Friday, June 3, 2022

இந்த வாரத்தலைப்பு"கண்ணாடி" by Vidhya Nivash

 


கண்ணுக்கு தெரியாதை காட்ட நீ வந்தயோ

என்னை என் கண்ணுக்கு காட்டியது நீ அன்றோ

குழந்தையிலிருந்து உன்னை கண்டு நான் என்னை ரசிக்கிறேன்..

குழந்தைகள் வந்தவுடன் உன்னை காண நேரமில்லை அதனால் என் மகள் வருவாள் மகனும் வருவான் மீசை அரும்பும் போது..

கோபத்தில் உன் முகத்தை போய் கண்ணாடியில் பார் என்பர்..எனக்கு பாவமாய் காட்டுவாய்..

மகிழ்ச்சியில் துள்ளும்போது எவரும் சொல்வதில்லை...

மீண்டும் உன் முன் வருவேன் நான் மனதில் குழந்தையாகும் போது ..

காத்திரு கண்ணாடியே


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...