வெளியில் வா!
என்றதும் உலகை காண வந்தது பறவை
எங்கெங்கோ பறந்த பின்
மீண்டும் கூண்டை
அடையவே துடிக்கிறது
வெளி உலகம் வண்ணமாய்
இருந்தாலும் - அங்கே
வஞ்சகர் கூட்டம் சூழ
வாழ்வது கடினமே!
மனிதனும் சிந்திக்கிறான்
வெளியில் பறக்கவா?
கூண்டில் அடையவா? என்று
அடைபட்டாலும் கூண்டை
விட பாதுகாப்பு
இல்லையென்றே
ஒருவர் ஏற்றத்தில்
பலர் மாற்றம் அடையலாம்
அந்த ஏற்றத்தின் ஊடே
தோற்றும் போகலாம்
தோற்று நிற்கும் வேளையில்
எழுச்சி கொண்டு
இலக்கை அடைய
நினைக்கையில்
சுற்றியுள்ளவர்கள் சறுக்கி விடவும்
செய்யலாம்
கூண்டுப்பறவையும்
மனிதனும் சமமே
சூழ்நிலைக் கருதி!
- Veena
கூட்டில் பறவை மாலையில்
ஆனந்தம் அடைந்ததடி...
என் காதல் சிறகுகள் முளைத்து
இரவெல்லாம் பறக்குதடி
தூங்காமல் எந்தன் இரவு ஓ...
நித்தம் நித்தம் விடியுதடி
மண்ணுக்குள் மரித்த களையாய்
என் காதல் தவிக்குதடி
தனிமையை எந்தன் மனது
தாழிட்டுக் கொண்டதடி....
உன் காதலை என் மனது
தேடியே திரியுதடி..
-பிரியா
அடைக்கப்படும் போதே
சுதந்திரத்தை உணர முடியும்,
தைரியம் மட்டுமே தடையை
உடைக்கும்,
முயற்சியால் மட்டுமே முன்னேற
முடியும்,
இல்லையேல் கூண்டுக்குள்
எடுப்பார் கைப்பிள்ளையே !
- Vidhya

No comments:
Post a Comment