தூக்கணாங்குருவி கூட்டில் இங்கேயும் குருவியை காணோம்
மனிதன் இயற்கையோடு வாழ்கிறான் என்பதற்கு உதாரணமா இது?
தொட்டில் குழந்தை இயற்கை அன்னையின் வரவிற்கு
கீழே நீர் (பூமி), மேலே மரம் (வானம்), இடையில் மனிதன் ஆடுகிறான்
குழந்தை துயிலும் தொட்டிலில்லை இது, உடலை பதமாக்கும் தட்டிலில்லம்.(தட்டி+இல்லம்)
படத்தைப் பார்த்து ஆனந்தபட்டேன், கையில் கைபேசி இல்லையென்று
அமைதி படைப்பவனுக்கும் படிப்பவனுக்கும் சொந்தமாக வேண்டும்
இது குடிலைப் போன்ற ஈபிள் டவர்
நாட்டில் குருவி கூட்ட,lத்தை அழித்து காட்டில் குருவி கூட்டின் தேவை என்ன?
இலைப்பாறும் மனம் தேடுது வனம்
முதலையில்லா ஆற்றில் நான் முதலாளி
ஏழைகளுக்கு துணியில் தூளி, பணக்காரனுக்கு பணியே தூளியில்
தூக்கத்தின் தாக்கத்திலும் புத்தகத்தின் பக்கத்தை புரட்ட மறுப்பதில்லை நாம்
இதிலுள்ள பஞ்சனையை தவிர்த்து வெறும் கூட்டை கட்டி கொடுத்தாலும் ஒரு கோடிக்கு மேல் தேவைப்படும் நம் நாட்டில் வீடில்லா ஏழைகளுக்கு
ஏசியில் ஒரு இன்குபேட்டர்
தாலாட்ட என் தாயில்லை
வாலாட்ட என் மகனில்லை
சீராட்ட என் தாரமில்லை
பாராட்ட என் மகளில்லை
ஆக தனிமையில்
நான் நானாகவில்லை
- Veena Shankar
இப்படி ஒரு இடத்தில் தூக்கம் தான் வருமோ ?.. இல்லை கவிதை மட்டும் கொட்டுமோ?...
- Kiruthika
பல கோடி மதிப்புள்ள பங்களாவில் பஞ்சு மெத்தையில் படுத்தாலும் கடவுள் படைத்த காற்று ஆகாயம் மரம் குருவிக்கூட்டம் படுக்கும் இடத்தில் படுத்துக்கொண்டே படிக்கும்சுகம் வருமோ வராது.
- Vedavalli Ramani
பாவம் இந்த ஏழை! TV, cinema, Facebook, instagram, WhatsApp, friends, family என்று எந்த கேளிக்கையும் இல்லை- ஆயினும் ….அனைத்தும் பருகும் ஆனந்தத்துடன் இருக்கிறானே!!! காரணம் சர்வலோக நிவாரணி- புத்தகமோ?!
மேலே வானம்; கீழே பூமி; இடையில் சொர்க்கம் என் கைகளில்!!
இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா....!!", பாடியது மரத்தில் குயில்!
-AkhiladeviKumaran
ஏன் மானிடா ?? தூக்கணாங்குருவி போல் தொங்கி பார்க்க நினைத்தாயோ...
புத்தக உலகில் மூழ்கி இருப்பவருக்கு சுற்றியிருக்கும் எதுவும் தெரியாது...
சுற்றி இருக்கும் ரம்மியமான இயற்கை அழகை ரசிக்காமல்... புத்தக உலகில் மூழ்கிக் கிடக்க இங்கே எதற்கு வந்து இப்படி தொங்கிக் கொண்டு இருக்கிறாய்...
பறவை ஒன்று இவன் யாரடா புது தொல்லை நான் அல்லவா கூடுகட்ட இடம் வாங்கி இருந்தேன். இவன் வந்து தொங்கிய கொண்டிருக்கிறான் இவனை எப்படி காலிசெய்ய செய்வது...
- Vidhya Nivash
வீட்டில் கூடு கட்டினேன
- கலைத்தார்கள்
காட்டில் கூடு கட்டினேன்
-அழித்தார்கள்
தொங்கி கொண்டு இருந்தா என்னை
- அகழற்றி விட்டு
நீ மட்டும் அமைதியாக புத்தகம் படிக்கிறாயே
மானிடா இது நியாயமா!!!
- Valarmathy






Akhila,Veena,Vidya,Sakthi,Kiruthika,Vedavalli Ramani....💖💜👌💜💖
ReplyDelete