Monday, June 16, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


எது நமக்கு கிடைக்கும் என்பதை 

நம்மால் கணிக்க முடியாது 

அது வணங்கும் இறையானாலும் 

விழுங்கும் இரையானாலும்


 ஓர் உயிர் அடுத்த உயிரின் உணவு

அந்த உயிரும் அடுத்தவன் பிடியில்

தூண்டிலில் சிக்குவதும் 

தப்பிப்பதும் 

அதன் ஓட்டத்திலே!


 எட்டாக்கனியல்ல ஏதும் முயற்சி கொண்டால்

புழுவானது மீனிடம் சிக்குவதும் 

அதனின்று விலகி ஓடுவதும்

நீரின் ஓட்டத்தில் இருவரும்

எதிர்நீச்சல் போட்டாலும்

பசியாற்றுவதும்

பசியாறுவதும்

எவன் கையிலே?


 தோற்பது எளிது வெற்றிக்கு முன்னால்

புசிப்பது எளிது

பசிக்கு முன்னால் 

ருசிப்பதும் எளிது பசிக்கு பின்னால்

- Veena 

தூண்டல் நிஜ உலகில் இருந்து

 துண்டிக்க போடப்படும் முதல்

 துண்டு சீட்டு..

முதலில் ஈர்க்கப்பட்டு,

 கடைசியில் உயிரை காக்க

 உயிரை விடுவாய்!

- Vidhya 


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...