எது நமக்கு கிடைக்கும் என்பதை
நம்மால் கணிக்க முடியாது
அது வணங்கும் இறையானாலும்
விழுங்கும் இரையானாலும்
ஓர் உயிர் அடுத்த உயிரின் உணவு
அந்த உயிரும் அடுத்தவன் பிடியில்
தூண்டிலில் சிக்குவதும்
தப்பிப்பதும்
அதன் ஓட்டத்திலே!
எட்டாக்கனியல்ல ஏதும் முயற்சி கொண்டால்
புழுவானது மீனிடம் சிக்குவதும்
அதனின்று விலகி ஓடுவதும்
நீரின் ஓட்டத்தில் இருவரும்
எதிர்நீச்சல் போட்டாலும்
பசியாற்றுவதும்
பசியாறுவதும்
எவன் கையிலே?
தோற்பது எளிது வெற்றிக்கு முன்னால்
புசிப்பது எளிது
பசிக்கு முன்னால்
ருசிப்பதும் எளிது பசிக்கு பின்னால்
- Veena
தூண்டல் நிஜ உலகில் இருந்து
துண்டிக்க போடப்படும் முதல்
துண்டு சீட்டு..
முதலில் ஈர்க்கப்பட்டு,
கடைசியில் உயிரை காக்க
உயிரை விடுவாய்!
- Vidhya

No comments:
Post a Comment