பகல் அல்ல , இரவு என்று உணர
ஓர் வினாடி ஆனது
உன் ஒளி வீச்சால்
களை கட்டிய ஒளியில்
மயங்கியது என் மனம்
மாலைகள் இடம் மாற
மாலையில்
மறைந்தே ஒளி
தந்தது வாழ்வில்
கருவறை இருட்டு என்றாலும்
அங்கே ஜெனிக்கும் கரு , உரு கொண்டு வெளிவந்து
ஒளி தரும் என்பது உண்மையே !
மனம், உடல் ஒருமித்த தம்பதியருக்கு பரிசாக
ஒளிதரும் விளக்காக
பல வண்ணத்தில் இருந்தாலும்
ஒளியின் அளவு குறைவில்லை
விளக்கின் பரவல் இருளை நீக்கவே!
இடம் நகர்ந்து ஒளிர
நீ மெழுகுவர்த்தி அல்ல!
ஒளிர்வு கொடுக்கா விளக்கும்
பகிர்தல் இல்லா மனமும் இருளே என்றென்றும்!
- Veena
இருளில் இவன் துணை தேடும்,
தொலைவில் கசியும் இவன் நிழல்
மூக்கை நீட்டி தூக்கம் தொலைக்க,
கனவில் வர்ணஜாலம் காட்டும்
இவன் விரல்கள் கண்களை இறுக
மூட,கூசும் தேகம்,
இருந்தாலும் தொல்லை,
தொலைந்தாலும் தேடும் நண்பன்!
- Vidhya

No comments:
Post a Comment