கண்ணுக்கு தெரியாதை காட்ட நீ வந்தயோ
என்னை என் கண்ணுக்கு காட்டியது நீ அன்றோ
குழந்தையிலிருந்து உன்னை கண்டு நான் என்னை ரசிக்கிறேன்..
குழந்தைகள் வந்தவுடன் உன்னை காண நேரமில்லை அதனால் என் மகள் வருவாள் மகனும் வருவான் மீசை அரும்பும் போது..
கோபத்தில் உன் முகத்தை போய் கண்ணாடியில் பார் என்பர்..எனக்கு பாவமாய் காட்டுவாய்..
மகிழ்ச்சியில் துள்ளும்போது எவரும் சொல்வதில்லை...
மீண்டும் உன் முன் வருவேன் நான் மனதில் குழந்தையாகும் போது ..
காத்திரு கண்ணாடியே

No comments:
Post a Comment