Wednesday, July 30, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


எதை நிர்ணயம் செய்ய 

இந்த கோலம்?

இல்லத்தில் ஒருவள்

இப்படி தாங்கி நின்றால்

குற்றம் மட்டுமே

தெரியும் ஆங்கே

அவள் முன்

கண்ணில் மூடிய துணி போல் 

அடுத்தவர் குற்றங்களை

மன்னித்து , மறந்து வாழ அறியா போது

எதுவும் குற்றமே!

மறைப்பதால், 

மறைத்துக் கொள்வதால் குற்றம்

உண்மை ஆகாது.

குற்றம் மறப்பின் 

சுற்றம் பக்கமே!

அரிதாரம் போடாத இவள்

சொல்லும் செயலும்

சரியே!

ஆனால் ஒவ்வொரு நிலையிலும் குற்றத்திற்கான ஆதாரம் தேடுவதால்

அதுவும் கிடைக்காது

குற்றங்கள் விடுதலை பெற்று 

இருப்பது நீதியின் மரபே!

- Veena 

எதையும் சொல்ல ஒன்றுமில்லை,

ஒவ்வொருவரின் மனசாட்சி

 இருக்க ,வாதிட வழக்கறிஞர்

 தேவையில்லை, இதில் நீதி

 தேவதை வெறும் அலங்காரமே!

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...