(பு ) (மு )துமை
காட்சி இருந்தும் கண்களில் கருமை
பூரிப்பில் திளைத்தாலும் முகத்தில் வெறுமை
கைப்பற்றிக் கொண்டாலும் நடையில் சிறுமை
பேச நா இருந்தும் வார்த்தையில் வறுமை
குடும்பங்கள் இருந்தும்
தேடுவது தனிமை
தவிக்கவிட்டாலும் மற்றவரிடத்தில் பிள்ளைகளின் பெருமை
இதுவே நாம் காணும் புதுமை முதுமையில்

குழந்தைகள் எப்போதுமே புதுமை பெற்றோருக்கு,அருமை
ReplyDeleteநன்றி வித்யா
ReplyDelete