Monday, June 2, 2025

படமும் கருத்தும் by Winmeengal

 


Veena Shankar: 

குடும்பத்தோடு உல்லாச பயணம் வானில்

மனித நிழலோடு பேச இயலாத நிலையில் 

வானில் மேக அலையில் ஓர் 

ஆலோசனையா?

குதூகலமா?

பட்டிமன்றமா?

விளங்கவில்லை எவருக்கும்

ஆளுக்கொரு கற்பனையை மனதில் ஏற்றி

வடிவங்கள் சிறப்பாய் கொடுத்து

எழுத்தால் வரிகள் போல் கவிதை புனைந்து

கண்ட காட்சிக்கு

உயிர் தரும் 

செயலும் சிறப்பே!


Shanmugapriya:

 எல்லோருக்கும் இரவும் நிலவும் 

பாலும் தேனுமாய் இருக்காது 


பசியால் படுத்தவனுக்கு 

பாதி இரவில் விழிப்பு !!!


பாதசாலையை படுக்கையறை ஆக்கியவனுக்கு 

எப்பொழுது விலை உயர்ந்த

வாகனம் வரும் என்ற தவிப்பு !!!


கேஸ் கிடைக்காத காவலாளிக்கு 

இரண்டாம் காட்சி பார்த்துவிட்டு

வருபவர்களிடம் வம்பு இழுத்து 

கேஸ் எழுதுகையில்

சிக்கிக் கொண்டவனின் பரிதவிப்பு !!!


பாதசாலையில் வசிக்கும் 

புதுமண தம்பதிக்கு பக்கத்தில் 

இருக்கும் பூங்கா எதிரின் தேனீர் கடை 

இரவு பன்னிரண்டு வரை 

திறந்திருக்கும் என்ற தவிப்பு !!!


எல்லோருக்கும் இரவும் நிலவும் 

பாலும் தேனுமாய் இருக்காது


--பிரியா

அவளுக்கு என்று ஒன்று

 உண்டென்றால் அது இரவில்

 நிலவொடு தனிமையில்

 புலம்புவது,அதையும்

 சூறையாடிய அடுக்குமாடி

 கட்டடங்களும், கைப்பேசியும்

 ஒன்று நிலவை மறைக்க

 மற்றொன்று அனைத்தையும்

 துண்டித்தது !

- Vidhya 

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...