படைத்திடுமா இந்த கண்கள்

கவியும் பாடிடுமா இந்த செவ்விதழ்கள்

விரியும் நாசிகளால் ஆவி சுவாசிக்குமா

விரைந்து வரும் வண்டுகளுக்கு சிரிப்பு இரையாகுமா

அடர்ந்த காட்டில் தொடர்ந்து வரும் மழைக்கு புருவங்கள் குடையாகுமா

மொத்தத்தில் விடையானது வண்ணத்துப்பூச்சியான நான் மட்டும் அழகல்ல பெண்ணான நீயும் தான்"


"மலரும், (மலரும்) மங்கையும்"

Saturday, August 20, 2022

இந்த வார படம் "பேசட்டுமே" by Veena Shankar

 


 காகிதமாக இருந்திருந்தால் உன்னை கசக்கியிருப்பேன்

நீ என் சகிதமாக இல்லாதிருந்தால் உன்னை வெறுத்திருப்பேன்

ஓவியனாக இருந்திருந்தால் உன்னை வரைந்திருப்பேன்

கவிஞனாக இல்லாதிருந்தால் உன்னை நிஜமாய் அறிந்திருப்பேன்

நான் என்னையே மறந்ததால் 

உன்னிடம் மயங்கியதால் பேச நாவில்லாமல் உன் உறக்கத்தை கலைக்க விரும்பாமல் அடிமையாய் அமர்ந்தேன் உன்னருகில்

ஓய்வின்றி உழைத்த கணவனிற்கு உறங்காமல் விழித்து காக்கும் மனைவி

ஓவியனின் தூரிகையில் உதித்த கற்பனை படம்

தினமொரு சிந்தனை by Veena Shankar

 


இன்றைய சிந்தனை

நினைவிலிருந்து நீங்காத எந்த செயலும் எவ்வளவு காலமானாலும் நம் நினைவிலிருக்கும்

இன்றைய சிந்தனை

தேவையில்லாத இடத்தில் இருக்கும் மனி தனும் பொருளும் அதன் எதிர்கால தேவையை உணராத அறிவும் பயனில்லை

காதலன்

தான் குருடியாய் இருந்திருக்கலாம் என்றாள் உன்னை காதலித்த கண்ணழகி ஒருத்தி

தான் ஊமையாய் இருந்திருக்கலாம் என்றாள் உன்னை காதலித்த பேச்சழகி ஒருத்தி

தான் ஊனமாய் இருந்திருக்கலாம் என்றாள் உன்னை காதலித்த பேரழகி ஒருத்தி

நானும் நானாகவே இருந்திருப்பேன் உன் பார்வை, பேச்சு, அழகு ஆகியவற்றை காதலிக்காத வரை

நான் கருமியானேன் மனதாலும் செயலாலும் உன்னை காதலித்த பெண்களிடம்

ஆனால் மௌனமானேன் உன்னிடம் என் காதலை சொல்ல வெட்கப்பட்டு

தேனீ! தேனும் நீ

பூவில் உள்ள தேனை தெரிந்து உணர்ந்து, இருந்து நுகர்ந்து, கவர்ந்து கொண ர்ந்து, தேனடையில் விழுந்து கிடக்கும் தேனை ரசிப்பதில் உள்ள ஆனந்தம் அமிர்தம்

 இன்றைய சிந்தனை

பிறக்கும் போது வரும் சிசுவின் அழுகைக்கும் மரணத்தின் போது துயரத்தில் மற்றவர்க்கு வரும் அழுகைக்கும் இடைபட்டது தான் மனிதனின் வாழ்க்கை

 இன்றைய சிந்தனை 

நம் மனதின் எதிர்ப்பை மீறி வரும் எதிர்பார்ப்பும் அதன் விளைவையும் நம் மனது ஏற்கத்தான் வேண்டும்

இன்றைய சிந்தனை 

தேவை என்ற ஒன்று தேவையில்லாமல் போயிருந்தால் மனிதநேயம் என்ற ஒன்று தேவைபட்டுருக்காது

இன்றைய சிந்தனை

தனிமையில் மட்டுமே சிந்திக்க முடியும். அப்படிப்பட்ட சிந்தனையானது கூர்மையான போர் வாளாகவும் இருக்கலாம்; குன்றி போகும் இளமையாகவும் மாறலாம்





சிந்தனை துளிகள் by Rishi

 




இந்த வார தலைப்பு படம் பார்த்து சிந்தனையை பதிவிடுங்க by Veena Shankar

 


உறக்கம் மழலைக்கு மட்டுமே சினேகம்

வேலைக்கு செல்லும் தாயின் மடி கிடைக்கவில்லையென்றால் தாயின் சேலையில் துயிலும் குழந்தையும் அதன் உறக்கமும் அழகு

கொட்டி கிடக்கும் வேலைகளுக்கு நடுவே

தட்டி கொடுத்து தூங்க வைத்த தாயின் 

வெற்றிக்கு பரிசு மழலையின் உறக்கம்

மன்றாடி பசியமர்த்திய பின் கொண்டாடி வந்த தூக்கம் மழலைக்கு மட்டுமே சாத்தியம்

இந்த வார தலைப்பு படம் பார்த்து சிந்தனையை பதிவிடுங்க by Vedavalli Ramani

 


தாயின் மடி என நினைத்து புடவையில் உறங்கும் மழலையின் முகம் அழகே அழகு

இந்த வாரம் படம் பார்த்து சிந்தனையை பதிவிடுங்க by Kiruthika

 


தன் மழலையின் நித்திரையின் அழகை கண்டு...

மனம் மலர்ந்து - விழித்தபடியே தன்னை மறந்து உறங்கி போகாத தாய் தான் உண்டோ இப்பூலகில்..

இந்த வாரம் படம் பார்த்து சிந்தனையை பதிவிடுங்க by Rishi

 


எதையும் 

சிந்திக்காமல்,

எதிர் காலத்தில்

எதிர் கொள்ளலாம்,

என்ற தைரியத்தில்,

நிம்மதியாக ஓர் உறக்கம் கொள்ளும்

பருவம், குழந்தைப் பருவம்.


அந்த உறக்கமும் கள்ள உறக்கமாக, சிறிது

 நேரம் கழித்து பார்க்கும் போது கண் விழித்து

 சிரித்துக் கொண்டு முகம் பார்த்து நான்

 தூங்கவே இல்லையே என்று சொல்வது போல்

 ஒரு சிரிப்பு...அந்த சிரிப்பு தாயின் கோபத்தை,

 சிரிப்பாக மாற்றும்... உண்மையில் மாயக்

 கண்ணன் தான்.

Sunday, August 14, 2022

" தாவரமே! தா! வரமே! " கவிதை by Veena Sankar


 

தாவரமே!  தா! வரமே! 


தொட்டியில் உன்னை பிரசவிக்கும் மண்ணோடு 

உன் விதையை இட்டு 

அதற்கு தினமும் தண்ணீர் விட்டு 

உன் வருகைக்காக நான் காத்திருப்பதும் 

உன் முயற்சியாலும் சூரியனின் அனுகிரகத்தாலும் 

மண்ணில் நீ,  உன் தலையை மேலே எழும்பச் செய்வதும்


உன் பிறப்பை பார்த்து நான் முதலில் 

ஆச்சரியப்பட்டு நிற்பதும் பின் நீ யார்? என்பதை மறந்து, 

நான் தவிப்பதும் 

ஓரிரு நாட்களில் உன்னை  உன்  இலைகள் கொண்டு  

என்னை  நீ சிலிர்க்க செய்வதும் 

அதற்குள் நீ இன்னவள் தான் என நான்  உன்னை ஓரளவு  

யூகித்துக் கொள்வதும்


ஏழு நாட்களுக்குள் என்னை நான் விஞ்ஞானியாய்

பாவித்து உன்னை  முழுமையாய் அடையாளம் 

தெரிந்து கொள்வதும் 

மேலும் சொற்ப நாட்களில் உன்னை 

நீயே தோட்டத்தில்  விஸ்தரித்துக் கொள்வதும்

என் கொல்லைப்புற தோட்டத்திலும் என் மாடி வீட்டு 

தோட்டத்திலும் உன்னை நான் வைத்து அழகு பார்ப்பதும் 


வீட்டிற்கு வருவோரிடம் உன்னை காட்டி  நான் மகிழ்வதும் 

என் மாடி சுவறில் உன்னை வரிசைப்படுத்தி நான் வைக்க, 

வழியில் செல்வோர் உன்னை பார்த்தும் 

என்  கண்களில் படாதவாறு ஓரக்கண்ணால் 

உன்னை ரசிப்பதும் 


பக்க கிளைகளாலும் இலைகளாலும் நீ உன்னை 

உருமாற்றிக் கொண்டு என் தோட்டத்தை அடைத்து 

கொண்டு அழகு படுத்துவதும் 

உன் வரவில் எனக்கு உன் மேல் ஈர்ப்பு வந்து,  மறுபடியும் 

பல புதிய விதைக் கொண்டும்  சிறிய செடி  கொண்டும் 

உன்னை  நான் தோட்டத்தில் நட்டு வைப்பதும் 


சுப நிகழ்ச்சிகளில் நீ இலவசமாக கிடைத்ததும் 

என் சகோதர சகோதரியர் ஆர்வ மிகுதியால் உன்னை 

வீட்டிற்கு அழைத்து வருவதும்  

உன்னை தோட்டம் அமைத்தும் 

வரிசையில்  வகுப்பில் அமர்த்தும்  புது மாணாக்கன் 

போல சேர்த்து வைப்பதும் 

தோட்டம்  இல்லாதோர்  உன்னை ஒரு பொது  

இடத்தில் நட்டு வைப்பதும் 


அடர்ந்த இலைகளுக்கு நடுவே மலர்களாய் நீ உன் 

புன்னகையை  உதிர்த்ததும்

அதில் தோன்றும்  காய்கள் கொண்டு நிதமும் 

உன் வளர்ச்சியை  நான் சோதிப்பதும் 


பக்குவம் அடைந்த பின் அதை சுயநலத்தோடு பறித்து 

இறைவனுக்கு படைத்து 

என் மனத்தை சுருக்கி முதலில் நான் புசிக்க 

ஆவல் கொள்வதும் 


உன் விளைச்சல் என்னும் வளர்ச்சியால்

நீ என்னை திக்குமுக்காட வைப்பதும் 

உன்னை, உண்டு உண்டு  களைத்து  

தேகத்திற்கும் மனதிற்கும் நீ  போதும் என்று தோன்றும்

போது  என் அகம் விரித்து அடுத்தவருக்கு 

கொடுத்து உன்னை  நான் கரை சேர்ப்பதும் 


காணக் கிடைக்காத பொக்கிஷமாய் வாங்கியவர், 

உன் பலனை நினைப்பதும்  அனுபவிப்பதும் 

அவர் வீட்டில் வளர்த்த உன் இனத்தாரை பண்ட மாற்று 

முறை செய்து அவர்  தன் மனதை என் முன்னால்

பெருமிதப்படுத்திக் கொள்வதும்


கொலுவில் வீற்றிருக்கும் அம்பாளுக்கு குளிர்ச்சியை 

ஏற்படுத்த நினைத்து கதிரவன் கூட இல்லாமல் நீ 

வளர்ந்து  செழித்து நிற்பதும் 


அழகுக்காகவே  நீ என் வீட்டு வரவேற்பறை வரை 

வந்து என் இருப்பிடத்தை ஆட்கொள்வதும்


பூமியில் பரந்து விரிந்த உன்னை  நான் ஆராதிக்க நினைப்பதும் 

அதற்காக சில நாட்கள் உனக்காக ஒதுக்கி வைப்பதும்


உன் பன்முகத் தோற்றத்தை, வளர்ந்து நின்ற முளைப்பாரியிலும்  

ஆறு குளங்களுக்கிடையேயும்  மலையில்  விரிந்து  கிடக்கும்

பச்சை கம்பளமாயும்  வறண்ட பூமியிலும்   நீ 

தட்டுத் தடுமாறி வளர்வதும்


உன் புன்னகையின் செழிப்பாலும் பசுமையாலும்  

மாறிக் கொள்வது என் தோட்டம் மட்டுமல்ல என் 

மனதும் தான் 


அப்பப்பா! இத்தனை வடிவம் கொண்ட உன்னை என்றும் 

என்னில் நினைக்க வரம்   கொடுக்க பணித்து விடு இறைவனை  


உன்னை  போல்  மலர்ந்து சிரித்து  மகிழ்ந்து வாழ்ந்திட!


தாவரமே! எனக்கும் தா! வரமே!  


இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...