Friday, July 11, 2025

லண்டனில் வள்ளுவர் by Akhiladevi Kumaran



 எண்ணும், எழுத்தும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்றுணர்த்தி, 

கசடறக் கற்கவும், கற்ற பின் அதற்குத் தக நிற்க கட்டளையிட்டதும்,

கேடில் விழுச் செல்வங் கல்வியென நாளும் கற்க உந்தியதும், 


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என வினவி, அன்பின் வழியது உயிர்நிலை என்று சொல்லி, 

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வீணென உரைத்ததும், 


இன்னா செய்தார்க்கு, அவர் நாண நன்னயம் செய்து விட அறிவுறுத்தியதும், கனியருப்பக் காய் கவர்ந்தற்று என எளிமையாக புரிய வைத்ததும், 


ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காணக் கூறியதும்,

மெய்ப்பொருள் காண்ப தறிவென மொழிந்ததும்,


மகன்தந்தைக்கு ஆற்றும் உதவியும்,

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்துமுந்தச் சொன்னதும்,


ஆறாதே நாவினால் சுட்ட வடு எனக் கடிந்து, 

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல் என எடுத்துரைத்ததும்,


குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடச் செய்ததும்,

வெள்ளத்தனைய மலர்நீட்டமும், உள்ளத்தனையது உயர்வெனவும் உணர்த்தியதும்…

இப்படி பற்பல சிந்தனைகள் , 

நினைவில் கடல் தாண்டி,

நீந்தி வர, 

சிலிர்ப்புடன், 

ஐயன் - அகிலம் புகழ் வள்ளுவனும், அடியேனும்!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...