பசுமை நோக்கிய விழியின் பயணத்தில்
கரத்தில் திணித்தது இயற்கை
பசுமையை
கொள்வதும் கொல்வதும்
கரத்தின் உடையவரை பொறுத்தே
மனதின் துயரத்தை களைய
அதை ஆற்றும் கலை அறிந்த
துணை வேண்டும் நிச்சயம் வாழ்வில்
ஆபத்தில் உயிர் நிலைக்க
இறுகப் பற்ற மரம்
அவசியமில்லை
கிளை கூட போதும்
என சொல்லும் ஆழ் மனதிற்கு
கிளையின் இலை கூட துணை நிற்கும்
கை கொடுக்க
உயிர் பெற
சில மனிதர்கள் கடமைக்காக
உயிர் தாங்கி நிற்க
தன் துணையின் விலை அறியாது
தூற்றுவதும்
அரங்கேறும்
இந்த வாழ்க்கை எனும்
நாடக மேடையில்
- Veena
இயற்கையின் மொழி புரிந்தால்
யாரும் அனாதையில்லை..
பற்றற்ற உலகில் பற்றிக்கொள்ள
ஒரு கரம்!
- Vidhya

No comments:
Post a Comment