"ஆம்" என்பதால்
யாருக்கும் கற்பனைகள் இருக்கலாம்
இங்கே மாயைகள் கடக்கலாம்
இருக்கும் நிஜங்கள் ரசிக்கலாம்
அடுத்தவர் நிழல்கள் தொடரலாம்
என்றாவது சந்தர்ப்பம் கிடைக்கலாம்
அழகான கருத்துகள்
பேசலாம்
சிறப்பு கவிதைகள் வரையலாம்
அறிவான எழுத்துகள் விரியலாம்
சில நேரம்
விரிந்த சிறகுகள் ஒடியலாம்
காத்திருந்து எதிர்ப்புகள் உருவாகலாம்
அடுத்தவர் எதிர்பார்ப்புகள் ஏமாற்றலாம்
மட்டற்ற வேதனைகள் தரலாம்
சிற்சில உண்மைகள் கசக்கலாம்
சிறப்பான பொய்கள் இனிக்கலாம்
அமைதியாய் எதுவும் விலகலாம்
துன்பத்தில் சுற்றாரை விளங்கிக்கலாம்
எனினும்
சரித்திரம் படைக்கலாம்
மீண்டு வா மனமே!
வரும் போது மறக்காமல்
இலகுவான இதயத்துடன் வா!
இணைந்து திரியலாம்
- Veena
உண்மை வீணா,
தொடர நினைத்தால் எதும்
சாத்தியமே,அது வளரும்,
அலைகள் வந்து அடிக்காத
வரை,அழிக்காத வரை..
சில நேரம் "ஆம் " யை விட
இல்லை என்று சொல்ல தைரியம்
வேண்டும் ,ஆம் என்ற பாதுகாப்பில்
இருந்து விலக, பழக வேண்டும் ...
இல்லையேல் அது தரும் வலி
கொடியது!
- Vidhya

No comments:
Post a Comment