Wednesday, July 2, 2025

படமும் கருத்தும் by Veena, Priya and Vidhya

 


வான் திரையை விலக்கிவிட்டு 

தனது காதலிக்கு தெரியாமல் 

அவள் கவிதையை ரசித்துக்கொண்டிருக்கையில் 

அவளுடைய பெஸ்டி 

அவனுக்கு தெரியாமல் 

பிடித்த படத்தை 

சாட்சியாக வாட்ஸ் அப்பில் அனுப்பியது !!


--பிரியா


வீட்டு ஜன்னல் திரையை விலக்க 

தரையில் அங்கே சிதறிக் கிடந்தது ஓர் வெள்ளிப் பேழை

யாருக்கும் தெரியாமல் விரைவாய் பற்றிட

நான் அருகில் செல்ல

கண்டது கண்கள் நிறைய வெள்ளிக் காசுகளே அடுக்கடுக்காய்

களத்தில் நான் இறங்க 

என் கரங்கள் தோற்றுப் போயின 

கிடந்தது வெள்ளிப் பொருளல்ல

வான் நிலவின் பிரதிபலிப்பு அலையலையாய்

பேராசையால் நான் சிக்கிரம் படியில்

 இறங்கி வர அங்கே கிடைத்த புதையலையும் சேர்த்து கொண்டு 

வெள்ளி ஏந்த வீழ்ந்து வர

வெள்ளியே இருக்கும் என யூகிக்கவில்லை 

வானைப் பற்ற வீழ்ச்சியில்லை

எனினும் வானை தன் வயமாக்க எண்ணுபவருக்கு வெற்றியில்லை எந்நாளும்

- Veena 

மேகங்கள் புடைசூழ பிறந்தவன்

 இவனோ..

இவன் வருகைக்கு காத்திருக்கும்

 விண்ணுலகும் மண்ணுலகும்!

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...