இணைந்த கரங்கள் உடலுக்கு முன்னாலும் பின்னாலும்
இருளில் ஒளிரும் தீபத்தின் அளவு பெரிதல்ல
அதன் சுடர் கொடுக்கும் ஒளியே
அற்புதம்
பகலில் இணைந்த உறவு
இரவில் அரங்கேற
இருளும் பகலானது
புகைப்படக்காரராலே
ஒவ்வோர் தினமும்
இரவும் பகலும் இனிதாய் அமைய
வரமும் வேண்டுமே!
வேண்டுவோரிடத்தில் அமையாமல் இருப்பதும்
பெரும் சுமையே வாழ்வில்
இணைந்த கரங்கள் புது உறவு தேட
பிறக்கும் உறவும்
இணையும் சொற்ப நாட்களிலே
புது உறவுகள் கொண்ட பின்னே
சலிப்பும் இயற்கையே அங்கே
வாழ்வும் அதுவே
ஒன்றை விடுத்து மற்றொன்றுக்கு ஆவல் கொள்ளும் என்றும் மனமே!
மனம் அமைதியாக இருக்க
இளைஞனாக மாறுவதும் சிறப்பே!
மனமும் மணம் வீச
அனுசரணையாக இருப்பதும் அவசியம்
- Veena
என் இதய வங்கியில் சேமித்த
நம் காதலை
ஒவ்வொரு நொடியும்
உறைய வைத்து
காலங்கள் ஓடிய பிறகு
அந்த நினைவினை உருக்கி
உறைந்த நொடியை உயிர்பித்து
இரு இதயங்களின் பாதியை ஒன்றாக்கி
நம் காதலை நிலவுக்கு காட்டியதை எண்ணி
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நீ வருவாய் என !!!!!
-பிரியா
காதல் கொள்ள துடிக்கும் இதயம்
பிரிவிலும், பிரியமாக, பிரியாமல்
இருக்க துடிக்க வேண்டுதே..
ஒப்பனை போட்டு ஒத்திகை
பார்க்கும் மேடைகள்,
ஒற்றுமைக்கும் ஒத்திகை பார்க்க
மறப்பது ஏன்?
- Vidhya

No comments:
Post a Comment