சிறப்பு பயணம், கொண்டவனோடு
அது சச்சரவு இன்றி
சிறப்பாய் அமைவது
எவராலே
எவ்வளவு சுமை ஏற்றப்பட்டாலும் தாங்கும் இந்த இருவர் பயணம்
சுமை பெரிதல்ல இவ்வாழ்வில் கொள்ளும் சுகமே
நிலைக்க வேண்டும்
கரம் பிடித்தவளை இறுதி மூச்சு வரை
காக்கும் செயலும் சுகமே
பொறுப்பு அறிந்து மனம் தாக்கும் உறவுகளுக்கிடையே துணையாள் செய்யும்
தியாகமும் இங்கே
அளவுகோல் அல்ல
முடியும் பயணம் அறியாது
என்றும் முதல் பயணமாய் இருக்கவே விருப்பம் எவருக்கும்
துணையின் துணை கொண்டு
இல்லாள் இருக்கும் வரை
பயணம் யாவும் சுகமே!
- Veena
மேடுபள்ளம் தாண்டி செல்லும்
பயணம் தரும் நெருக்கத்திற்கு
கூட, வார்த்தைகள் துணை
தேவையில்லை..பயணிக்க
நேரமும் ,கூச்சல் நிறைந்த
வெளியும், துணையாக இருக்க
..காதல் கொண்ட உள்ளம்
மௌனமாக பொறுப்பை சுமந்து
செல்லும் பயணம்!
- Vidhya

No comments:
Post a Comment