பறக்க சிறகு இருந்தும் கால்கள்
முடக்கப்பட்டது கயிறு
என்னும் ஆயுதத்தால்
பெண்களும் ஒடுக்கப்பட்டனர் ஆளுமையால்
தான் கொண்ட துன்பத்தால் உணர்ந்தாள் பறவையின் வருத்தத்தை
முடிச்சை அவிழ்த்து
பறக்க தூண்டினாள்
இளம் பறவையை
எப்போதும் தூண்டில்
போட்டால் மீன்கள் சிக்குவதில்லை
அவை இனம் சேரவும்
குஞ்சு பொரிக்கவும் காலமும் தேவையே!
அது போலவே பறவையும் அதன் சுதந்திரத்தை அனுபவிக்க கயிறு அறுபடவேண்டுமே!
- Veena
தூது செல்வாயா,
சேதி சொல்வாயா,
மன்னவனின் நலம்
அறிவாயா,வருகை நாடி
காத்திருக்கும் நிலை சொல்லி,
அள்ளி வா அவரின்
அன்பை,மூச்சை அதுவரை
உறங்காமல் காத்திருக்கும்
விழிகள் இரண்டு இங்கே!
- Vidhya

No comments:
Post a Comment