கைத்தலம் பற்றியதால்
மட்டுமே இந்த உரிமை
கால்கள் பற்றிக்கொள்ள
மோகங்கள் மௌனமாய் பேசும்
விடியல் வரை
அரங்கேறும்
வாசலில் கோலம் பூக்க
ஜாலம் அறைக்குள்ளே என்றென்றும்
தொடர்கதையாய்
நர்த்தனம் கால்களால் ஆட
உடல் அசைவுகள்
மொழி பேச
முகம் அபிநயங்கள் காட்ட
உதடுகள் ஆட்டத்திற்கேற்ப
அசைந்து கொடுக்க
வார்த்தைகள் மட்டும்
மௌனமாய் இருக்க
அரங்கம் இசையில் குளிர
யாருக்காக இந்த
படைத்தவனின் நடனம்
அவன் கண் அசைவில்
நாம் ஆடுகின்ற நிலையில்
அவன் நாட்டியமும்
சபையில் அரங்கேறி
நம்மை சிலிர்க்க வைக்கிறதே
அவன் ஆட நாம் ஆட
உலகம் எனும் நாடக
மேடையில் அவன்
ஆட்டுவிக்கும் நடிகர்கள்
நாம் தானே!

No comments:
Post a Comment