Tuesday, July 29, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



 பசுமை நோக்கிய விழியின் பயணத்தில் 

கரத்தில் திணித்தது இயற்கை

பசுமையை 

கொள்வதும் கொல்வதும் 

கரத்தின் உடையவரை பொறுத்தே


 மனதின் துயரத்தை களைய

அதை ஆற்றும் கலை அறிந்த

துணை வேண்டும் நிச்சயம் வாழ்வில்

ஆபத்தில் உயிர் நிலைக்க

இறுகப் பற்ற மரம்

அவசியமில்லை

கிளை கூட போதும் 

என சொல்லும் ஆழ் மனதிற்கு

கிளையின் இலை கூட துணை நிற்கும்

கை கொடுக்க

உயிர் பெற

சில மனிதர்கள் கடமைக்காக 

உயிர் தாங்கி நிற்க

தன் துணையின் விலை அறியாது

தூற்றுவதும் 

அரங்கேறும்

இந்த வாழ்க்கை எனும் 

நாடக மேடையில்

- Veena 

இயற்கையின் மொழி புரிந்தால்

 யாரும் அனாதையில்லை..

பற்றற்ற உலகில் பற்றிக்கொள்ள

 ஒரு கரம்!

- Vidhya 

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...