Tuesday, July 29, 2025

படமும் கருத்தும் by Veena ,Priya and Vidhya

 


இணைந்த கரங்கள் உடலுக்கு முன்னாலும் பின்னாலும்


 இருளில் ஒளிரும் தீபத்தின் அளவு பெரிதல்ல

அதன் சுடர் கொடுக்கும் ஒளியே

அற்புதம்

பகலில் இணைந்த உறவு

இரவில் அரங்கேற

இருளும் பகலானது

புகைப்படக்காரராலே 

ஒவ்வோர் தினமும் 

இரவும் பகலும் இனிதாய் அமைய

வரமும் வேண்டுமே!

வேண்டுவோரிடத்தில் அமையாமல் இருப்பதும் 

பெரும் சுமையே வாழ்வில்

இணைந்த கரங்கள் புது உறவு தேட

பிறக்கும் உறவும்

இணையும் சொற்ப நாட்களிலே

புது உறவுகள் கொண்ட பின்னே

சலிப்பும் இயற்கையே அங்கே

வாழ்வும் அதுவே

ஒன்றை விடுத்து மற்றொன்றுக்கு ஆவல் கொள்ளும் என்றும் மனமே!

மனம் அமைதியாக இருக்க 

இளைஞனாக மாறுவதும் சிறப்பே!

மனமும் மணம் வீச

அனுசரணையாக இருப்பதும் அவசியம்

- Veena 


என் இதய வங்கியில் சேமித்த 

நம் காதலை 

ஒவ்வொரு நொடியும் 

உறைய வைத்து 

காலங்கள் ஓடிய பிறகு 

அந்த நினைவினை உருக்கி 

உறைந்த நொடியை உயிர்பித்து 

இரு இதயங்களின் பாதியை ஒன்றாக்கி

நம் காதலை நிலவுக்கு காட்டியதை எண்ணி

வாழ்ந்து கொண்டிருக்கிறேன்   

நீ வருவாய் என !!!!!



-பிரியா

காதல் கொள்ள துடிக்கும் இதயம்

 பிரிவிலும், பிரியமாக, பிரியாமல்

 இருக்க துடிக்க வேண்டுதே..

ஒப்பனை போட்டு ஒத்திகை

 பார்க்கும் மேடைகள்,

ஒற்றுமைக்கும் ஒத்திகை பார்க்க

 மறப்பது ஏன்?

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...