Friday, May 22, 2026

படமும் கருத்தும் by Veena,Priya and Vidhya

 


ஓரிடம் விட்டு ஓரிடம்

பொழிந்தாலும் மாரி 

தன் துளிர்களை

இயற்கையாய் கொடுக்கிறதே!

பூ நினைய பூச்சியும் நினைந்ததே 

இயற்கையின் அதிகாரத்தில்

அகங்காரம் இல்லையே

சிறகு விரிக்க 

பூ காத்திருக்க 

பூவின் அழகை

தான் மட்டுமே ரசிக்க

தன் இறக்கையால்

பூவை பூச்சியும் அணைக்கிறதே

அழையா விருந்தாளியான

அவனை பூவும்

காதலிக்கிறதே

எதிர்ப்பு ஏதும் தராமல்

இயற்கையின் பால்

எதுவும் சாத்தியமே

விதை பூவாய் விரிந்து

காண்பவருக்கு விருந்தளிக்கிறதே

பூவில் பெண்மை உண்டு

பெண்மையும் பூவாய் மலரும் தானே 

பருவத்தில் மலரும்

காதலும் ஜெயிக்க

வேண்டி காதலர்கள்

காத்திருப்பதும் சரி தானே

பூவும் பூச்சியும் காதலிக்க

நிறைகிறது இயற்கை

என்னும் தோட்டத்தில்

- Veena 


திருவள்ளுவருக்கு அடுத்தபடியாக 

அதிக NICK NAME கொண்டது நீதான்

தட்டாம் பூச்சி 

தும்பி 

டிராகன் பிளை 

புட்டான் பூச்சி ...


வேட்டையாடுவதில் அந்த வேட்டைக்காரனையே 

மிஞ்சியது நீ 

உனது சதவீதம் 95% !!

மற்றவையின் உச்சம் 35% 


தண்ணீரிலும் வாழ்வாய் என்று 

இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன் 

பாம்பைப் போல தோலுரித்து 

உன் பயணம் வான வீதி எங்கும் 


எங்களுக்கு மூதாதையர் நீ 

300 மில்லியன் வருடம் முன் தோன்றிய வானூர்தி நீ

மறக்கவில்லை 


கல்லை தூக்கு கருப்பட்டி தாரேன் 

கல்லை தூக்கு கருப்பட்டி தாரேன் 

என்று கூறியது 


உன் புகழை 

புலிகேசியும் பாடியுள்ளார் 

தட்டானுக்கு சட்டை போட்டால் 

குட்டை பையன் 

கட்டையால் அடிப்பான் 

அவன் யார் ??

யாராவது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன் 


---பிரியா


சத்தமில்லாமல் முத்தமிட 

வான் வந்து குடைபிடிக்க

கலவரத்தில் இருவரும் நனைய 

நான் இன்னும் மலரவே

 இல்லையே அதற்குள் வேட்டையாட

வந்தாயோ!

இயற்கையின் அழகில் கொஞ்சும்

சிறுபிள்ளைகள்!

- Vidhya 




No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...