Sunday, May 17, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


பகல் அல்ல , இரவு என்று உணர

ஓர் வினாடி ஆனது

உன் ஒளி வீச்சால்

களை கட்டிய ஒளியில்

மயங்கியது என் மனம் 

மாலைகள் இடம் மாற

மாலையில்

மறைந்தே ஒளி

தந்தது வாழ்வில்

கருவறை இருட்டு என்றாலும்

அங்கே ஜெனிக்கும் கரு , உரு கொண்டு வெளிவந்து

ஒளி தரும் என்பது உண்மையே !

மனம், உடல் ஒருமித்த தம்பதியருக்கு பரிசாக

ஒளிதரும் விளக்காக

பல வண்ணத்தில் இருந்தாலும்

ஒளியின் அளவு குறைவில்லை

விளக்கின் பரவல் இருளை நீக்கவே!

இடம் நகர்ந்து ஒளிர

நீ மெழுகுவர்த்தி அல்ல!

ஒளிர்வு கொடுக்கா விளக்கும்

பகிர்தல் இல்லா மனமும் இருளே என்றென்றும்!


- Veena 


இருளில் இவன் துணை தேடும்,

தொலைவில் கசியும் இவன் நிழல்

 மூக்கை நீட்டி தூக்கம் தொலைக்க,

 கனவில் வர்ணஜாலம் காட்டும்

 இவன் விரல்கள் கண்களை இறுக

 மூட,கூசும் தேகம்,

இருந்தாலும் தொல்லை,

தொலைந்தாலும் தேடும் நண்பன்!

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...