இன்றைய மினி கதை
நாட்காட்டியை பார்த்து மனிதன் ஒருவன் கேட்டானாம்
" ஓடாதே! கொஞ்சம் நில்! ஏன் இப்படி ஓடுகிறாய்?. மெதுவாய் தான் போயேன் " என்று, அதற்கு அந்த நாட்காட்டி " உன் ஓட்டம் நிற்கும் வரை நானும் ஓடுவேன். . நித்தமும் நீ என்னை கிழித்தெறிந்தாலும் உன் ஓட்டத்திற்கு காரணமும் நானே, உன் ஆட்டத்தை கலைப்பவனும் நானே! உன் தேவை முடியும் வரை நான் உனக்கு தேவை " என்று பதில் சொன்னதாம் .
மனிதனின் ஓட்டம் காலத்தின் பிடியிலே!

No comments:
Post a Comment