Friday, October 16, 2020

எஸ்.ராமகிருஷ்ணனின் "வெறும் கால்வாசிகள்" by Vidhya Nivash


அனைவருக்கும் வணக்கம் ,

எஸ்.ராமகிருஷ்ணனுடைய  மேடை பேச்சுகளை கேட்டு இருக்கேன்.இது தான் அவருடைய முதல் புத்தகம் படிக்கிறேன்.ஒவ்வொரு பதிவையும் படித்து விட்டு,சும்மா இருக்க முடியவில்லை.உங்களிடம் பகிர்ந்தளிக்க வந்துள்ளேன்.அற்புதம் ஆனால் உண்மை,திரைபடத்தில் பார்ப்பது போல் உள்ளது .ராஜஸ்தானில் உள்ள திலோனா கிராமத்தில் உள்ள "வெறும் கால் கல்லூரி "(bare foot college)பற்றிய பதிவு.சூரிய ஒளி மூலம் மின்சாரம் மட்டும் அல்ல பல சாதனைகள்.இன்னும் எவ்வளவோ தெரியவில்லை... 


அவருடைய பதிவை இங்கு இணைத்துள்ளேன்.


 



அமிர்தம் by Srijothi Vijendran

 


Thursday, October 15, 2020

"கல்வி ஒரு பார்வை" எஸ்.ராமகிருஷ்ணன் பதிவுகள் by Vidhya Nivash

 


அனைவருக்கும் வணக்கம்,

Dr.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று.அவருடைய பொன்மொழிகளுடன்.. 🙏🙏




எஸ் .ராமகிருஷ்ணன் ,அவர்களின் "இன்றில்லை எனினும் "புத்தகத்தின் மேலும் சில பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு அரசு பள்ளியை எடுத்துக்காட்டாக கூறியிருப்பார். மேட்டுப்பாளையத்தில் உள்ள இராமம்பாளையம் ஆரம்பப்பள்ளி .இந்தப் பள்ளியை அங்கிருப்பவர்கள் உடைய சுயமுயற்சியால் பல அரசுப் பள்ளிகளுக்கு எடுத்துக்காட்டாக நடைபெற்று வருகிறது. பல புதுமையுடன் தனியார் பள்ளிக்கு இணையாக செயல்படுகிறது.


இன்னொரு இடத்தில்" கேட்பார் இல்லாத கல்வி" தலைப்பில்...அரசு பள்ளிகளை நான்கு விதமாக கூறியிருக்கிறார் பெரு நகரங்கள் ,சிறு நகரங்கள், கிராமப்புறங்களில் மற்றும் மலைவாழ் நகரங்களில் உள்ள அரசு பள்ளிகள் என. கல்விமுறையில் உள்ள பிரச்சனைகள் பற்றியும் தெளிவாகக் கூறியுள்ளார். பல தனியார் பள்ளிகளை விட சில அரசுப் பள்ளிகளும் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன என்றும் கூறியிருக்கிறார் .மாணவர்களை விட மாணவிகள் அதிக அக்கறையுடன் படிகிறார்கள்  என்பதையும் கூறியிருக்கிறார். அவர்களுக்கு படிப்பு இல்லை என்றால் வாழ்க்கையே அர்த்தமற்றுப் போய்விடும் என எண்ணுகிறார்கள். ஆனால் ஆண்களுக்கு அந்த எண்ணம் இல்லை.




ஜே.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை பள்ளிக்கூடங்கள் சிறப்பாக இருப்பதாக மேற்கோள் காட்டிருப்பார். 


கல்விக்கூடங்கள் மாணவர்களுக்கு தண்டனைக் கூடகமே தெரிகிறது. படி படி என்று அவர்களுடைய மன அழுத்தமும் அதிகரித்து தான் போகிறது .தென்கொரியாவில் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வை அரசாங்கம் எப்படி நடத்துகிறது என்று விளக்கிக் கூறியுள்ளார்.


கல்வியில் ஏதாவது மாற்றம் உருவாக வேண்டுமென்றால் அது தனித்துச் சாத்தியமாகாது .சமூக மாற்றத்தின் ஒரு பகுதியாகவே அது சாத்தியப்படும் .ஆனால் கல்வியில் ஏற்படும் மாற்றங்களை சமூக மாற்றத்திற்கான முக்கியமான தூண்டுதல் ஆகும். ஆகவே கல்வியின் தரத்தை உயர்த்துவதும் பள்ளிக் கல்வி குறித்து சிந்திப்பதும் ஆசிரியர்களின் வேலை மட்டுமல்ல .நாம் அத்தனைபேரின் பொறுப்புணர்வு என்றே சொல்லுவேன்.


இன்னொரு தலைப்பில் "இதுதானா கல்வி". ஒரு தனியார் பள்ளியில் அங்கிருக்கும் மாணவர்களிடம்  நமது மாநில பூ, விலங்கு மற்றும் பறவையின் பெயரை கேட்கிறார். சில குழந்தைகள் மற்றும் ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே கூறினார்கள். செங்காந்தள் மலர்,வரையாடு , மரகதப்புறா ,யாரேனும் இவற்றை பார்த்திருக்கிறீர்களா ??என்று கேட்டதற்கு இல்லை என்ற பதிலே!!(எனக்கும் தெரியாது)


ஒரு மாநிலத்தில் வாழும் நாம் அதன் அடையாளங்களை ,வரலாற்றை, இயற்கை வளத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது தவறில்லையா ??இதுதான் கல்வியின் தரம் இயற்கையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது இல்லையா?? உங்களுக்கு சூழலியல் பாடமாக கற்றுத் தரப்படுகிறதா?? என கேட்டேன். ஆரம்பப் பள்ளி முதல் சூழலியல் கற்றுத்தரப்படுகிறது.


பிளஸ்-2 சின்ட்ரோம் என்ற நோய் ஆட்டிப்படைத்து வருகிறது எந்த ஊரில் எந்த பள்ளியில் படித்தாலும் பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் முகம் ஒன்று போல் இறுகிப் போயிருக்கிறது .பிராய்லர் கோழிகளை வளர்ப்பது போல் மாணவர்கள் இரவு பகலாக படிக்க வற்புறுத்தப்படுகிறார்கள் .அவர்கள் இயல்பாக சாப்பிடுவதில்லை ,உறங்குவதில்லை ,வீட்டாருடன் பேசுவதில்லை, சிரிப்பதில்லை ,தீவிரமான மன சிக்கல்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் .இதன் விளைவு மன சிதைவும், மீளமுடியாத போதைப் பழக்கமும், தற்கொலைகளும் என்பதை பல்வேறு நாளிதழ் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.


பள்ளியில் மாணவர்கள் புரிந்து கொள்ள தவறும் போதுதான் வீட்டிலும் வெளியிலும் சிறப்பு கவனம் கொடுக்க நேரிடுகிறது .கற்றுத் தருதலில் உள்ள கோளாறு தான் வீட்டுப்பாடம் எழுதுதல் என்ற கொடுமை உருவாக்குகிறது. ஜான் ஹோல்ட் அவரது "எப்படி குழந்தைகள் தோற்றுப் போகிறார்கள்" என்ற புத்தகம் ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். என்னதான் பள்ளிக்கு சென்றாலும் பெற்றோருடைய பங்கு மிகப் பெரிய பங்கு குழந்தைகளின் கல்வியில்..


கண்டிப்பாக இவை சிந்திக்க கூடியவை கல்வி என்பது கட்டாயப்படுத்தி குழந்தைகளிடம் திணிக்கப்படுகிறது .வாழ்க்கைக்கு படிப்பு முக்கியம் அவை இருந்தால் ஒழுக்கம் கண்டிப்பாக வரும்,அது தவிர பல வழிமுறைகளும் இருக்கின்றன. கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றங்கள் வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் மனநிலை ஆலோசனை மருத்துவர்களும் , குழந்தைகளின் உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றியும் விளக்குவதற்கும் சரியான ஆசிரியர்கள் தேவை. சில பள்ளிகளில் அதிக குறும்புத்தனம் செய்யும் பிள்ளைகளை (ஹைபர் ஆக்டிவிட்டி ஹிட்ஸ்) அனுமதிப்பதில்லை. அது பெற்றோர்களிடமும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் ஆடிப்பாடி விளையாட இடம் இல்லாத காரணத்தினால் அவர்கள் எப்பொழுதும் தொலைக்காட்சியிலே மூழ்கிப் போய் ரோபோக்கள் போல தான் இருக்கிறார்கள்.


ஆனால் குழந்தைகளின் உணர்வுகளுக்கும் பெற்றோர்கள் தற்போது மதிப்பு கொடுத்து இருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். பல குழந்தைகள் இப்பொழுது ஆர்வமாக புத்தகம் படிக்கிறார்கள். பல படித்த பெற்றோர்களும் தற்போது பள்ளிக்கூடங்களை தவிர்த்து குழந்தைகளின் உணர்வுகளுக்கு முக்கியதத்துவம் கொடுத்து வீட்டிலேயே கல்வி கற்கும் முறையும் பெருகி வருகிறது. பல இயற்கை சூழ்நிலையில் ,செயல்முறை கல்விக் கூடங்களும் பெருகி வருகின்றன. இது பெரிதும் வரவேற்கத்தக்கது. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. நன்றி.


                                            புவிதம், தர்மபுரி






                        செம்மை வனம்,அச்சம் பட்டி ,தஞ்சாவூர்


Wednesday, October 14, 2020

நாச்சியாரின் பயணம் by Nachammai

  


                       நாச்சியாரின் பயணம்

                                                           _நாச்சம்மை

என்னோடு சேர்ந்து பயணப்படும் எல்லோருக்கும் என் நன்றி. தி. நகர் பாண்டிபஜார் மார்க்கெட்டை ஒட்டிப்போனால் வரும் தெருவில் அகத்தியர் கோயில் இருக்கிறது. அங்கு எல்லா தெய்வங்களும் உள்ளனர். மார்கழி மாதத்தில் விடியற்காலை பூஜைக்கு பணம் கட்டுவார் என் தாய். காலைக் குளிரில் குளித்து கோயிலுக்குப் போய் சாமி கும்பிடுவது தெய்வீகமான ஒரு அனுபவம் தான். நடிகர் சிவாஜி வீட்டு காம்பவுண்டில் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறது. பொங்கல் தினத்தன்று அங்கு போய் பிள்ளையாருக்கு பொங்கல் வைப்போம். பிறகுதான் வீட்டில் பொங்கலிடுவார்கள்.


சிறு பெண்ணாக இருக்கும்போது ஐந்து வயதில் "மண்ணுக்கு மரம் பாரமா" என்ற பாட்டு அதிகம் கேட்கப்பட்ட பாட்டு. அந்தப் பாட்டை ஒரு வார்த்தை விடாமல் அப்படியே பாடுவேன். எங்கள் வீட்டு அவுட் ஹவுசில் குடியிருந்தவர்கள் அந்தப்பாட்டை பாடச்சொல்லி அடிக்கடி கேட்பார்கள். அப்போது கதாகாலட்சேபம் அடிக்கடி நடக்கும். அவர்கள் என்னையும் அழைத்துக் கொண்டு செல்வார்கள். அந்த நிகழ்ச்சியை மெய்மறந்து பார்ப்பேன். ஏனென்றால் கதை கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.


அதே வயதில் ஒருநாள் இரவு என் அண்ணனும் நானும் ஓடிப்பிடித்து விளையாடும் பொழுது சமையல்கார அம்மா கொதிக்கும் பாலை காத்தாடிக்கு கீழ் கொண்டுவந்து வைத்தார். ஓடும் வேகத்தில் நான் அந்தப் பால் பாத்திரத்தின் மேலேயே விழ உடம்பெல்லாம் வெந்து விட்டது. டாக்டரின் கிளினிக்குக்கு கொண்டு சென்று முகத்தை தவிர உடல் முழுவதும் கட்டுப் போட்டார்கள். வீட்டில் உள்ள அனைவருக்கும் என் தந்தையிடமிருந்து செம டோஸ் கிடைத்தது. வேற்று கிரகவாசி போல படுத்திருந்த என்னை பாவம் பார்த்து விட்டு விட்டார். அந்த டாக்டரின் வீடு எங்கள் வீட்டுக்கு மூன்றாவது வீடு கிளினிக் தள்ளியிருக்கும். காய்ச்சல் வந்தால் அவரிடம் அழைத்துச் சென்று காட்டி, என் தாயார் என்ன கேள்வி கேட்டாலும் வாயையே திறக்க மாட்டார். அவர் எழுதி தரும் சீட்டினை கொண்டு வந்து அறை வெளியிலிருக்கும் கம்பவுண்டரிடம் கொடுப்போம். நமக்குப் புரியாத அந்த எழுத்து அவருக்கு புரியும். அவர் முன்னால் ஒரு மேஜையில் மேல் வரிசையாக கலர் கலராக மருந்து இருக்கும். கடகடவென்று இரண்டு மூன்று கலர் மருந்தை நாம் கொண்டு செல்லும் பாட்டிலில் ஊற்றி கலக்கி தருவார். அதற்குப் பெயர் மிக்சர், இனிப்பாக இருக்கும்.


உடுமலைப்பேட்டையில் இருந்தபோது என் வயதை ஒட்டிய ஒரு நாய் வளர்த்தார்கள். நாய்களுக்கான பந்தயத்தில் முதல் பரிசு வாங்கிய அந்த நாயின் பெயர் பேபி. கறியே சாப்பிடாத நாலாவது அண்ணன் பேபிக்காக தினமும் கறிக்கடைக்கு போய் அரை கிலோ கறி வாங்கி வர சமையல்கார அம்மா சமைப்பார். மூன்றாவது அண்ணன் அந்த நாயை குளிப்பாட்டுவது, உண்ணி எடுப்பது, ஊசி போடுவதற்கு கூட்டிப் போவது என மற்ற வேலைகள் செய்ய அதுவும் ஒய்யாரமாக வளர்ந்தது. என்னுடைய பத்தாவது வயதில் அந்த பேபி இறந்துபோக வீட்டில் இருந்த கொய்யா மரத்தின் அடியில் குழி தோண்டி புதைத்து விட்டார்கள்.


பெரிய குடும்பம் என்பதால் வேம்பாவில் தான் வெந்நீர் போடுவார்கள். செம்பு வேம்பா டீக்கடையில் பார்த்திருப்பீர்கள். உள்ளே தண்ணீர் நிரப்பி விடுவார்கள். அடிப்பாகத்தில் ஒரு இரும்பு தட்டு இருக்கும். கரித்துண்டுகளை தணலாக்கி அந்த தட்டில் வைப்பார்கள். அந்த சூட்டில் வேம்பாவில் உள்ள தண்ணீர் சூடாகி விடும். வேம்பாவில் உள்ள பைப் வழியாக வெந்நீர் பிடித்து பச்சை தண்ணீர் கலந்து குளிப்போம். விறகு அடுப்பு சமையல், ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து இட்லி, அம்மியில் அரைத்த சட்னி என ருசியான சாப்பாடு. அதுவும் அரிசியும் எங்கள் வயலில் விளைந்த நெல்லிலிருந்து அரைத்தது. ருசிக்கு கேக்கவா வேண்டும். காய்கறிகளும் உரம் போடாத இயற்கையானவை. கேரட், வெண்டைக்காய் இவை மிகவும் பிஞ்சாக கிடைக்கும். பச்சையாகவே சாப்பிடுவோம். வெண்டைப் பிஞ்சு சாப்பிட்டே எங்கள் எல்லோருக்கும் கணக்கு நன்றாக போட வரும். அதிலும் என் அண்ணன்கள் கணக்கில் புலிகள் தான்.




கவிஞர் கண்ணதாசனின் மாமியார் என் பெற்றோருக்கு சொந்தம். கண்ணதாசன் வீடு எங்கள் வீட்டுக்கு சிறிது தூரத்தில் இருந்தது. தமிழ்வாணன் வீடு அதே தெருவில் இருந்தது. அவர் மனைவியும் என் அம்மாவுக்கு பழக்கம். எனவே இவர்கள் வீட்டுக்கு என் அம்மா செல்லும்பொழுது நானும் போய் இருக்கேன். எங்கள் தெருவின் பத்தாம் நம்பர் இல்லத்தில் பாரதிதாசன் வாழ்ந்ததாகச் சொல்வார்கள். அதே வீட்டில் வெளிநாடுகளில் இந்திய தூதராக இருந்த ஒருவர் எங்கள் ஊரை சேர்ந்தவர் (பெயர் மறந்துவிட்டது ) இருந்தார். அவரைப் பார்க்கவும் செல்வோம். கே. ஆர். விஜயா எங்கள் தெருவில்தான் இருந்தார். உடுமலைப்பேட்டை மில் மேனேஜரின் மகள் இங்கு ஹாஸ்டலில் தங்கி படித்தாள். எனவே லீவு விட்டால் எங்கள் வீட்டுக்கு வருவாள். அவளது தோழியையும் அழைத்து வருவாள். பிற்காலத்தில் அந்தப் பெண் தோழி சென்னையில் மெட்ராஸ் ஹைகோர்ட் சீப் ஜட்ஜீக்கு மருமகள் ஆனாள். எங்கள் வீட்டில் உமி, கரி, உப்பு இவற்றை வறுத்து அரைத்த பல்பொடியில்தான் பல் விளக்குவோம். அவர்கள் இருவரும் பேஸ்ட், பிரஷ் கொண்டுவந்து பல் விளக்குவார்கள். எங்கள் மூவருக்கும் சமவயது. அப்பொழுது எலெக்ட்ரிக் ட்ரெயின் வந்த புதுசு. 1960 என நினைக்கிறேன். அதில் போக வேண்டும் என அவர்கள் இருவரும் அடம்பிடிக்க என் தந்தை எங்கள் மூவரையும் காரில் அழைத்துக்கொண்டு மாம்பலம் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து எலக்ட்ரிக் ட்ரெயினில் ஏறி பீச் ஸ்டேஷன் சென்று அங்கிருந்து அதே ரயிலில் மாம்பலம் வந்து பிறகு காரில் வீடு வந்து சேர்ந்தோம். இருவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.




எங்கள் வீட்டுக்கு யார் விருந்தாளியாக வந்தாலும் அவர்களை மியூசியம் , மிருகக் கண்காட்சி, பீச், மகாபலிபுரம் என அழைத்துச் செல்வோம். அப்படி நிறைய தடவை இந்த இடங்களுக்கு நான் போயிருக்கிறேன். மகாபலிபுரம் போகும் பாதை (ஓ.எம்.ஆர் ரோடு) முழுக்க மரங்கள் இருக்கும். அதில் நாவல்ப்பழ மரம் நிறைய இருக்கும்.


காரை நிறுத்தி நவ்வாப் பழங்களை பொறுக்குவோம். போகும் வழியில் திருக்கழுக்குன்றம் செல்வோம். மலைமேல் உள்ள சிவன் கோயில். அங்கு மதியம் சரியாக 12 மணிக்கு இரண்டு கழுகுகள் வானில் வட்டமடிக்கும். மலையில் சமதளமாக உள்ள ஓரிடத்தில் ஒரு ஐயர் இரண்டு பிரசாத உருண்டைகளை வைத்து காத்திருப்பார். இரண்டு கழுகுகளும் வந்து பிரசாதத்தை சாப்பிட்டு பின் பறந்துவிடும். தினமும் தவறாமல் இது நடக்கும் மனிதனுக்கு புரியாத ஒரு ஆச்சரிய நிகழ்வு அது.



நெல் அவிப்பது என்றால் என்னவென்று தெரியுமா? திருவையாறு நிலத்திலிருந்து நெல் மூட்டைகள் வரும். அந்த நிலத்தை குத்தகைக்கு விட்டிருந்தோம். அவர்கள் பரம்பரையாக குத்தகை எடுத்து அங்கேயே வாழ்ந்தார்கள். போன நூற்றாண்டில் தஞ்சாவூர் பக்கம் மூன்று போகம் நெல் விளைவிப்பார்கள். இரண்டு போகம் ஆனது. இடையில் வேறு பயிர் விளைவிப்பார்கள். வருடா வருடம் என் தந்தை சென்று வயலை பார்த்துவிட்டு நெல் மூட்டைகளை ஊருக்கு ஏற்றிவிட்டு, காய்ந்த வாழை இலை, தையல் இலை என கொண்டு வருவார். தையல் இலை என்பது ஒரு மரத்தின் இலைகளை ஈர்க்குச்சி கொண்டு தைத்திருக்கும். உணவு பொட்டலம் கட்டுவதற்கு அதைத்தான் உபயோகப்படுத்துவோம். காய்ந்து கெடுக்கும், இல்லை என்றால் பெய்து கெடுக்கும் மழை என சொல்வார்கள். குத்தகைக்காரரும் இதையேதான் என் தந்தையிடம் சொல்வார். ஆக படிப்படியாக நெல் மூட்டைகள் குறைய இறுதியில் என் தந்தை நிலத்தை அவர்களையே எடுத்துக் கொள்ளச் சொல்லி விட்டார். நாம் அனுபவித்தது போதும் அவர்கள் பிழைக்கட்டும் என்று கூறிவிட்டார்.



தந்தை வேலை பார்த்த மில் பக்கத்திலிருந்து வேலையாட்களை வரச்சொல்லி நெல் அவிப்போம். முதல் நாள் இரவு இரண்டு பெரிய சிமெண்ட் தொட்டிகள் இருக்கும். அவற்றில் நீர் நிரப்பி அதனுள் நெல் மூட்டைகளைப் பிரித்து கொட்டி ஊற வைப்பார்கள். கிணறு பக்கமாக இருக்கும். மழைக்காலத்தில் கையாலேயே நீரை அள்ளலாம். அப்படி ஒரு கிணறு. அதிகாலை 3 மணிக்கு விறகு அடுப்பு மூட்டி பெரிய அண்டாவில் (பித்தளை) நெல் வேக வைப்பார்கள். அதற்கென பெரிய கரண்டி, மூடி இருக்கும். நெல் அவிக்கும் போது வரும் வாடை நன்றாக இருக்கும். இப்பொழுதும் கிராமங்களை ஒட்டி போகும் போது நெல் அவிக்கும் வாடை வந்தால் மூச்சை இழுத்து விடுவேன். வெந்த நெல்லை கரண்டியால் அள்ளி ஒரு பிரம்புக் கூடையில் போட்டு நீர் வடிய விட்டு வாசலில் கொட்டி, பரப்பி காய வைப்பார்கள்.


பிறகு நெல்லை வீட்டுக்குள்ளேயே கொட்டி பரப்பி விடுவார்கள். தினமும் அந்த நெல்லை காலாலேயே கீழ் மேலாக புரட்டி விடுவது எங்கள் வேலை. நன்கு காய்ந்த பிறகு மூட்டையாகக் கட்டுவார்கள். அரவை மில்லுக்கு வண்டியில் ஏற்றிக்கொண்டு போய் அங்கேயே உட்கார்ந்து கொள்வோம். நெல் அரைக்கும் போது உமி தனியாக, தவிடு தனியாக, அரிசி தனியாக வரும். மூட்டைகளில் கட்டி அவற்றை வண்டியில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு வருவோம். அரிசி புடைக்க பெண்களை வரவழைத்து முழு அரிசி, அரை அரிசி, குருணை, பொடிக்குருணை எனப் புடைத்து எடுப்பார்கள். மிகவும் பொடிக்குருணையை கோழி, மாடு வளர்ப்பவர்களுக்கு கொடுப்பார்கள். பெருங்குருணையை கஞ்சிகாய்ச்சுவார்கள். அரை அரிசியை தோசைக்கு போடுவார்கள். முழு அரிசி சாப்பாட்டுக்கு. இரண்டு போக நெல்லில் ஒரு போகம் சம்பா. அது சாதத்திற்கு பயன்படும். அடுத்த போகம் குறுவை. அந்த அரிசி இட்லிக்கு பயன்படும். அவிக்காத நெல்லை பச்சையாக அரைப்பதே பச்சரிசி. பலகாரங்களுக்கு பச்சரிசியை பயன்படுத்துவோம். நகரத்தில் வாழ்ந்தாலும் கிராமத்து வாழ்க்கை முறையை பின்பற்றி தான் வாழ்ந்தோம்.


தொடரும்...

இன்றில்லை எனினும் புத்தகத்தில் சில பக்கங்கள் by Vidhya Nivash

 



அனைவருக்கும் வணக்கம் ,

புத்தகம் என்ன செய்யும் வாழ்வில் ..

நான் பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என் வீட்டின் அருகில் குடியிருந்த பாட்டிக்கு என்னைவிட வயதில் 2 அல்லது 3 மட்டுமே கூட இருக்கும். ஒரு பெண் வந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்து உதவி புரிந்தார்.


ஆனால் அவள் பார்ப்பதற்கு சற்று குள்ளமாக இருப்பாள்.அது குறையாக அவள் எண்ணவில்லை. மிகவும் தைரியமான பெண் .ஐந்து நிமிடம் கூட நின்று பேச அவளுக்கு நேரம் இருக்காது. அந்த வயதிலேயே குடும்பத்திற்கு உதவியாக இருந்தாள்.எப்போதாவது பேசும்பொழுது பழைய புத்தகம் வாங்கிப் படிப்பதாக என்னிடம் பகிர்ந்து கொண்டாள். எனக்கும் நாவல் படிக்க ரொம்ப பிடிக்கும் அவளிடம் படிக்க கேட்டேன் .தருகிறேன் ,தருகிறேன் என்று சொன்னாளே தவிர கடைசிவரையில் அவர் கொடுக்கவில்லை .


அவள் அவ்வளவு தைரியமாக இருந்ததன் காரணம் என்ன? அவள் ஏன் கொடுக்கவில்லை? அவளுக்கு தைரியம் புத்தகத்தில் இருந்து வந்தது .அது மட்டுமில்லாமல் அவள் அதை அவளுடைய சொத்தாக எண்ணியதால் ,எனக்கு அவள் கொடுக்க விரும்பவில்லை.புத்தகம் மிக அருமையானது அது வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரும்.


படித்ததில் கவர்ந்தது ....


எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பதிவை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


click here for audio book:மகத்தான சந்திப்பு














Tuesday, October 13, 2020

பொருளாதாரம் என்னும் செல்வம் by Vidhya Nivash

 அனைவருக்கும் வணக்கம்,




கேட்டதில் பிடித்தது ..


பொருளாதாரம் என்பது என்ன அதை 3 செல்வங்களாக எளிமையாக விளக்கினார்.

முதலாவது நம்முடைய உணர்வு .


இரண்டாவது நம்முடைய உடல்.

மூன்றாவது அந்த உடல் சக்தியை வைத்து நாம் ஈட்டும் செல்வங்கள்.


போதும் என்ற மனம் வந்தவுடன் நம் உடல் உழைப்பை நிறுத்தி .உடலுக்கும் ,பிறகு உணர்விக்கும் மதிப்பு கொடுப்பதே மிகப் பெரிய செல்வம் .இவை இருக்கும் போது நாம் எதைக் கண்டும் அஞ்ச தேவையில்லை.

வருங்காலம் அதை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக சில துறைகளில் படித்தால் மட்டுமே முன்னேற முடியும் என்ற நிலை மாறி ஒவ்வொருவரும் தன்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் . இனி எங்கும் மகிழ்ச்சியே!!!!

Monday, October 12, 2020

பன்முகத்தன்மை by Srijothi Vijendran

  






உடையார் ஆறாம் பாகம் முடிவு by Vidhya Nivash

 

அனைவருக்கும் வணக்கம்,

ஊரே எதிர்பார்த்த கும்பாபிஷேகம் வந்தது என்ன உயரம் 13 நிலைகள் ,215 அடி உயரம். மன்னர் கங்கை நீர் எடுத்து முன்னே செல்ல, தொடர்ந்தார் இளவரசரும் கங்கை நீருடன், ஆசைப்பட்டது போலவே கட்டி முடித்துவிட்டார் .எப்பேர்பட்ட மனிதர் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே நடந்தார் மகன் .ஈசான சிவ பண்டிதர் கருவறைக்குள் தண்ணீர் கொண்டு செல்ல ,பிரம்மராயர் ,அருண்மொழி ,மற்ற அமைச்சர்கள் மற்ற இடங்களுக்கு கங்கை தண்ணீர் கொண்டு சென்றார்கள். எக்காளம் ஊத,முரசு கொட்ட ஊர் மக்கள் ஆரவாரத்துடன் கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடைபெற்றது. அனைத்து கவசங்களும் நீர் வார்க்கப்பட்டது. வடிந்து வரும் நீர் அனைத்தும் ஒன்றாக சிவகங்கை குளத்தில் கலந்து, கருவறையில் இருந்து வரும் தண்ணீரும் கால்வாய் வழியாக சிவகங்கை குளத்தில் சென்றடைந்தது.


பெருந்தச்சரை மன்னர் தேடினார் .அற்புதமாக எண்ணியபடி முடித்துக் கொடுத்தீர்கள் என்று அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். ஈசனுடைய செயல் என்னுடைய வாழ்க்கையில் பெரும் துயரங்கள் வந்தாலும் அவருடைய துணையாலும் என்னுடைய மனைவியின் உதவினாலும் மட்டுமே என்னால் இதை முடிக்க முடிந்தது என்று கூறிக்கொண்டு ,ஊர் மக்கள் அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்தினர் .உங்களுக்கு சிறிது காலம் ஓய்வு தேவைப்படுகிறது நீங்கள் ஓய்வெடுங்கள் என்று மன்னர் கூறினார்


கோயில் கட்டியதை விட அதை பராமரிக்க வேண்டும் .பராமரிப்பு பணிகள் பிரிக்கப்பட்டன ,சிவாச்சாரியார்களும் பணியில் அமர்த்தப்பட்டனர். மன்னர் அவருடைய மனைவிகளுடன் சேர்ந்து பொன்னாலான பூக்களால் சிவனை பூஜித்தார். அனைத்துப் பொறுப்புகளையும் மூவேந்த வேளாளர் இடம் கொடுத்துவிட்டு அரண்மனைக்கு கிளம்பிவிட்டார்.


அருமையாக இருந்தது கும்பாபிஷேகம் உங்களுக்கு தான் பார்க்க கொடுத்து வைக்கவில்லை என்று பஞ்சவன்மாதேவி இடம் கோயிலில் இருந்து வந்தவர்கள் கூறிக்கொண்டிருந்தார். பஞ்சவன்மாதேவி எனக்கு அந்த ஆசை எல்லாம் விட்டுப் போய்விட்டது. போருக்குப் பிறகு என்னுடைய மனம் செயலற்று போனது அமைதியை தேடுகிறது என்று கூறினார். இதைக் கேட்ட மன்னர் எப்பொழுது வந்தது உனக்கு இந்த மாற்றம் என்று கேட்டார்.

இங்கு கருவூர்தேவர் வந்தார் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று என்னைக் கேட்டார் .நான் சும்மா இருக்கிறேன் என்றேன். நானும் உன்னுடன் சும்மாவே இருக்கிறேன் என்று இரண்டு முறைகள் அதேமாதிரி என்னுடன் வந்து அமர்ந்திருந்தார் .அப்பொழுதுதான் நான் செயலற்றுப் உள்ளே கிடப்பதை நான் உணர்ந்தேன். மூன்றாவது முறை வந்தபோது நீ உன்னுடையது என பிடித்துக் கொண்டிருப்பதையும் இப்பொழுது விட்டுவிடு என்று கூறினார். நான் உங்களை விட்டேன் ,எப்பொழுதும் அடுத்தடுத்த செயலுக்காக உங்களை தேடி உங்களை உயிராக எண்ணி இருந்தேன் .அதை விட என் மனம் அமைதியாகி விட்டது. இப்பொழுது எனக்கு எந்த விருப்பு ,வெறுப்பு இல்லை அமைதியான நிலையை அடைந்து விட்டேன்.


கும்பாபிஷேகம் முடிந்து விட்டது இப்பொழுது ஒன்றுமில்லை என்று எனக்கும் தோன்றுகிறது .நான் எதை விடவேண்டும் இந்த கோயிலை நான் விட வேண்டுமா ??என்று கேட்டார் மன்னர் .நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் இந்த அரச பதவியை விட வேண்டும். அதை நீங்கள் ராஜேந்திரனுக்கு கொடுக்க வேண்டும் .அப்பொழுதுதான் நீங்கள் அமைதி அடைய முடியும் .நான் பழையாறை செல்ல விரும்புகிறேன் எனக்கு அமைதி தேவைப்படுகிறது என்று பஞ்சவன்மாதேவி கூறினாள். மன்னர் ஆகட்டும் என்று அவ்விடத்தை விட்டு விலக ,அவளோ வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள், அவர்ப் பார்த்து வியந்தார்.


ராஜேந்திரனிடம் சென்று போதும் எனக்கு இந்த அரச பதவி . நீ இதை ஏற்றுக் கொள் .நான் அமைதி கொள்கிறேன் என்று மன்னர் கூறினார். எனக்கு இன்னும் இரண்டு வருடங்கள் தேவைப்படுகிறது தந்தையே !!நான் நேற்று தான் மருவூர் அந்தணர்களை கூப்பிட்டுப் பேசினேன் .அவர்கள் பரதம்,மேரு மலை பற்றி முழு விளக்கம் எனக்குக் கொடுத்தார்கள் .நான் கங்கை தாண்டி ,கடாரம் சென்று ,கீழே சாளுக்கியம் தாண்டி ,ஈழத்தை வெல்ல வேண்டும் .மேலும் புத்த பிட்சுக்கள் தான் பாண்டிய நாட்டு மணிமுடியையும் செங்கோலையும் மறைத்து வைத்திருக்கிறார்கள்.நாகப் பட்டணத்திற்கும் ஈழ தேசத்திற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது .நான் அதை முதலில் வெற்றி கொள்ள வேண்டும் நீங்கள் விட்டதை நான் பிடிக்க வேண்டும் என்று கூறினான்.


மன்னர் மிகவும் பெருமைப் பட்டார். என்னால் இருக்க முடியாது , உங்களைப்போல அமைதியாக இருக்க முடியாது. உங்களுடைய கோபத்தை நான் துங்கபத்திரா நதிக்கரையில் தான் பார்த்தேன் .நீங்கள் எப்பொழுது தேவையோ, அப்பொழுது மட்டுமே காட்டுகிறீர்கள் கோபத்தை,ஆனால் எனக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது. நான் இங்கே ஆட்சி செய்வது மிக கடினம் இங்கிருக்கும் மக்கள் உங்களுக்கு பழக்கப்பட்டு விட்டனர் .அரசு பதவியேற்று, உங்களை துறத்திவிட்டேன் என்ற மாபெரும் இழுக்கு எனக்கு வந்து விடும்.நீங்கள் என்ன செய்தீர்கள் பழையாறையில் இருந்த சுந்தர சோழர் ஆட்சியை தஞ்சைக்கு மாற்றினீர்கள்.


அதேபோல் நான் ஜெயங்கொண்டத்தில் செய்திருக்கிறேன் .ஏனென்றால் அதுதான் மேடுநிலம் .அது எனக்கு வசதியாக இருக்கிறது எனக்கு பயணப்பட ,ஜெயகொண்டம் அங்கே கோட்டையும் ,கோயில் வேலையும் ஆரம்பமாகிவிட்டது .குணவன் திருவக்கரையில் இருந்து கல் கொண்டு வந்து கோயில் ஆரம்பித்துவிட்டான் .சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது,குளிர்ச்சியாக இருக்கும் என்று கூறினான் .இந்தக் கோயிலில் லிங்கப் பிரதிஷ்டை ஆனதில் குறை இருக்கிறது .முதல் முறையே அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்திருக்கவேண்டும் .அதில் பெரிய தவறு செய்துவிட்டார் பெருந்தச்சர். அந்த நேரமும் சரியான நேரம் அல்ல. இந்தக் கோயில் குறையோடே தான் இருக்கிறது என்று அவன் கூறினான்.அதுவும் நல்லது எதிரிகளுக்கு திருஷ்டி போல இருக்கட்டும்.


இதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது .ஆனால் என்னால் இனிமேல் ஆட்சி பார்க்க முடியாது .நீங்கள் அமைதியாக கோயிலைப் பராமரித்து கொண்டிருங்கள்.நான் பார்த்துக் கொள்கிறேன் ,சிறிது காலம் பிறகு நான் அரசு பொறுப்பு ஏற்கிறேன் என்று ராஜேந்திரன் கண்டிப்பாகக் கூறிவிட்டான்.


கோயிலில் கணக்கு சரிபார்க்கப்பட்டது .கல்வெட்டுகளை மன்னர் தடவித் தடவி பார்த்தார். காலத்திற்கும் இது நிற்கும் என்று பெருமைப் பட்டார் .அனைவருடைய பெயரும் அங்கு கல்வெட்டில் பொறிக்கப்பட்டது .ஒவ்வொரு இடமாக சென்று மன்னர் பார்த்து பார்த்து வியந்தார் . பிரம்மராயர் கண்டு வியந்தார் போரில் மன்னனை பார்த்திருக்கிறேன் .இவர் முற்றிலும் மாறுபட்டவர் என்று எண்ணினார் மனதிற்குள். பொறுப்புக்களை மூவேந்தர் இடம் கொடுத்து விட்டார் மன்னர். கோயிலுக்கு தங்கத்தகடு கொண்டு ,தங்கமுலாம் பூசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது .பெருந்தச்சர் இதுவே அருமையாக இருக்கிறது .இதற்கு எதற்கு தங்கப் பூச்சு ??ஈசான சிவ பண்டிதர் கூறியது போல கைலாயமலை போல இது காலத்திற்கும் பெயர் செல்லப் போகிறது என்று கூறினர்.


ஜெயம் கொண்ட சோழபுரத்தில் கோட்டை ,கோயில், வேலை முடிந்தது .அங்கே ஈஸ்வரனுக்கு உங்களுடைய பெயரை வைத்திருக்கிறார் ராஜேந்திரர் அதைக் கேட்ட மன்னர் சிரித்தார். மன்னர் இளவரசர் அழைத்து ஊர் முழங்க முடிசூட்டினார். சக்கரவர்த்தி இராஜேந்திரன் வாழ்க! வாழ்க! என்று முழங்க!!! சிம்மாசனத்தில் மகன் அமர்ந்திருப்பதை பார்த்து ரசித்து. இதுவும் கோயில்தான் என்று கண்குளிர கண்டு அவரை வாழ்த்திவிட்டு , பழையாறைக்கு மனைவிகளுடன் சென்றார்.


அங்கு தனிமையில் பஞ்சவன்மாதேவி உடன் அமர்ந்து நாயன்மார் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தார் .அதில் சுந்தரர் கதை வர, அவர் ஐராவரத்துடன் கைலாயம் சென்றதுடன், கூட இருந்த அரசனும், குதிரையும் கைலாயம் சென்றதை எண்ணி வியந்தார்.சுந்தரரால் தானே அந்த வாய்ப்பு அரசருக்கு கிடைத்தது. எப்பேர்பட்ட குரு ,குரு செல்வதற்குமுன் அரசர் சென்று அங்கே அடைந்து விட்டார் என்றும் பெருமைப் பட்டார். என்ன பாவம் செய்தேன். எனக்கு ஏன் ??அது மாதிரி குரு கிடைக்கவில்லை என்று புலம்பினார். அதை கேட்ட பஞ்சவன்மாதேவி சிரித்தாள் .


அங்கே கருவூர் தேவர் வந்தார் .சிறப்பாக கும்பாபிஷேகம் செய்தியாமே என்று கேள்விப்பட்டேன் என்றார். உனக்கு என்ன வேண்டும் கேள்?? மன்னர் சேரமான், சுந்தரர் போல எனக்கும் குரு வேண்டும் அப்பொழுது நான் யார் நீ என்னை குருவாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன் .மன்னர் இல்லை !இல்லை! என்று அவர் காலில் விழுந்து வணங்கினார்.நான் அதுமாதிரி கூறவில்லை கைலாயம் செல்ல ஆசைப்படுகிறேன் என்று கூறினார் .நீ உடலோடு செல்ல நினைக்கிறாய்.உடல் பூமிக்கு சொந்தம் .உயிர் வெறும் காற்று பையே !இந்த உடலை இழந்து மீண்டும் உருவெடுக்க, கருவை தேடி அலைவதே மறுபிறவி .இதற்கிடையில் தற்கொலை செய்து இறப்பவர்கள். அவர்களுடைய காலம் முடியும் வரை செய்த தவறுக்கு இங்கே உரு இல்லாமல் பேயாக அலைந்து அவர்கள் காலம் வந்தவுடன் மறுபிறவி எடுப்பார்.


இறையே நினைத்து செயலற்று, அதையே நினைத்து எந்நேரமும் உணவும், தண்ணீரும் இல்லாமல் தன்னிலை மறந்து சுந்தர ரூபம் எடுப்பார்கள் .சுந்தரரும் அந்த மன்னரும் சுந்தர ரூபம் எடுத்தனர் .நீயும் அது போல் நோன்பு இருந்தால் போதும் ,நீ கண்டிப்பாக அந்த சுந்தர ரூபத்தை அடைவாய் என்று கருவூர்தேவர் ஆசீர்வாதம் செய்துவிட்டு சென்றார்.


ராஜேந்திரன் பிள்ளையை, பேரப் பிள்ளையை கண்டவுடன், அவர் மனம் மிகவும் குளிர்ந்தது .போதும் இந்த வாழ்க்கை போதும் என்ற எண்ணம் வந்தது .அரண்மனை தோட்டத்திற்கு சென்றார் .அங்கிருக்கும் தூணில் சாய்ந்தார் அனைவரும் உறங்க ஊரே அடங்கிவிட்டது .ஏதோ அடைக்கிறது இறைவா! எனக்கு சுந்தர ரூபத்தை கொடு! எப்பொழுதும் உன்னோடு இருக்கும் பாக்கியத்தை கொடு என்று வேண்டினார்.இது தான் மரணமா ??அவருடைய ஆத்மா வெளியே வந்தது உடலைவிட்டு, இங்கே தான் நான் வாழ்ந்தேனா??இது தான் என் சொந்த ஊரா??.இது எதுவும் எனக்கு தெரியவில்லையே .என்னுடையது இல்லையே !!பஞ்சவன்மாதேவி இடம் சென்றார் அவளும் அவரை உணர்ந்தாள் .தஞ்சையை சுற்றி வந்தார்.


கருவூரை சென்றடைந்தார் போதும் என்று சென்று விட்டாயா?? எங்கே போகிறாய் என்று கேட்டார் கருவூரார் .நான் கைலாயம் போகப்போகிறேன் என்றார் மன்னர்.எங்கே ??கோயிலுக்குத்தான் நான் கட்டிய கோயில்தான் எனக்கு கைலாயம். நான் கூறியது உனக்கு புரிந்து விட்டு என்றே நினைக்கிறேன். நீயே நீ கட்டிய கோயிலை ஏற்கவில்லை என்றால் தவறாகப் போகும் .அதுதான் கையிலாயம். கோயில் சென்று ஒவ்வொரு இடமாக சுற்றி வந்தார் .கடைசியில் கோபுரத்தில் சென்று தங்கினார் . ஊரே கலங்கியது!! எங்கும் கண்ணீர் !!ராஜேந்திரன் வந்து குலுங்கி அழுதான் .அவருக்கு செய்ய வேண்டிய இறுதிக் காரியங்களை முறைப்படி செய்தான்.




பஞ்சவன்மாதேவிடம் சென்று, இனி நீ தான் குடும்பத்திற்கு தலைமைப் பொறுப்பு என்று அவனை கூறி ஆசீர்வாதம் செய்தாள். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்.நான் மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் .எனக்கு எதுவும் வேண்டாம் ..கடைசியாக நீ எனக்கு கொல்லி வைத்தாலே போதும் என்று ஆசீர்வாதம் செய்தாள். சிறிது காலங்களுக்குப் பிறகு அவளும் உயிரை பிரிந்தாள், மன்னர் வந்து அவள் கரம் பிடித்தார் .இங்கே தான் இருக்கிறீர்களா ??நீங்கள் எங்கேயோ சென்று இருப்பீர்கள் என்றல்லவா ??நினைத்தேன் என்றாள் .கோயில்! எதற்கு இங்கு ?வருவோரை நாம் வரவேற்று வழியனுப்பி வைக்க வேண்டாமா ??அதுதான் நமக்கு வேலை .சதாரண மக்கள் வந்து சந்தோஷமடைந்து செல்வார்கள் .கர்வம் இருப்போர்களுக்கு அவர்களுடைய கர்வம் இங்கே அழியும். சிவ பக்தர்கள் பக்தி அடைவார்கள்.





உடையார் முற்றும்.

நன்றி.

Click here for Udayar audio book part 6:3👇


Udayar audio book part 6:3

Sunday, October 11, 2020

உடையார் ஆறாம் பாகம் சுருக்க விளக்கம் 2 by Vidhya Nivash


 


அனைவருக்கும் வணக்கம் ,

மணல்மேட்டை அகற்ற ஊரில் இருக்கும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது. உணவிற்கு என்ன பண்ணுவது இன்னும் ஆறு மாதங்களுக்கு கவலையில்லை அதன் பிறகுதான் பாண்டிய நாடு, தொண்டை நாட்டிலிருந்தும் கொண்டு வர சொல்ல வேண்டும். தொண்டை நாட்டு அந்தணர்களே சமையலுக்கும் நியமிக்கப்பட்டார்கள். மறவர்கள் தஞ்சை எல்லைக்குள் மது அருந்த மன்னர் தடை விதித்தார். சேரிலிருந்து மக்கள், யானை ,குதிரையை பராமரிக்க வந்து சேர்ந்தனர் .நாம் அல்லவா?? சென்றிருக்கவேண்டும் அவர்களே வந்து விட்டார்கள் என்று நேரடியாக சென்று அவர்களை வரவேற்றனர். அரண்மனையிலிருந்து ஏதும் உதவி தேவையா?? என்று பஞ்சவன்மாதேவி கேட்க என்னுடன் இருந்தால் போதும் என்று மன்னர் கூறிவிட்டார்.


வயதாகிவிட்டது உடல்நிலையில் கொஞ்சம் அக்கறை தேவை என்று பஞ்சவன்மாதேவி கூறினார். அரசு பொறுப்பை ராஜேந்தருக்கு கொடுத்து விட வேண்டியது தானே என்றும் கேட்டார். கண்டிப்பாக கோயில் பணி முடிந்தவுடன் அது தான் முதல் வேலை .ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அவன் பதவியேற்றவுடன் நாம் இங்கு இருப்பது நல்லது இல்லை நாம் பழையாறைக்கு செல்லவேண்டும் .ஆனால் அவனும் இங்கு இருக்க விரும்ப மாட்டான். யார் கோவிலை காப்பது. அவன் தலைநகரை மாற்றி, ஜெய கொண்ட சோழபுரத்தை மாற்றி அங்கே கோட்டையும் கோயிலும் கட்ட போகிறான். உங்களுக்கு எப்படி தெரியும், ஒற்றர்கள் மூலம் வந்த செய்தி குணவன் கோயில் கட்ட நிலம் தேடிக் கொண்டிருக்கிறான் என்று.


மருவூர் அந்தணர்கள் கங்கையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் .அவர்கள் குடந்தையை அடையப் போகிறார்கள். அவர்களை மரியாதையுடன் வரவேற்க வேண்டும் என்று மன்னர் உத்தரவிட்டார்.


தொடர்ந்து உலோக சிற்பிகள் தங்களுடைய பொறுப்புக்கள் என்னவென்று கேட்க வந்தார்கள் அரண்மனைக்கு, மன்னருக்கு பிடிக்கும் என்று ரிஷப ரூடர் சிலையும் ,அதோடு மட்டுமல்லாமல் தங்கத்திலான மண்வெட்டியின் கொண்டுவந்தார்கள். அதை வைத்தே நீங்கள் முதலில் மண்ணை எடுத்து துவக்கி வைக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். மன்னர் அதை கண்டு வியந்தார்.


பரசு அந்தணர் போல வேடம் போட்டு மக்களோடு மக்களாக உள்ளே நுழைந்தான். கோயிலை கண்டு உள்ளுக்குள் வெதும்பினான். அங்கேயே படுத்து இரவில் உறங்கி விட்டான். விடியும் நேரத்திற்கு முன்பு மாதேவடிகள் உள்ளுக்குள் எண்ணி கொண்டே நடந்து வர இப்பொழுது புத்தர் எதிரில் வந்தால் அவரை வீட்டில் உபசரித்து, ஆனால் இப்ப இருக்கும் மாதேவடிகள் என்னுள் இருக்கிறார் புத்தர் , எதிரில் வருவது புத்தர் என்றாலும் விலகி செல்ல வேண்டும் . அது தான் உள் நோக்கு பார்வை. ஈழ தேசத்தில் இருக்கும், தங்கத்தாலான புத்த விக்ரகத்தை கண்டு வியந்தே கோயில் கட்டும் ஆசை வந்தது என் தந்தைக்கு அது வெறும் வெளி நோக்குப் பார்வை உள்நோக்கி பார்த்திருந்தால் இந்த கோயிலை கட்டி இருக்க மாட்டார்.


அப்பொழுது அங்கு ஒருவன் கனவில் புலம்பிக் கொண்டிருந்தான் .குத்த வேண்டும் என்னுடைய குலத்தை அழித்த உன்னை நான் கண்டிப்பாக கொல்ல வேண்டும் இதோ வருகிறேன் ராஜராஜசோழா??. இறப்பு என்பது இயற்கை கண்டிப்பாக அவருக்கு இறப்பு வரும் நீ கொலை செய்ய வேண்டிய அவசியமில்லை அமைதி கொள் !அமைதி கொள்! என்று கூறினாள். பரசு எழுந்து உட்கார்ந்து என்ன என்னுள் மாற்றம் என்று வியந்தான். மீண்டும் கோபப்பட்டான் என்ன இந்த மனிதன் இன்னும் கோபடிக்கிறான் என்று எண்ணிக் கொண்டிருந்த அவள் பிறகுதான் யோசித்தால் அவன் தந்தை கொல்ல வேண்டும் என்றமல்லவா கூறுகிறான். என்னசெய்வதென்று தெரியாமல் நடந்து சென்று விட்டாள்.


மண் எடுக்கும் வேலை மன்னர் ஆரம்பித்து வைக்க ஆரவாரத்துடன் தொடங்கியது. தொண்டை நாடு அந்தணர்கள் சமைக்க தெரியாது என்று கூறி ஆனால் மிக அற்புதமாக அரிசிக் கஞ்சியும் ,பீர்க்கை துவையலும், மிளகு கத்திரிக்காயும் ,புளிச்சோறு விதவிதமாக சமைக்க ஆரம்பித்தனர். பசிக்கு அனைவரும் வயிறு நிறைய சாப்பிட்டார்கள். அந்தணர்கள் அவர்கள் பங்கிற்கு சமையலுக்குத் தேவையான பாத்திரங்களை அன்பளிப்பாக கொடுத்தார்கள். மன்னர் சேனாதிபதி பார்த்து உன்னுடைய ஏற்பாடா !!உன் பங்கு என்ன என்று கேட்டார். அதற்கு அவர் அவர்கள் தனித்து செயல்படுகிறார்கள் .நான் என்று யோசித்தார் ,ஒரு ஆள் உயரத்திற்கு சுற்றுசுவர் எடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். அங்கிருந்த அருண்மொழி தந்தை நீங்கள் சுற்றுசுவர் எடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் .அது மட்டுமில்லாது அங்கே வந்து கோவிலை பார்க்க வரும் மக்கள் தங்குவதற்காக ஒரு கோட்டையும் ஏற்படுத்திக் கொடுப்போம் நம்முடைய சார்பில் என்று கூறினான். அதை கேட்டு பிரம்மராயர் மகிழ்ச்சி அடைந்தார்.


மூன்று யானை அளவு வலுவுள்ள கல் விமானத்தின் மேலேகொண்டு போய் வைக்க, கீழே வெட்டப்பட்டு மேலே கொண்டுபோய் இணைக்கப்பட போகிறது. கவசத்தில் வரகரிசி நிரப்பி ஒவ்வொரு 12 ஆண்டிற்கு ஒரு முறை அதை புதுப்பிக்க வேண்டும். மன்னருடைய உடைய நாடகத்தையும் பஞ்சவன்மாதேவி பார்ப்பதற்காக ராஜாராஜீயும் சீருடையாளும் அழைத்து சென்றனர். நாடகத்தைப் பார்த்த பஞ்சவன்மாதேவி ஏன் என்னுடைய கதையை எல்லாம் சேர்த்தீர்கள், என்று கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தார் .இது போதும்! இது போதும் !இந்நேரமே எனக்கு மரணம் வந்தால் போதும் என்று கூறினாள். ஏன் உங்களுக்கு கோயில் கும்பாபிஷேகம் பார்க்க வேண்டிய ஆசை இல்லையா?? இதில் வருவதைப் பார்த்ததுமே எனக்கு பார்த்தது போல் ஆகிவிட்டது.




உலோகர்கள் மன்னர் கொடுத்த சிற்ப வேலைகளை எண்ணி பேசிக்கொண்டிருந்தார்கள்.


மன்னர் மண் எடுக்கும் இடத்தில் ஒவ்வொரு குழுக்களாக முன்னேறி பேசிக்கொண்டிருந்தார். இருட்டிவிட்டது போதும் என்று பஞ்சவன்மாதேவி கூறிக் கொண்டிருந்தாள். பரசு அந்த மக்கள் கூட்டத்தில் முன்னேறி வந்துக்கொண்டிருந்தான். மண் மேட்டின் மீது மாதேவடிகள் நின்று யாரையோ தேடுவதை போல் இருந்தது. பஞ்சவன் மாதேவி அவளிடம் சென்று நலம் விசாரித்தார். ராஜேந்திரன் எங்கே ??மன்னனை கொல்வேன் என்ற ஆள் இங்கே அந்தண வேடம் போட்டு அந்த கூட்டத்தில் இருக்கிறான் என்று கூறினாள். அதைக்கேட்ட பஞ்சவன்மாதேவி விரைந்து சென்றாள். ஏதோ தவறாக நடக்கிறபோது என்று புத்திக்கு எட்டியது. எதிரில் ராஜேந்திரனை கண்டு கூறினாள். மெய்க்காவல் படையினரையும் மன்னரிடம் நெருங்க உத்திரவிடு. இருவரும் விரைந்து செல்ல அங்கே கூட்டம் அதிகமானது.


பரசு மன்னரின் முன் நின்று என்னை யார் என்று தெரிகிறதா? என்று கேட்டான். மன்னர் தெரியவில்லை என்று நகர்ந்து விட்டார். மீண்டும் சென்று என்னைத் தெரியவில்லையா ??என் குலத்தை அழித்த உனக்கு என்னை தெரியவில்லையா என்று கத்தினான். சக்கரத்தை ஒரு கல்லில் தேய்த்து மன்னர் மீது எறிந்தான். இடையே பஞ்சவன் மாதேவி விரைந்து முன் வந்து நின்றாள். அவளை தாக்கியது சுருண்டாள்.அனைவரும் அவனை விரட்டிப்பிடித்து நொறுக்கி அடித்தனர்.பஞ்சவன் மாதேவி வலியில் துடித்தாள். உடனடியாக ஆதுரசாலை கொண்டு செல்லப்பட்டாள். நெடியை பார்த்தால் பாஷா கல் விஷத்தை கொண்டு தாக்கியது போல் தெரிகிறது. கண்டிப்பாக அவனிடம் அந்த கல் இருந்திருக்கும். இந்த விஷத்தை விஷத்தால் தான் முறிக்க முடியும் போய் அதைத் தேடுங்கள் என்று கூறினார் வைத்தியர்.


உயிருக்கு உத்திரவாதம் இல்லை, அவர் வயதானவர் போல் மாறலாம். எது வேணாலும் நடக்கலாம் ஆனால் இளம் வயதாக இருப்பதால் தாக்குப் பிடிப்பார் என்று கூறினார். ராஜேந்திரன் விரைந்து சென்றான் அது விஷம் என்பதால் கையில் படாமல் குச்சியில் குப்பை போலிருந்த அவன் உடலைத் தேடினார்கள். கடைசியில் கிடைத்தது கல். அதை அரைத்து அவளுக்கு கொடுத்தார்கள்.


அருண்மொழி விரைந்து வந்தான் அவன் சம்பந்தமாக 6 சேர அந்தணர்களையும் கைது செய்துள்ளோம் என்று கூறினான். இவ்வளவு எளிதாக ஊடுருவி உள்ளான் இனிமேல் என்ன பிரயோஜனம் ஒன்றுமில்லை என்றும் மன்னர் கோபப்பட்டார். அதற்கு உங்களுடைய தவறும் இருக்கு நாங்கள் எவ்வளவு பாதுகாப்பு கொடுத்தாலும் நீங்கள் மக்களிடையே மிகவும் சகஜமாகப் பழகுரீகள். ஓ!! நான் தான் காரணமா?? என்று கத்தினார். பஞ்சவன்மாதேவிக்கு ஒன்றும் ஆகாது நீங்கள் அமைதியாக அரண்மனைக்கு செல்லுங்கள் என்று அனுப்பி வைத்துவிட்டார் அனைவரையும், மூவேந்தர் வேளாளரை கோயில் பொறுப்பை ஏற்கும்படி கூறிவிட்டார்.


ஆதுர சாலையில் உணவருந்தி அமைதியாக அமர்ந்திருந்தார். மருத்துவர் வந்து அவருடைய நாடி துடிப்பு குறைகிறது என்று வருத்தப்பட்டார். மன்னர் அமைதியாக பஞ்சவன்மாதேவியின் அருகில் அமர்ந்து .நீ இல்லையேல் என்னுடைய மரணம் அமைதியாக இருக்காது என்னை விட்டு நீ எப்படி செல்வாய்?? எனக்கு பல மனைவிகள் இருந்தாலும் நான் உன்னை காதலித்து மணந்தேன். அந்த எமனிடம் போட்டி போடு என் கணவனுக்காக நான் போக வேண்டும் என்று சண்டை போடு. கண்ணீர் மல்க தேவாரப் பாடலைப் பாடினார். பார் !!இங்கிருந்தே கோபுரத்தை விமானத்தின் அழகை பார்!! இதை கண்டுகளிக்க நீ வேண்டாமா?? சில மணி நேரங்கள் இருந்துவிட்டு வெளியே சென்றுவிட்டார் ,உறங்கினார் . வைத்தியர் வியந்தார் என் சிவனே இவரல்லவா கடவுள், மாதேவி உடைய நாடித் துடிப்பும் சீரானது.இளமையாக இருக்க மாட்டார் முதியவர்போல் இருப்பார் . உயிரோடு இருந்தால் எனக்கு போதும் என்று கூறி விட்டார் மன்னர். இளம் வயதாக இருந்ததனால் தாங்கிக் கொண்டார் என்று கூறினார் வைத்தியர்.


அனைவரும் வைத்தியரை பாராட்ட இதற்கு காரணம் மன்னரே!! என்று அவர் கூறினார். என்னை ஆட்டி பார்க்கிறார்கள் என்னுடைய மகன் ஆட்சி மிக ஆவேசமாக இருக்கும் .அந்த சேரர்கள் எப்படி பாடுபடுகிறார்கள் என்று பாருங்கள் !!பாண்டியர்களாவது மொழியியல் சேர்ந்து இருக்கிறார்கள் இவர்கள் வேற்று மொழியில் இருப்பதால் இத்தனை வருடங்கள் அதை மனதில் வஞ்சம் எண்ணி அலைகிறார்கள். பஞ்சவன்மாதேவி அரண்மனைக்கு அழைத்து செல்லப்படுகிறார் சில தினங்கள், மன்னர் அருகிலிருந்து உபசரித்துக் கொள்கிறார். தோல் இல்லையே, பல்,முடியில்லையே என்று வருத்தப்படாதே அது எனக்கு முக்கியம் அல்ல!! நீ தான் முக்கியம் என்று மன்னர் பஞ்சவன்மாதேவியிடம் கூறிவிடுகிறார். வேளாளரால் பார்த்துக் கொள்ள முடியவில்லை அங்கு கோயில் வேலை நின்றுவிட்டது. உன்னை பார்த்துக்கொள்ள உன் சகோதரிகள் இருக்கிறார்கள் என்று கூறிவிட்டு கோயிலுக்கு கிளம்பிவிட்டார்.


மண் அப்புறப்படுத்தும் வேலையை நின்றுபோய் மக்கள் யாரும் இல்லை.பாண்டிய வீரன் மட்டும் மண்ணள்ளி கொண்டிருந்தான் ஏன் ஊருக்கு செல்ல வில்லையா என்று கேட்டார் மன்னர். நான் ஒரு கருவறை சிற்பி என்னுடைய வேலை இதுதான் .இங்கு கோயில் கட்டும் இடத்தில் வேலை செய்வேன் .அடுத்து ராஜேந்திரன் கட்டும் கோயிலில் ஈடுபடப் போகிறேன் சாகும்வரை எனக்கு இது மட்டும் தான் தெரியும் என்று கூறினான். மன்னர் அதைக் கண்டு வியந்து . நான் கோயில் கட்டியும் எனக்கு அமைதி இல்லை மனதில்,கருவறையில் சென்று புலம்பினார். மூவேந்தர் வேளாளர் மன்னரிடம் சென்று நீங்கள் இப்படி புலம்ப தேவையில்லை உங்களுடைய அடுத்த தலைமுறைகள் மிக சிறப்பாக இருக்கும் என்று கூறினார். அவர் கூறிய வார்த்தைகளில் உற்சாகப்பட்ட மன்னர் நன்றி சொல்லிவிட்டு ராஜாராஜீ இயற்றிய நாடகத்தை இங்கே நடத்த ஏற்பாடு செய்தார். மக்கள் ஊரங்கும் இருந்து அதை பார்க்க குவிந்தனர் மண் எடுக்கும் வேலையும் எளிதில் முடிந்தது.


கும்பாபிஷேகத்திற்கு நாள் பார்க்கப்பட்டது .அதற்காக ஹோமங்கள் வளர்க்கப்பட்டன. வேதம் தவிர்த்து, கணக்கு வேலை பார்த்து, இப்பொழுது உணவு தொழிலும் ஆரம்பித்து விட்டீர்களா?? என்று தஞ்சை அந்தணர்கள் கேவலப் படுத்தினர்.


மருவூர் அந்தணர்கள் மன்னரைப் பார்க்க வந்தனர் மீண்டும் கங்கை அதை தாண்டி செல்ல போகிறோம் என்று கூறினார்கள். மீண்டும் அவ்வளவு தொலைவு பயணப்பட போகிறீர்களா?? என்று மன்னர் ஆச்சரியத்துடன் கேட்டார். நீங்கள் அழைக்காமல் பயத்துடன் வந்தோம். அந்தப் பயணம் எங்களுக்கு துணிவையும் தெளிவையும் கொடுத்தது .இப்பொழுது 40 பேர் எங்களுடன் வர இருக்கிறார்கள் அதில் வணிகர்கள், வேளாளர்கள் பெண்களும் உள்ளனர் . மன்னர் பெண்களுமா??ஆண்களால் முடியும் என்றால் பெண்களால் முடியாதா?? நடந்துவர ஆர்வமாக உள்ளார்கள். முதல் பயணம் ராமேஸ்வரம் வரை அது வெற்றி அடைந்தால், இதுவும் வெற்றி அடையும் .கங்கை நீர் கொண்டு வந்து ராமேஸ்வரத்தில் அபிஷேகம் செய்யப் போகிறோம் .அதுமட்டுமில்லாமல் கங்கை புகழ் போல், காவிரி புகழையையும் அங்கே போய் பரப்பப் போகிறோம்.


ராஜேந்திரரும் எங்களை அழைத்து மீண்டும் மேலை சாளுக்கியம் வரை செல்வீர்களா?? என்று கேட்டார். மறவர்களையும் எங்களுடன் அனுப்பி வைக்கப் போகிறார். அவருக்குப் பின்பு படை எடுத்துச்செல்ல எளிதாக இருக்கும் என்று கூறினார் .கங்கை தாண்டி காமாக்யாவை, சக்தி பீடம் பார்க்கப்போகிறோம் .இன்னும் ஐந்நூறு வருடங்கள் பிறகு சக்தியின் அதிகாரம்தான் வரப்போகிறது. மன்னர் அவர்களே ஆச்சரியத்தோடு பார்த்தார் ஏன் என்று கேட்டார் .இங்கே பெண்களை மதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் அதனால் கண்டிப்பாக சக்தியின் ஆட்சி வரும். அதனால் எங்களுக்கு வழிப் பயணத்திற்கு வண்டிகளும் சிலர் உதவிகளும் வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். மன்னர் அவர்களைப் பாராட்டி வழி அனுப்பி வைத்தார்.




நன்றி.

மீண்டும் உடையார் ஆறாம் பாகத்தில் சந்திப்போம்...


Click here for Udayar audio book part 6:2👇


Udayar audio book part 6:2




இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...