Saturday, May 23, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


மகிழ்ச்சி என்பதை பட்டுப்புடவை

மட்டும் தருவதில்லை

பட்டாம்பூச்சி போல் 

இலகுவாய், வண்ணமாய்

இருப்பதில் கூட உண்டு

சிரிப்பில் கவலை மறக்க

குடம் கூட நிறைக்கும்

தாகத்திற்கு தண்ணீர் வேண்டி

பச்சைப்பசேல் வயல்வெளியும்

காட்டியது மகிழ்ச்சியை

தன் செழிப்பால்

செவி குளிர அடுத்தவர் மொழி கேட்டும்

மனம் நிறையும் 

மன நிறைவு என்பது

செல்வத்தில் இல்லை

வயலோரம் சொல்லும் கதை கூட

பாடம் சொல்லும்

கருத்தை கூட்டும்

ஆனந்த பூங்காற்றில்

அன்ன நடையும்

அருமருந்தே 

அதை வாழ்ந்து உணரத் தெரிந்தவருக்கு

- Veena 

இந்த சுகத்துக்காக எத்தனை

 மைல்கல்க்கூட சுமையை சுமக்க

 தயார், காலாற கதைப்பேசி 

 வழிநெடுக சிரிக்க, அழுக,கத்த

 ஒரு துணை வேண்டும் ,இந்த

 துணையை பறித்துச்சென்ற நவீன

 காலம், தன்னை தானே காணொளி

 ஆக்கி, தனிமையை போக்க ஆடும்

 நாடகங்கள் எத்தனை!


விலையில்லா மருந்து

 வினையாகாத வரை சுகமே!


- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...