Friday, July 11, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


பறக்க சிறகு இருந்தும் கால்கள்

முடக்கப்பட்டது கயிறு 

என்னும் ஆயுதத்தால்

பெண்களும் ஒடுக்கப்பட்டனர் ஆளுமையால்

தான் கொண்ட துன்பத்தால் உணர்ந்தாள் பறவையின் வருத்தத்தை

முடிச்சை அவிழ்த்து

பறக்க தூண்டினாள் 

இளம் பறவையை

எப்போதும் தூண்டில் 

போட்டால் மீன்கள் சிக்குவதில்லை

அவை இனம் சேரவும்

குஞ்சு பொரிக்கவும் காலமும் தேவையே!

அது போலவே பறவையும் அதன் சுதந்திரத்தை அனுபவிக்க கயிறு அறுபடவேண்டுமே!

- Veena 

தூது செல்வாயா, 

சேதி சொல்வாயா,

 மன்னவனின் நலம்

 அறிவாயா,வருகை நாடி

 காத்திருக்கும் நிலை சொல்லி,

 அள்ளி வா அவரின்

 அன்பை,மூச்சை அதுவரை

 உறங்காமல் காத்திருக்கும்

 விழிகள் இரண்டு இங்கே!

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...